மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jani Chiragjaniகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இதில் சூர்யாவுடன் சாயிஷா, மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரும், பாலிவுட் நடிகருமான சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறாராம்.

இன்று சிரக் ஜானி பிறந்த நாள் என்பதால் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

சிரக் ஜானி நடிக்கும் முதல் தமிழ் படம் ‘சூர்யா-37’ என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்… சிம்புவுக்கு *பெரியார் குத்து*; டி.ஆருக்கு *டாஸ்மாக் பூட்டு*

விரைவில்… சிம்புவுக்கு *பெரியார் குத்து*; டி.ஆருக்கு *டாஸ்மாக் பூட்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRரமேஷ் தமிழ்மணி இசையில், சிம்பு பாடி ஆடி நடித்துள்ள ‘பெரியார் குத்து” பாடல் ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது.

சிம்புவை தொடர்ந்து தற்போது அவரது அப்பா டி. ராஜேந்தரும் ஒரு பாடலை வெளியிடவுள்ளார்.

தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்-கபிலன்வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார்.

கடந்த ஆண்டு கபிலன்வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார்.

மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிடவிருக்கிறார்கள்.

பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.

Breaking அரசியல் முதிர்ச்சியில்லாத ரஜினி..; அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

Breaking அரசியல் முதிர்ச்சியில்லாத ரஜினி..; அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and jayakumarகலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் கொண்டு பேசும் போது…

கருணாநிதி இறுதி அஞ்சலியில் முதல்வர் கலந்துக் கொள்ள வில்லை என்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது…

ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது; ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை.

மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது.” என பேசினார்.

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாசர்-ராதாரவி-விஷால் பேச்சு

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாசர்-ராதாரவி-விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nassar Radharavi and Vishal speech Kalaignar Karunanidhi Memorial Gathering by FEFSIதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பிறகு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S. துரைராஜ், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாசர் பேசும்போது…

ஒரு தனி மனிதரின் ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது, தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார்.

பாடம் நடத்தியிருக்கிறார் என்பதை விட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம். இவ்வாறு பேசினார்.

எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,

அதுபோல இந்த காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால் தான் படம் பார்க்கவே வருவார்கள்.
இறுதி காலத்தில் ராமானுஜர் அவர்களுக்கும் வசனம் எழுதினார்கள், கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர் என்று கூறினார்.

விஷால் பேசும்போது,

மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும், கலைஞர் அவர்களை மறக்க முடியாது.

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

ராதாரவி பேசும்போது,

கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள் தான் என்பதை பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக்கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும் வரை கலைஞர் இறக்க மாட்டார் என்றார்.

அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இடம் காமராஜர் அரங்கம்,சென்னை

Nassar Radharavi and Vishal speech Kalaignar Karunanidhi Memorial Gathering by FEFSI

அதிமுக விழாவில் கருணாநிதி படம்; ரஜினி கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா?

அதிமுக விழாவில் கருணாநிதி படம்; ரஜினி கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunanidhi Photo to be placed at ADMK Annual celebration Rajini request to CMகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது…

கலைஞர் அவர்களால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள்.

யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது, அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும்.

அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார்.

அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.” என்று பேசினார்.

இந்த தற்போது ஆளும் அதிமுக அரசு ஏற்றுக் கொள்ளுமா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை ஏற்பாரா? என்பதை பார்ப்போம்.

Karunanidhi Photo to be placed at ADMK Annual celebration Rajini request to CM

கலைஞரை பார்க்க வராத தமிழக மக்கள் மீது ரஜினி கோபம்

கலைஞரை பார்க்க வராத தமிழக மக்கள் மீது ரஜினி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini angry on Tamilnadu Peoples for less crowd at Karunanidhi funeralகலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ரஜினிகாந்த் பேசும்போது….

தமிழ் சினிமாவில் கலைஞரின் பயணம் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தின் இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியவர் கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படத்தில், சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர் தான்.

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி கேட்டவுடனே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவருடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. டிவியில் பார்த்தேன் மக்கள் கூட்டம், இருந்தாலும் பரவாயில்லை என்று சென்றேன்.

ஆனால் என்னால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையிலேயே காலையில் சென்றேன்.

பல ஆயிரம் கூட்டங்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள், அவர்களுக்காக எவ்ளோ உழைத்திருக்கிறார்.

தமிழக மக்கள் மீது கோபம் வந்தது. ஆனால் அதன் பிறகு அலை அலையாய் கட்டுகடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்தேன். தமிழக மக்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள்.” என உருக்கமாக பேசினார்.

Rajini angry on Tamilnadu Peoples for less crowd at Karunanidhi funeral

kalaignar karunanidhi memorial gathering

 

More Articles
Follows