இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்2’ அப்டேட் கொடுத்த சூர்யா டீம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்2’ அப்டேட் கொடுத்த சூர்யா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் ‘ஜெய்பீம்’ படம் உருவானது.

ஞானவேல் இயக்கிய இந்த படத்தை சூர்யா தயாரித்து நடித்திருந்தார்..

இந்த உண்மை சம்பவ வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரு கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

20 வருடங்களுக்குப் பிறகு பல உண்மைச் சம்பவங்களும் அம்பலமானது.

இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரன் பாண்டியன் கலந்து கொண்டு பேசும்போது…

” கண்டிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தின் பாகம் இரண்டு உருவாகும் என்றார். இது போன்ற பல உண்மை சம்பவங்களை நீதியரசர் சந்துரு விசாரணை நடத்தி தீர்ப்பளித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் ‘ஜெய்பீம்2’ உருவாகும்” என அவர் தெரிவித்தார்.

Jaibhim2 update at 53rd International Film Festival

அம்பேத்கர் சொல்லையே ‘ஜெய்பீம்’ படமாக்கினோம் – இயக்குநர் ஞானவேல்

அம்பேத்கர் சொல்லையே ‘ஜெய்பீம்’ படமாக்கினோம் – இயக்குநர் ஞானவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ‘ஜெய் பீம்’ ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் பல சர்ச்சைகளும் உருவானது.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது… “ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்வு.

மேலும் நாம் கற்கும் கல்வி மட்டுமே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் சொல்லை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ‘ஜெய்பீம்’ படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அது பிரதிபலித்தது.” என்று பேசினார்.

இந்தப் பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

director gnanavel speech in 53rd International Film Festival

நடிகையுடன் நெருக்கமாக விக்ரம் – ரஞ்சித்.; ‘தங்கலான்’ தாராளம்

நடிகையுடன் நெருக்கமாக விக்ரம் – ரஞ்சித்.; ‘தங்கலான்’ தாராளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் – இயக்குனர் ரஞ்சித் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் கூட்டணியில் ‘தங்கலான்’ படம் தயாராகி வருகிறது. ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கே.ஜி.எப் படத்தை போன்று தங்க வயல் கதையை மையப்படுத்தி படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்திற்காகவே சில மாதங்களாக நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வளர்த்து வருகிறார் விக்ரம்.

மேலும் இப்பட காட்சிகளும் வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் விக்ரம் – நடிகை பார்வதி இயக்குனர் ரஞ்சித் ஆகிய மூவரும் அருகருகே படுத்தபடி கேமராவை நோக்கி வெற்றிக்கான விரல் சின்னத்தை காட்டுவதாக புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Vikrams Thangalaan movie photo goes viral

1 வருடமாக 10 ரூபாய் சாப்பாடு வழங்கி வரும் கார்த்தியின் மக்கள் நல மன்றம்

1 வருடமாக 10 ரூபாய் சாப்பாடு வழங்கி வரும் கார்த்தியின் மக்கள் நல மன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ரூ.50 மதிப்புள்ள பிரிஞ்சி சாதம் ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் என்று 100க்கும் அதிகமானோர் உணவு உட்கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.

தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.

(ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை)

இந்த உணவகத்தின் 400-வது நாள் இன்று (29.11.22) கொண்டாடப்பட்டது.

actor karthi fans club providing ten rupees food

உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை.? ‘வாரிசு’ ரிலீசில் கடுப்பான தயாரிப்பாளர்

உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை.? ‘வாரிசு’ ரிலீசில் கடுப்பான தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கி இருக்கிறார்.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

அதே சமயம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் அங்கு முன்னணி நடிகர்களின் தெலுங்கு படங்களும் அதே நாளில் வெளியாக உள்ளது.

எனவே தமிழ் படத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை உருவானது.

இதனையடுத்து தில் ராஜு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…

“‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என முன்பே (மே மாதம்) நாங்கள் கூறிவிட்டோம். அதன் பி்ன்னரே சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூனில் அறிவிக்கப்பட்டது.

பாலகிருஷ்ணா காரூவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிட முடியாமல் போனதால் அதுவும் சங்கராந்தி ரேஸில் இணைந்து விட்டது.

மேலும் பண்டிகை காலங்களில் 3 படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன.

‘வால்டர் வீரய்யா’ பட மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்காதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை. ஏன் பிரச்சினை செய்கிறார்கள்?” என பதிலளித்துள்ளார் தில் ராஜூ.

What is the problem with you all? ‘Dil Raju’s fiery reply

நாங்க சேர்ந்தா தான் நாடு உருப்படுமா.?; யாரை சொல்கிறார் மிஷ்கின்.?

நாங்க சேர்ந்தா தான் நாடு உருப்படுமா.?; யாரை சொல்கிறார் மிஷ்கின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்து அதில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின்.

இவர் நிறைய படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார்.

இவரின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்கள் இவருக்கு வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது.

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கும்போது இவருக்கும் நடிகர் விஷாலுக்கு மோதல் ஏற்படவே அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

தற்போது விஷால் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் விஷால் உடன் மீண்டும் இணைவீர்களா? என்ற கேள்விக்கு மிஷ்கின் பதில் அளிக்கையில்.

“எனக்கும் விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது முன்பெல்லாம் கோபமாக இருந்தேன் இப்போது அந்த கோபம் குறைந்து விட்டது.

இனிமேல் அவனுடன் சேர்ந்து என்னால் படம் பண்ண முடியாது. ஒருவேளை விஷால் என்னிடம் கேட்டால் அவனுக்காக படம் இயக்குவேன். நானாக சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன்.

நாங்கள் இணைந்தால் தான் இந்த நாடு உருப்படப்போகுதா என்ன? அது அப்படியே இருக்கட்டும்.

ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொண்டால் வணக்கம் சொல்லுவேன் கட்டிப்பிடித்துக் கொள்வேன் அவ்வளவுதான்.” என மின்னலாக பதில் அளித்துள்ளார் மிஷ்கின்.

Mysskin talks about working vishal again?

More Articles
Follows