வாம்மா விஜயலட்சுமி…; ஜோதிகாவை ஜோராக வரவேற்கும் ரசிகர்கள்

வாம்மா விஜயலட்சுமி…; ஜோதிகாவை ஜோராக வரவேற்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothika promises a lot of fun as RJ Vijayalakshmi in Kaatrin Mozhi teaserவித்யாபாலன் நடித்து ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தும்ஹாரி சுலு படத்தை காற்றின் மொழி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார் ராதா மோகன்.

வித்யாபாலன் வேடத்தில் ரேடியோ ஜாக்கியாக ஜோதிகா நடித்துள்ளார்.

அவரது கணவராக விதார்த் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நடித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம், அடுத்த மாதம் அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்பட டீசரை வெளியிட்டுள்ளனர்.

ஹலோ எப்.எம்.-ல் வேலை பார்க்கும் ஆர்.ஜே., விஜயலட்சுமியாக ஜோதிகா நடித்துள்ளார்.

ஒரு இல்லத்தரசியாகவும் அதேசமயம் தனக்கே உரித்தான அதே பழைய குறும்புத்தன பெண்ணாகவும் ஜோதிகா அசத்தியுள்ளார்.

இது பெண்களை மட்டுமில்லாமல் ஆண்களையும் கவர்ந்துள்ளது.

Jyothika promises a lot of fun as RJ Vijayalakshmi in Kaatrin Mozhi teaser

 

https://www.filmistreet.com/video/kaatrin-mozhi-teaser/

காதலன் காந்தி தற்கொலை; கொசு மருந்து குடித்து நிலானி தற்கொலை முயற்சி

காதலன் காந்தி தற்கொலை; கொசு மருந்து குடித்து நிலானி தற்கொலை முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress nilaniசின்னத்திரை நடிகை நிலானி மற்றும் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள்.

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் காந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை பார்த்தோம்.

எனவே போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவானார்.

பின்னர் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் நடிகை நிலானி.

அங்கு உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்தார்.

மேலும் காந்தி தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், கூறினார்.

இந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரது வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக ஆண் தேவதை அமையும்.. : தாமிரா

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக ஆண் தேவதை அமையும்.. : தாமிரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aan devathaiஅப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி. அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார்.

இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் “ஆண் தேவதை” படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது….

“படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த ஆண் தேவதையை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றி, குறிப்பாக உலகமயமாக்கல், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இந்த படம் பேசுகிறது.

ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றியை அடைகிறது. ஒன்று வெற்றிகரமான ஃபார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றியை அடைகிறது.

இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ஆண் தேவதை வெற்றியை பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சமுத்திரகனியின் நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு மேதை, அவரது கவர்ந்திழுக்கும் திரை ஆளுமையால் நம் கவனத்தை அவர் பக்கம் திருப்பி விடுவார்.

ரம்யா பாண்டியன் அவர் கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. படம் வெளியான பிறகு மக்களிடம் இருந்து அதற்காக பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆண் தேவதை படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கண்ணே கலைமானே படம் எனக்கு கிடைத்த பரிசு; உற்சாகத்தில் உதயநிதி!

கண்ணே கலைமானே படம் எனக்கு கிடைத்த பரிசு; உற்சாகத்தில் உதயநிதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinஉலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது.

அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம்.

அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை.

உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றிய எந்தவொரு பெரிய ஆச்சரியமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகிய படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்த பரிசு.

பலரும் கூறியதுபோல, சீனு ராமசாமி சாரின் திரைப்படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும், அவை நல்ல வரவேற்பை பெறும்” என்கிறார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப் மற்றும் வெற்றிக்குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா, சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்களின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த படத்தின் இசை இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிம்புவின் மாமியாரை மாற்றிய சுந்தர்.; குஷ்பூ இடத்தில் ரம்யா கிருஷ்ணன்

சிம்புவின் மாமியாரை மாற்றிய சுந்தர்.; குஷ்பூ இடத்தில் ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and ramya krishnanபவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’.

இதில் பவன்கல்யாணின் மாமியாராக நதியா நடித்திருந்தார்,

தற்போது இப்படத்தை தான் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார் சுந்தர். சி.

இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

நதியா நடித்த வேடத்தில் குஷ்பூ நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது குஷ்பூக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று ஜார்ஜியாவில் தொடங்கியது. செப்டம்பர் 27 ஆம் தேதி வரை அங்கே சூட்டிங் நடைபெற உள்ளதாம்.

ஒரு பாடல்காட்சியும், சேஸிங் காட்சியும் படமாக்கப்படவுள்ளது.

தற்போது பாடல் காட்சியின் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

என்.ஜி.கே. என்னாச்சு.? தயாரிப்பாளர் பிரபு மீது கடுப்பில் சூர்யா ரசிகர்கள்

என்.ஜி.கே. என்னாச்சு.? தயாரிப்பாளர் பிரபு மீது கடுப்பில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK postersஎஸ்ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. அதாவது நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கமே என்ஜிகே.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்க ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படம் ஆரம்பம் ஆகும் போது 2018 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப் போன பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

ரிலீஸாகாவிட்டாலும், படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்க படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் அப்படியே கிடப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணமோ..?

More Articles
Follows