தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பஙகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இவர்களின் வருகை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10000 மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று ஜீன் 6ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு நடிகர் விஜய் தூத்துக்குடி சென்றுள்ளார்.
அங்கு ஒரு டூவிலரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதளி அளித்து ஆறுதல் தெரிவித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
இதற்குமுன் நீட் தேர்வு பிரச்சினையால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த போதும் இதுபோல் நள்ளிரவில் சென்று அந்த குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
jay met the families of Sterlite victims in Tuticorin and helped them