
கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகையின் கல்விக்கு உதவிய நடிகர் ஜெய்

என் அன்பு உங்களுக்கும் உங்கள் ஆசி எனக்கும்.; விக்ரமை வாழ்த்திய இளையராஜாவுக்கு கமல் நன்றி

லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

பழையபடி கேப்டனாக விஜயகாந்த் கர்ஜிக்க வேண்டும்.; இறைவனிடம் ரஜினி வேண்டுதல்

சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’.
லோகேஷ் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன் பகத்பாசில், விஜய் சேதுபதி சூர்யா, காளிதாஸ், நரேன், ஷிவானி, மைனா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியானது.
இப்படம் வெளியான முதல்நாள் முதலே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.
படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் மொத்த வசூல் மட்டும் இதுவரை ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சூர்யா நடித்த ரோலஸ் கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் ரோலஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நடிகர் கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பகத் பாசில் நடித்த அமர் என்ற கேரக்டரையும் மெருகேற்றி ஒரு புதிய கதையை உருவாக்க போகிறாராம் லோகேஷ்.
கமலின் ‘விக்ரம்’ கேரக்டர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் பகத்தின் அமர் கேரக்டர் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக கதைகளை அமைத்து மூன்றையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ்.
இதில் அமர் கேரக்டரின் முந்தைய காலகட்டம் சொல்லப்படும் என தெரியவந்துள்ளது.
மேலும் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த கைதி படத்தின் காட்சிகள் இடம் பெற்றது. எனவே கார்த்தியின் டெல்லி கேரக்டரும் அடுத்த பாகத்தில் இடம் பெறும் என நம்பலாம்.
எனவே கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் அடுத்த பாகத்தில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
Lokesh Kanagaraj talks about his upcoming films

மீனவ இளைஞனும் மார்வாடி பெண்ணும்.; மகனை ஹீரோவாக்கி படமெடுக்கும் சரண்ராஜ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.
நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார்.
இந்த புதிய திரைப்படத்திற்கு “குப்பன்” என பெயர் வைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.
35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்க மாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன்.
அப்படிதான் குப்பன் என்ற ஃபிஷர்மேன் பழக்கமாச்சி. அப்போ தான் தோணிச்சு.. ஒரு ஃபிஷர்மேன் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் நண்பர் பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அதுதான் “குப்பன்”. அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.
பைலட்டாக இருந்து, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்ட சரண்ராஜின் இரண்டாவது மகன் தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.
இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகுகிறார்கள்.
மேலும் சரண்ராஜும் நீண்ட நாள்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகன் தேவ் சரண்ராஜின் மாமனாக சரண்ராஜ் நடித்து வருகிறார்.
ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம்.
ஒளிப்பதிவு : ஜனார்தன்,
இணை இயக்கம், பாடல்கள் : K.சுரேஷ் குமார்
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.
Soni sri productions “KUPPAN”
Dev charanraj (hero)
Adhi (2 nd hero)
Sushmitha (heroine)
Priya (2nd heroine)
And Charanraj
Story, Screenplay, Dialogue & Direction : Charanraj.NY
Camera : Janarthan
Editor : S P.Ahammed
Music : S.G.Elai
Stunt : Ohmkar
Dance : Dayana
Production exquitive : Thangaraj
PRO : Johnson
Lyrics & Co.direction :
K.Sureshkumar
Produced By Soni Sri Production
Actor Saran Raj turns hero for his son