சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் போனி கபூர் மகள்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் போனி கபூர் மகள்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லிங்குசாமியின் ‘பையா 2’ மூலம் ஜான்வி கோலிவுட்டில் நுழையப் போகிறார் என்று வதந்திகள் வந்தன. ஆனால் போனி கபூர் தனது மகள் இதுவரை எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தினார். இப்போது, ​​​தென்னிந்திய சினிமாவில் பிரபல டோலிவுட் இயக்குனர் கொரடலா சிவாவுடன் ‘ஆர்ஆர்ஆர்’ ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.

ஜான்வி இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ‘NTR30’ படத்தில் தாரக்கிற்கு ஜோடியாக ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Janhvi Kapoor to make her South Indian debut opposite with Junior NTR

தங்கர் பச்சான் படத்திற்கு கை கொடுத்த கலைஞானி கமல்ஹாசன்

தங்கர் பச்சான் படத்திற்கு கை கொடுத்த கலைஞானி கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”.

பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமலஹாசன் இன்று வெளியிட்டார்.

கமலஹாசன் அவரது அலுவலகத்தில் இன்று இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார்.

படம் குறித்து நடிகர் கமலஹாசன் இயக்குநர் தங்கர் பச்சானிடம் கூறுகையில்…

தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.

விரைவில் படத்தை காட்டுங்கள் என்றார். மேலும் , இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மண்சார்ந்த மென்மையான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை பணிகளை செய்கிறார் . விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள் :-
பாரதிராஜா
அதிதி பாலன்
கௌதம் வாசுதேவ் மேனன்
யோகி பாபு
மஹானா
சஞ்சீவி
எஸ்.ஏ.சந்திர சேகர்
ஆர்.வி.உதயகுமார்
பிரமிட் நடராஜன்
டெல்லி கணேஷ்

தொழில்நுட்ப வல்லுநர்கள்:-
இயக்குநர்: தங்கர் பச்சான்
இசை: GV.பிரகாஷ்
பாடல் வரிகள்: வைரமுத்து
ஒளிப்பதிவாளர்: N.K.ஏகாம்பரம்
எடிட்டிங்: பி.லெனின்
கலை இயக்குனர்: மைக்கேல்
செட் டிசைன்: முத்துராஜ்
நிர்வாக தயாரிப்பாளர்: வராகன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு: VAU Media
தயாரிப்பாளர்: D.துரை வீரசக்தி

Kamal Haasan unveils the First Look of Thankar Bachan’s Karumegangal Kalaiginrana’

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதிக் கட்ட சூட்டிங் அப்டேட்

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதிக் கட்ட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு அவினாஷ் கொல்லா நிர்வாக தயாரிப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டில் வெளியான பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 5 ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமத்தில் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். இதில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது.

டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃப்ரீ லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1970களில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த பிரபல திருடனின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கெட்டப் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். நடிகர் இதுவரை இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாக இருப்பதால், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Final shooting update of Ravi Teja starrer ‘Tiger Nageswara Rao’

நூல் இழையில் உயிர் தப்பிய ஏ ஆர் ரஹ்மானின் மகன். வைரலாகும் புகைப்படம்..

நூல் இழையில் உயிர் தப்பிய ஏ ஆர் ரஹ்மானின் மகன். வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் ரஹ்மான் மகன் அமீன் தனது Insta வில் , “இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் உள்ளதற்கு எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள், ஆன்மீக ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன், நான் நடுவில் இருந்தபோது ஒரு கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரவிளக்குகள் கீழே விழுந்தன. எங்கள் தலையில் விழுந்திருக்க வேண்டியது. அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.” என பதிவிட்டுள்ளார்.

A.R. Rahman’s son A.R. Ameen has a lucky escape from a freak accident

இசை இல்லைன்னா பத்து பைசா தேறாது.: எழுத்தாளர் அஜயன் பாலா அதிரடி

இசை இல்லைன்னா பத்து பைசா தேறாது.: எழுத்தாளர் அஜயன் பாலா அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவான சைக்கோ திரில்லர் படம் ‘மெமரீஸ்’.

வெற்றி & பார்வதி அருண் இணைந்துள்ள இந்த படம் மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஷிஜு தமீன்ஸ் பேசியதாவது…

இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் “மெமரீஸ்”. இது எனது முதல் படம். எங்கள் படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு தேவை நன்றி.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியதாவது…

இப்படம் எனது இரண்டாவது படம். க் எனது முதல் படம். இப்படம் சீட் எட்ஜ் திரில்லர். நாங்கள் எல்லோரும் புதியவர்கள், மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி

வசனகர்த்தா அஜயன் பாலா பேசியதாவது…

“லாக்டவுன் முன்பாக இயக்குநர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள் அவர்கள் கதை சொன்ன போது நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது.

இதுபோன்ற படங்களுக்கு இசை தான் முக்கியம்.. இசை இல்லைன்னா பத்து பைசா தேறாது.

இயக்குநர்கள் ப்ரவீன் ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள்.

இது நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். வெற்றி திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்.” என்று பேசினார்.

மெமரீஸ்

Music is important for Memories kind of movies says writer Ajayan Bala

‘மெமரீஸ்’ பார்க்கும் போது நீங்களே கேரக்டராக மாறிடுவீங்க..; டபுள் டைரக்டர்ஸ் கான்ஃபிடன்ட்

‘மெமரீஸ்’ பார்க்கும் போது நீங்களே கேரக்டராக மாறிடுவீங்க..; டபுள் டைரக்டர்ஸ் கான்ஃபிடன்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவான சைக்கோ திரில்லர் படம் ‘மெமரீஸ்’.

வெற்றி & பார்வதி அருண் இணைந்துள்ள இந்த படம் மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இயக்குநர் ப்ரவீன் பேசியதாவது…

மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்.

இயக்குநர் ஷியாம் பேசியதாவது…

நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார்.

வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி.” என்றார்.

மெமரீஸ்

You will became characters while watching Memories says directors

More Articles
Follows