தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.
ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.
உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.
அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.
எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.
கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.
தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.
ஜோதிகாவின் இந்த பேச்சு இந்துக்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
அகில உலக ஆன்மிக இந்து மத கட்சி தலைவர் ஜெயம் ஜேஎஸ்கே கோபியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் மருத்துவமனை கட்டுங்கள் என ஜோதிகா சொல்லியிருக்கலாம். அதை விடுத்து கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் என ஏன் சொன்னார்?
ஏற்கெனவே இந்துக்களை மதம் மாற்ற ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறது. எனவே ஜோதிகா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்து தமிழர் கட்சித் தலைவர் இராம. ரவிக்குமார் என்பவர் கூறியுள்ளதாவது…
அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஜோதிகா. இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களை கட்ட வேண்டாம் என அவர் சொல்லவில்லை.
ஆனால் இந்து கோயிலை மட்டுமே சொன்னது தவறு. கலை கூத்தாடி ஜோதிகா தமிழர் கட்டிடக் கலையை கொச்சைப்படுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Jyothikas Speech Controversy She should apologise for hurting Hindu beliefs