ஜெய்யின் லைசென்ஸை கேன்சல் செய்து ரூ.5200 ஃபைன் போட்டது கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் குடிபோதையில் கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கினார் நடிகர் ஜெய்.

மேலும் விபத்து ஏற்படுத்தியதாலும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாலும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஜெய் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஆஜராகவில்லை என்பதால் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்து, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஜெய்.

இதனையடுத்து ஜெய்க்கு ரூ. 5200 அபராதமும், 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jai driving licence is cancelled for 6 months for Drunk Driving case

கமல் நன்றாக நடிப்பார்; ஆனால் தலைவர்ன்னா ரஜினிதான்.. – சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் ரஜினி மற்றும் கமலின் சினிமா பயணம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கூறியதாவது…

சிவாஜி நன்றாக நடிப்பார். அவர் நடிக்கட்டும்ய்யா. நமக்கு அண்ணன் எம்ஜிஆர்தான் என்று நாங்கள் சொல்வோம். அன்று பலருடைய மனநிலையும் இதுதான். அதே நிலைமைதான் இன்று ரஜினிக்கும் கமலுக்கும் உள்ளது.

கமல் நன்றாக நடிக்கக்கூடிய திறமையான நடிகர். ஆனால் ரஜினிக்குதான் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்தான் தலைவர்.

கமலுக்கு நிறைய ரசிகைகள் உண்டு. கமலை பெண்கள் ரசிப்பதால் கோபப்படுபவர்களும் அதிகம் உண்டு.

ரஜினியை காதலிக்கிறேன் என யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் மக்களை கவரும் காந்தம் கவர்ச்சி ரஜினியிடம் உள்ளது.

ரஜினி கட்சி துவங்கமாட்டார். அவர் அரசியல் பேசிக் கொண்டிருப்பார். கமலை விட நண்பர் ரஜினி எனக்கு நெருக்கமானவர்.

ரஜினியை விமர்சித்தால் வாக்குகள் சிதறும். அதனால்தான் எந்த அமைச்சரும் ரஜினியைத்தான் விமர்சிக்க மாட்டார்கள்.” என்றார்.

Kamal is good Actor but Rajini is Thalaivar says Charuhasan

கமல்ஹாசன் நாத்திகவாதி அல்ல…. ரகசியத்தை போட்டு உடைத்த சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படங்களில் எந்த வேஷம் என்றாலும் தயங்காமல் ஏற்பவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

ஆனால் வெளியுலக வாழ்க்கையில் மனதில் பட்டதை வேஷம் போடாமல் பேசுபவர் இவர்.

தன்னை நாத்திகவாதியாக (அவரது பாஷையில் பகுத்தறிவாளர்) காட்டிக் கொள்பவர் இவர்.

இவரைப்போல இவரின் அண்ணன் சாருஹாசனும் நாத்திகவாதிதான். ஆனால் கமல் மகள் ஸ்ருதிஹாசன் கடவுள் பக்தி கொண்டவர்.

இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் கமலின் நாத்திகம் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதில்…

கமல் என்னிடம் இருந்துதான் நாத்திகம் கற்றார். கடவுளே இல்லை என்பவன் நான்.

ஆனால் அவர் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.

ஆனால் கடவுள் இருந்தாலும் நன்றாக இருக்காது என்கிறேன் நான்.

ஒரு ஆன்மிகவாதிதான் கோயிலை இடிக்கிறான். அவன்தான் கட்டுகிறான். நாங்கள் நாத்திகவாதிகள். நாங்கள் இடிப்பதில்லை.” என்றார்.

Kamalhassan is not an Atheists says his brother Charuhasan

கமல்-ரஜினி நட்பை யாராலும் பிரிக்க முடியாது.. சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் கமல் மற்றும் ரஜினியின் நட்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

அரசியலில் ஜெயிக்கும் ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கும் என சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி விளையாட்டுக்கு பேசியிருக்கலாம்.

அந்த விழாவில் கமலை ரஜினி கேலி செய்யவில்லை. காரணம் அவர்களின் நட்பு குறித்து எனக்கு தெரியும்.

அவர்களை பிரிக்க முடியாது. இந்த சாருஹாசனால் கூட அவரை பிரிக்க முடியாது.

மக்கள்தான் அவர்களை பிரித்துப் பார்க்கிறார்கள்” என்றார்.

No one can break Kamal Rajini friendship says actor Charuhassan

மக்கள் ரஜினியை வணங்குகிறார்கள்… – கமல் அண்ணன் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் தமிழக அரசியல் களத்தில் நாங்கள் குதிப்போம் என்ற வகையில் ரஜினி, கமலும் இருவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் இவர்களின் அரசியல் பயணம் குறித்து பிரபல டிவிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது…

மக்கள் விரும்பினால் முதல் அமைச்சர் ஆவேன் என யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.

மக்களை விரும்ப வைப்பேன் என யாராவது சொல்ல முடியுமா?

கமலை ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள்? நிச்சயம் அவர் அரசியலுக்கு வர காரணத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

ரஜினியை தமிழக மக்கள் வணங்குகிறார்கள். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்.

ரஜினி மற்றும் கமல் இணைந்தால் 10% வாக்குகள் மட்டுமே பெறுவார்கள். மக்கள் அந்தளவு சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இல்லை. என்று தெரிவித்தார்.

Tamil peoples praying Rajini as God says Charuhassan

கமல் மகாபுத்திசாலி; ஆனால் முதல்வராக முடியாது; சாருஹாசன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் சகோதரர் சாருஹாசன் தன் தம்பியின் அரசியல் குறித்து பிரபல டிவிக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது…

நடிகர் விஜயகாந்த் படிப்படியாக அரசியலுக்கு வந்தார்.

ஆனால் கமல் நேரிடையாக முதல் அமைச்சர் பதவிக்கு வர நினைக்கிறார்.

நிச்சயம் கமல் அவர்களால் முதல்வராக முடியாது.

கமல் ஒரு பிராமினர். அவரை ஜாதியை வைத்துதான் மக்கள் பார்ப்பார்கள்.

ஜெயலலிதாவும் பிராமினர்தான். ஆனால் அவருக்கான அரசியல் பின்னணி வேற. எம்ஜிஆருடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால் கமல் அப்படி எந்த கட்சியிலும் இல்லை.

கமலிடம் அரசியல் குறித்து நான் பேசவில்லை. கமல் மகா புத்திசாலி. அவரிடம் உள்ள திறமைகள் மிக அதிகம். சிறுவயது முதலே அவரை பார்த்து வருகிறேன்” என கமல் சகோதரர் சாருஹாசன் பேட்டியளித்து வருகிறார்.

Kamalhassan is intelligent but he cant became Chief Minister says Charuhasan

More Articles
Follows