ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி; பப்ளிக்ஸ்டார் துரை சுதாகருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம்.

இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.

பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

Jallikattu protest and Bigg Boss fame Julie entering into Cinema

ஏழையாக இருந்து முன்னேறிய ரஜினி ஏழைகளை ஏமாற்றமாட்டார்.. : நண்பர் ராஜ்பகதூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அவரது நெருக்கமான நண்பர் ராஜ் பகதூர் தன் அண்மை பேட்டியில் கூறியுள்ளதாவது…

நானும் ரஜினியும் ஒரே பள்ளியில் படித்து, ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.

படித்து முடித்து வேலை செய்யும்போது கூட ஒரே பஸ்ஸில் நான் டிரைவராகவும், ரஜினி கண்டக்டராகவும் பணியாற்றினோம் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன்.

பல நாட்கள் இரவு பகலாக நிறைய விஷயங்களை விரிவாக பேசியிருக்கிறோம்.

குறிப்பாக அரசியல் பற்றி நிறைய பேசி இருக்கிறோம்.

கடந்த மே மாதம் சந்தித்தபோது சுமார் 5 மணி நேரம் அரசியல் முடிவு குறித்து பேசினார். தீவிரமான மன நிலையில் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.

நான் கேட்டபோது, ‘‘ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் போக்கு முற்றிலும் மாறிவிட்டது.
கருணாநிதியும் களத்தில் செயல்படும் நிலையில் இல்லை. தமிழக மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்’’ என சொன்னார்.

ஒரு கட்டத்தில், ‘‘நான் அரசியலில் வரட்டுமா? உன்னுடைய கருத்தைச் சொல்’’ என்றார். அதற்கு நான், ‘‘என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தும் ஒன்றேதான்.

கண்டிப்பாக நீ (ரஜினி ) அரசியலில் இறங்க வேண்டும். தமிழக மக்களும், ரசிகர்களும் உன்னிடம் (ரஜினி ) அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நீ (ரஜினி ) எந்த கட்சியிலும் சேராமல், தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்’’ என அவரது கையை பிடித்துக்கொண்டு கூறினேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மீண்டும் அதேபோல பேசினார். கட்சி, சின்னம் குறித்து முடிவெடுத்ததாக சொன்னார்.

அரசியல் வருகை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். இப்போது ரஜினி அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நிச்சயமாக ரஜினியால் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் மாற்றம் வரும்.

ஏனென்றால் எனக்கு ரஜினியை நன்றாக தெரியும். அவர் ஒன்றை செய்கிறார் என்றால், அதனைப் பற்றி நன்றாக யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார்.

ரஜினி தமிழர்களை ஏமாற்ற மாட்டார். கட்டாயம் தனிக் கட்சி தொடங்கி, தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்.

ஏழையாக இருந்து முன்னுக்கு வந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். மாதிரி ஏழைகளுக்கு நல்லது செய்வார்.

ரஜினியிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது வறுமையை போக்க நல்ல வழி செய்வார்.

மக்களுக்கு என்ன தேவையோ, பெண்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக செய்வார். அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாதவர் என்பதால் கட்டாயம் ஊழல் செய்யமாட்டார். யாருக்கும் கெடுதல் செய்யமாட்டார்.

ரஜினியின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? அரசியல் தெரியுமா? பொருளாதாரம் தெரியுமா? பூகோளம் தெரியுமா? என கேட்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு பதிலை தருகிறேன்.

எது நல்லது, எது கெட்டது என ரஜினிக்கு தெரியும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால்,” ரஜினி வழி, தனி வழி தான்” இப்போது சொன்னால் புரியாது. போகப் போக தெரியும். இவ்வாறு ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.

Rajini friend RajBahadur shares about Rajinis Political Entry

விக்ரமின் தந்தையும் கில்லி நடிகருமான வினோத்ராஜ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் தந்தை வினோத் ராஜ் மரணம் . (வயது 80)

இவர் விஜய்யின் கில்லி படத்தில் த்ரிஷாவின் தந்தையாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டிசம்பர் 31ஆம் தேதி மாலை 4 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது உடல் கீழ்க்கண்ட விலாசத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்: 8, முரளி தெரு, மகாலிங்கபுரம், கோடம்பாக்கம்

Vikrams father actor VinodRaj expired today

தன் அரசியல் வருகையை வரவேற்ற அமிதாப்-கமலுக்கு ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தன் அரசியல் நிலைப்பாட்டை அதிரடியாக அறிவித்தார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் (2021) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தனிக்கட்சி அமைத்து போட்டியிடுவேன் என உறுதியளித்துள்ளார்.

அவரின் அறிவிப்பை தொடர்ந்து திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களான அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

எனவே இருவருக்கும் ரஜினிகாந்த் நன்றி என தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக

Amitabh Bachchan‏Verified account @SrBachchan
T 2758 – My dear friend , my colleague and a humble considerate human, RAJNIKANTH, announces his decision to enter politics .. my best wishes to him for his success !

Rajinikanth‏Verified account @superstarrajini
Rajinikanth Retweeted Kamal Haasan
Thank you very much for your kind wishes dear Kamal

புத்தாண்டில் ரசிகர்களை மரண மட்டையாக்க சிம்பு-ஓவியா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு இசையில் சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் இவரது இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து 2018 புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் சிம்பு.

‘மரண மட்டை’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் பாடலை நடிகை ஓவியா பாடியிருக்கிறார்.

இந்த பாடலை நாளை 2018 புத்தாண்டு தினத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Simbu and Oviya teamsup for Marana Mattai album as Newyear Treat

தனிக்கட்சி தொடங்குவது உறுதி…: ரஜினிகாந்த் பேச்சின் முழுவிவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாக பேசப்பட்டு வந்த ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இன்று டிசம்பர் 31ஆம் தேதி விடை கிடைத்துள்ளது.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் அறிவித்தார்.

விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

” கடமையை செய் பலனை நான் பார்த்துகொள்கிறேன் என்று மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சொல்கிறார்.

யுத்தம் செய் ஜெயித்தால் நாடாளுவாய், தோற்றால் வீர சொர்க்கம். யுத்தம் செய்யாமல் சென்றால் உன்னை கோழை என்று சொல்வார்கள்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.

நான் பில்ட்அப் கொடுக்கவில்லை. அது தானாக ஆகிவிட்டது. எனக்கு அரசியல் கூட பயமில்லை, மீடியாவைப் பார்த்தால்தான் பயம்.
பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை.சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார்.

இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான காலம் குறைவாக இருப்பதால், அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பேன்.

அதுக்கு முன்னால் வருகிற பாரளுமன்ற தேர்தல் சமயத்தில் நான் முடிவெடுப்பேன்.

நான் அரசியலுக்கு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வரவில்லை. அதெல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் ஆயிரம் மடங்கு தமிழக மக்களாகிய நீங்கள் எனக்கு தந்துள்ளீர்கள்.

பதவியின் மேலும் ஆசை இல்லை, அப்படியிருந்திருந்தால் 1996 களிலேயே அந்த நாற்காலி என்னை தேடி வந்தது ஆனால் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்.

45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை 68 வயதில் எனக்கு பதவி ஆசை வருமா ? நான் ஆன்மிகவாதியன்று சொல்ல தகுதியற்றவனா ? அப்படியெனில் நான் அரசியலுக்கு வரக் காரணம் என்ன ?

நாட்டில் அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர் கெட்டுவிட்டது.

கடந்த ஒர் ஆண்டில் தமிழ் நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலை குனிய வைத்தது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுக்கவில்லையெனில் என்னை வாழவைத்த தமிழ் தெய்வங்களுக்கு ஜனநாயக முறையில் நல்லது செய்ய ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும்.

அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது. சிஸ்டம் மாற்றப் பட வேண்டும். உண்மையான, வெளிப்படையான சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம் விருப்பம்.

அது என் போன்ற தனி ஒருவனால் முடியாது. மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை. தேர்தலில் ஜெயிப்பது எளிதான விஷயமல்ல, நடுக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது.

ஆண்டவனாகிய அவன் அருளும், மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். இது இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பழைய காலத்தில் ராஜாக்கள் அன்னிய நாட்டினரை கொள்ளை அடிப்பார்கள் ஆனால் இங்கு சொந்த நாட்டில் சொந்த மக்களையே கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும், கட்சியின் அடிப்படையிலேயே இம்மாற்றத்தை கொண்டு வரவேண்டும். கட்சியில் ஆனி வேர் தொண்டர்கள் தான். அவர்கள் இல்லாமல் முதலமைச்சரே இல்லை. எனக்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும்.

பொது நலத்திற்கு பாடுபடும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள தப்பு செய்தால் தட்டிக் கேட்கும் காவலர்கள் தான் எனக்கு வேண்டும். தகுந்த வேலைக்கு தகுதியுள்ள ஆட்களை நியமித்து வேலை சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வையிடும் சாதரண பிரஜை, மக்களின் பிரதிநிதி தான் நான்.” என்று அவர் கூறினார்.

Finally Rajinikanth announced his Political entry today

More Articles
Follows