*காற்றின் மொழி* ஷூட்டிங்கை முடித்துவிட்டு அன்பளிப்பு வழங்கிய ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காற்றின் மொழி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யுலில் முடித்தார் நாயகி ஜோதிகா.

ஜூன் 4ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஜூலை 25 ஆம் தேதியோடு தன்னுடைய பகுதி படப்பிடிப்பை முடித்துக்கொண்டார் ஜோதிகா.

தும்ஹாரி சுலு என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் காற்றின் மொழி.

ஹிந்தியில் தேசிய விருது பெற்ற வித்யாபாலன் நாயகியாக நடித்திருந்தார்.

ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ மொழி “ திரைப்படத்தின் இயக்குனர் ராதாமோகன் தமிழுக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக இயக்கியுள்ளார்.

ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா , விதார்த் , லட்சுமி மஞ்சு , மனோபாலா , குமரவேல் , உமா பத்மநாபன் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று படக்குழுவினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் எல்லோருக்கும் பட்டு சேலை மற்றும் வேஷ்டியை பரிசாக வழங்கிவிட்டு எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சிறப்பாக செயல்பட்ட இயக்குனர் குழுவுக்கு ஸ்பெஷல் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் ஜோதிகா.

பரிசுகளை பெற்ற படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி.

கடைசி நாள் படப்பிடிப்பன்று கேக் வெட்டும் போது நாயகி ஜோதிகா இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் சிறந்த யூனிட் .

மீண்டும் இயக்குனர் ராதா மோகன் யூனிட்டோடு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை இப்படம் தந்துள்ளது. மிகச்சிறந்த கதை , கதாபாத்திரம் என்று அனைத்தும் இப்படத்தில் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது சந்தோசம்.

பெண்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை தரும் படமாக இது இருக்கும். அந்த அளவுக்கு இப்படத்தில் பெண்களை உயர்வாக காட்டியுள்ளார்கள் என்றார்.

ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தந்த ஜோதிகாவுக்கு தயாரிப்பாளர் தனஞ்சயனும் , இயக்குனர் ராதாமோகனும் நன்றி கூறினார்கள்.
மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெறும்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்றது.

படத்தை ஆன் லைன் முறையில் எடிட் செய்ததால் உடனுக்குடன் படம் தயாராகி தற்போது டப்பிங்க்கு தயாராக உள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் டப்பிங் துவங்கும்.

அதே போல் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று வருகிற செப்டெம்பர் மத்தியில் சென்சார் செய்யப்பட்டு அக்டோபர் மாதம் பூஜை விடுமுறைக்கு வெளியாகும் என்கிறது படக்குழு.

மலையாள நடிகை ஸ்ரீதா சிவதாஸ் உடன் சந்தானம் டூயட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் பேய் ஹிட்டானது.

எனவே அதன் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை டைரக்டு செய்த ராம்பாலாவே இந்த பாகத்தையும் இயக்கி செய்கிறார்.

தில்லுக்கு துட்டு-2 படத்தை பற்றி டைரக்டர் ராம்பாலா :-

இந்த பாகம் ஜாலியான படைப்பாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் உள்ளன.

இந்த படம், கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது.

மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீதா சிவதாஸ்தான் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம்.

மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Kerala Actress Shritha Sivadas to romance with Santhanam for Dhillukku Dhuddu 2

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்தார் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த மெர்சல், தற்போது நடித்து வரும் சர்கார் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏஆர். ரஹ்மான் தான் இசை.

இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற/பெறும் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

மேலும் ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறார்.

இதை அவரே உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறாராம்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா தயாரித்த 36 வயதினிலே படம் தனக்கு திருப்புமுனையாக அமைந்த்து. தற்போது முதன்முறையாக சூர்யா படத்திற்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளதாக விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same time

Vivek Lyricist‏ @Lyricist_Vivek

Great to b penning for d Inspiring @Suriya_offl Sir for the 1st time.
Part of #Suriya38 2D s 36V gave me my 1st big break. Its always exciting 2 associate with @2D_ENTPVTLTD @gvprakash bro has given me a lovely tune.
Tks 2 him n #Sudha mam for dis movie. Wish She achieves Big

காலா இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குதிரை வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டாரின் கால்ஷீட்டுக்காக பலர் பல வருடங்களாக காத்திருக்க, கபாலி மற்றும் காலா என ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இயக்கி இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பா. ரஞ்சித்.

இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார்.

தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவையும் தயாரித்து வருகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதன் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் இவர்.

இப்படத்திற்கு குதிரை வால் என்ற பெயரையும் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இது வழக்கமான கதைக்களமாக இல்லாமல் 5 கதைகளை 5 இயக்குநர்களைக் கொண்டு இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதில் ஒரு கதையை மட்டும் ரஞ்சித்தே இயக்குவார் என கூறப்படுகிறது.

Kaala director Ranjith next movie titled Kuthirai Vaal

*ஆண் தேவதை* படத்தின் சென்னை-தமிழக உரிமைகளை கைப்பற்றிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ‘மாஸ்டர் பீஸ்’, ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்லது ‘பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்’ என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன.

சமகால பார்வையாளர்கள் “ஆண் தேவதை’ போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்களே பெரும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்போது “ஆண் தேவதை” தமிழ்நாடு திரையரங்க உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

“வழக்கமான கமெர்சியல் விஷயங்கள் இன்றி நல்ல தரமான திரைப்படங்களை தயாரிப்பது அல்லது வெளியிடுவது என்பது வெறும் சுய திருப்திக்காக செய்த காலங்கள் உண்டு.

ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறச் செய்கிறார்கள்” என்கிறார் “ஆண் தேவதை” தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ள New RSM ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எம். மாரிமுத்து.

அவர் மேலும் கூறும்போது, “ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, அல்லது நல்ல சமூக கருத்துக்களை பேசும் படங்களில் பங்கு பெறுவது என சமுத்திரகனியின் முயற்சிகளை பார்த்து எப்போதும் வியப்புடன் இருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தும் ‘நல்ல குடும்பத்தின் வெளிப்பாடு தான் நல்ல சமூகம்’ என்ற அவருடைய குறிக்கோளை நான் பாராட்டுகிறேன்.

வருங்கால தலைமுறை எவ்வாறு வளர வேண்டும் என அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள் தான் இன்றைய முக்கிய தேவை. ‘ஆண் தேவதை’ படத்தில் இயக்குனர் தாமிரா உருவாக்கிய நல்ல கருத்து, சமுத்திரகனியின் சிறப்பான நடிப்பால் கொண்டு சேர்க்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

மேலும் அவர் சிகரம் சினிமாஸ், தயாரிப்பாளர் பக்ருதீனை முழு மனதுடன் பாராட்டுகிறார். “புகழ்பெற்ற இயக்குனரான கே.பாலசந்தர் சாரின் உருவப்படத்துடன் உள்ள ‘சிகரம்’ ஸ்டுடியோ, வலுவான ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட மிகச்சிறந்த மரியாதையை அவருக்கு தர முடியாது” என முடிக்கிறார் மாரிமுத்து.

ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், மேலும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

‘உணர்வுப்பூர்வமான’ இசையை வழங்குவதில் பிரபலமான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சென்னை நகர உரிமையை SPI சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.

Aan Dhevathai movie Chennai theatrical rights bagged by SPI Cinemas

வஞ்சகர் உலகத்திற்கு யுவனை அழைத்து வந்த சாம். சி.எஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சிஸ் அவர்கள் மிக முக்கியமானவர்.

புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம்.

வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது.

இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.

யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார்.

விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yuvan shankar raja croon for Vanjargar Ulagam in Sam CS music

More Articles
Follows