தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990-களில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் ‘ஜெய்பீம்’ படம் உருவானது.
ஞானவேல் இயக்கிய இந்த படத்தை சூர்யா தயாரித்து நடித்திருந்தார்..
இந்த உண்மை சம்பவ வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரு கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார்.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
20 வருடங்களுக்குப் பிறகு பல உண்மைச் சம்பவங்களும் அம்பலமானது.
இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரன் பாண்டியன் கலந்து கொண்டு பேசும்போது…
” கண்டிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தின் பாகம் இரண்டு உருவாகும் என்றார். இது போன்ற பல உண்மை சம்பவங்களை நீதியரசர் சந்துரு விசாரணை நடத்தி தீர்ப்பளித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் ‘ஜெய்பீம்2’ உருவாகும்” என அவர் தெரிவித்தார்.
Jaibhim2 update at 53rd International Film Festival