மீண்டும் தேசப்பற்று கதையுடன் ஜிப்ஸி-யை எடுக்கும் ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோக்கர் படத்தை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜிப்ஸி’.

இதில் ஜீவா மற்றும் நடாஷா சிங் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜீன் 11ஆம் தேதி 12.01 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.

அதில் நாயகி இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறார்.

அப்படத்தின் போஸ்டரில் தேசப்பற்றை குறிப்பிடும் வகையில் இந்திய தேசிய கொடி இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் நம் நாட்டு நடப்புகளை அலசியிருந்தது. எனவே இந்த படமும் நம் நாட்டுக்கு தேவையான கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Jiivas next movie Gypsy First look released

உண்மையான மனிதர்களை கௌரவப்படுத்திய கோலி சோடா 2 படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2.

சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக்.

அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி.

சமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்பார். ஆனால் கதைக்கு ஏற்ற்வாறு பேச சுதந்திரம் கொடுத்தார்.

கோலி சோடா படத்தில் மார்க்கெட் ஃபைட் மாதிரி இந்த படத்திலும் ஒரு சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். கௌதம் மேனன் சார் இந்த படத்துக்குள் வந்த பிறகு படம் பெரிய படமாக மாறியது. என் சித்தப்பா லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸுக்கு நன்றி என்றார் வினோத்.

விஜய் மில்டன் என்னை நடிக்க கூப்பிட்டார், யாரெல்லாம் நடிக்கிறாங்கனு கேட்டேன். சமுத்திரகனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார்.

யாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரகனி. அவர் எனக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி.

இந்த படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம் என்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.

கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி.

கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம்.

நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு பொண்டாட்டி பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார்.

சமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

விளம்பரம் செய்யும் செலவை விட்டு விட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்கு தேவையான விஷயங்களை கொடுப்போம் என முடிவு செய்தோம்.

சென்னையில் சூர்யா அதனை தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகிறது. மதுரை காந்திமதி அம்மா, கோவையில் ராஜா சேது முரளி ஆகியோரை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.

நாங்கள் கோவையில் வீணாகும் உணவை வாங்கி, இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். தினமும் இந்த சாப்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நோட் புக் கொடுக்கிறோம்.

ஏழ்மையில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்.

கர்ப்பிணி பெண்களுக்கும் உதவிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல குறைந்த வண்டியை வாங்கி கொடுத்திருக்கிறோம் என்றார் ராஜா சேது முரளி.

வடலூரில் ஒரு சில அன்பர்கள் தேவையான உதவியை செய்கிறோம், நீங்கள் உணவு அளிப்பதை நிறுத்தக் கூடாது என்று ஊக்குவித்தனர். அதை பார்த்த நிறைய பேர் உதவி செய்கிறார்கள். வள்ளலார் ஆசியோடு இதை செய்து வருகிறோம் என்றார் காந்திமதி அம்மா.

நடிகர்கள் சமுத்திரகனி, இசக்கி பரத், நாயகிகள் சுபிக்‌ஷா, கிரிஷா குரூப், கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி, பசங்க கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Suriya Flag Off Gst Vandi for Golisoda 2 Promotions

ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக்கை நள்ளிரவில் வெளியிடும் ராஜு முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய தரமான படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜு முருகன்.

இவர் தற்போது ‘ஜிப்ஸி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (ஜீன் 11ஆம் தேதி) 12.01 வெளியிடவுள்ளனர்.

ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Jiivas Gypsy first look will be released on 11th June 2018

போட்டியின்றி நடிகர் சங்கத்தின் புதிய தலைவராகிறார் மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள நடிகர், நடிகைகள் சங்கம் கேரளாவில் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதன் தலைவராக மலையாள காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் பதவி வகித்து வருகிறார்.

மேலும் இவர் கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 17 வருடங்களாக இவர் தலைவர் பதவியில் இருக்கிறார்.

இவரின் உடனடி நடவடிக்கைகள் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருவதால் இந்த பதவியில் இவர் இத்தனை வருடங்களாக இருந்து வருகிறார்.

தற்போது புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லையாம்.

எனவே விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்ப வில்லை எனவும் இன்னசென்ட் அறிவித்துள்ளார்.

எனவே மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மோகன்லால், அல்லது மம்மூட்டி ஆகியோரில் ஒருவர் புதிய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற மலையாள திரையுலகினர் விரும்புகின்றனர்.

இதனையடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை இவருக்கு எதிராக யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதால் இவரே நடிகர் சங்கத் தலைவராகவுள்ளார்.

விரைவில் கூடவுள்ள பொதுக்குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

Mohanlal to take charge as president of AMMA

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கும் தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 62வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடிக்க, அரசியல்வாதிகளாக ராதாரவி மற்றும் பழ. கருப்பையா நடித்து வருகின்றனர்.

இப்படம் சமகால அரசியலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட 75 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள சூட்டிங்கை வருகிற ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்கிறது தளபதி 62 படக்குழு.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Vijay going to fly US soon for his Thalapathy 62

பாலா இயக்கத்தில் காலா பட நாயகி; விக்ரம் மகனுடன் நடிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ராமன் அப்துல்லா என்ற படத்தில் அறிமுகமானார் ஈஸ்வரி ராவ்.

அதன்பின்னர் குரு பார்வை, சிம்மராசி, விரும்புகிறேன், சுள்ளான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதில், விரும்புகிறேன் படத்தில் நடித்தற்காக தமிழக அரசின் சிறந்த கேரக்டர் நடிகைக்கான விருதை பெற்றார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் ஈஸ்வரிராவ்.

இவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இந்த காலா நாயகி.

Kaala fame Eswari Rao joins with Bala in Varma movie

More Articles
Follows