தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
20 வருடங்களாக சினிமாவில் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக அடையாளங்களை கொடுத்திருப்பவர் நடிகர் ஜெய் ஆகாஷ்.
ஒரு கட்டத்தில் இவரது படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்ற போது சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றவர் தற்போது மீண்டும் சினிமாவில் படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில் ஜெய் ஆகாஷ் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‘யோக்கியன்’. அவரது உதவியாளர் சாய்பிரபா மீனா என்பவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் தியேட்டரில் வெளியிட அவர் பல முயற்சிகள் செய்தும் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது ஓ டி டி யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வருகிற ஜூலை 28ஆம் தேதி ஒரே நேரத்தில் ஏ3 என்ற தன்னுடைய சொந்த மொபைல் ஆப் மூலம் ஓடிடி தளத்திலும் மற்றும் திரையரங்கிலும் வெளியிட உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது..
“என்னுடைய உதவியாளர் சாய்பிரபா மீனா இயக்கியுள்ள இந்த ‘யோக்கியன்’ படத்தை தியேட்டரில் கொண்டு வர பல முயற்சிகள் செய்தோம்.
ஆனால் இதுவரை தமிழகத்தில் 10 தியேட்டர்கள் கூட கிடைக்காத காரணத்தினால் தற்போது ஓ டி டி தளத்தில் இந்த படத்தை வெளியிடுகிறோம்.
இதற்காக நானே சொந்தமாக ஏ3 என்ற (A CUBE) மொபைல் ஆப்பை உருவாக்கி அதன் மூலம் வெளியிடுகிறேன்.
எனக்கு மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த படத்தை பார்த்தாலே யோக்கியன் படத்தை நான் தயாரித்ததற்கான லாபம் கிடைத்து விடும்.
இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூபாய் 50 மட்டுமே செலுத்தி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கலாம்.
அதுவும் நீங்கள் பார்க்க விரும்பினால் 24 மணி நேரம் மட்டுமே அது செயல்படும். மீண்டும் நீங்கள் பார்க்க விரும்பினால் மீண்டும் 50 ரூபாய் கொடுத்து அடுத்த நாள் தான் பார்க்க வேண்டும்.
தற்போது ஓடிடி தளங்கள் உலக அளவில் வரவேற்பு பெற்று வருவதால் இந்த முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
மேலும் எனது படங்களை இந்த ஆப்பு மூலம் வெளியிட தயாராக இருக்கிறேன். மற்ற படங்களும் ரிலீஸ் க்கு தயாராகி வருகின்றன என பேசினார் நடிகர் ஜெய் ஆகாஷ்.
Jai Akash launched A CUBE mobile app and releasing his yokkiyan movie