ஆண்களை வெறுக்கும் பெண்களின் காதல்..; லெஸ்பியனை ஊக்குவிக்கும் ராம் கோபால் வர்மா

ஆண்களை வெறுக்கும் பெண்களின் காதல்..; லெஸ்பியனை ஊக்குவிக்கும் ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களை தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ .

ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

நாயகி நைனா கங்குலி பேசியதாவது…

ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன் நாயகி காதலிப்பார்கள், ஆனால் இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இதில் நடிப்பது எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. இந்தப்படம் ஆரம்பித்த போது, நான் ஆண் போல் நடிக்க வேண்டும் என்றார், அதற்காக நான் சில பயிற்சிகளை மேற்கொண்டேன், ஆண்களின் உடல் மொழிகளை பார்த்து கற்றுக்கொண்டு நடித்திருக்கிறேன்.

இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையை சொல்லும் இந்தபடத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாயகி அப்ஷரா பேசியதாவது…

இங்கு இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு, தமிழில் இந்தப்படம் வெளியாவது மிக மகிழ்ச்சி. காதல் காதல் தான் மூலம் நான் இங்கு அறிமுகமாவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இங்கு நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். படம் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றியது.

இது நம் சமூகத்தில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா சாரின் தெளிவான பார்வை என்னை வியக்க வைத்தது. ஓரின சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் கடவுளின் குழந்தைகள் தான்.

இது ஒரு கமர்ஷியல் படம், இதில் இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹிரோயின்களுக்கிடையே டூயட் சாங் இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. ராம் கோபால் சாருக்கு நன்றி. எல்லோரும் படம் பாருங்கள் நன்றி.

இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது…

இந்தப்படத்தின் ஐடியா எனக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம், ஓரின சேர்க்கையாளர்களை நாம் பரிதாபமாக தான் பார்க்கிறோம், அரசாங்கமே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை.

ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது, அதை மாற்றலாம் என்று தான் இதை எழுதினேன்.

இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம். முதலில் நைனா கங்குலி இதற்கு தயங்கினார் அவருக்கு ஐடியா பிடித்திருந்தது ஆனாலும் தயக்கம் இருந்தது.

அதன் பிறகு ஒப்புக்கொண்டார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹிரோயின்களை வைத்து டூயட் பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின் தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் நைனா கங்குலி, அப்சரா இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராஜ்பால் யாதவ், காஸி, மிதுன் புரந்தாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவினர்
எழுத்து இயக்கம் – ராம் கோபால் வர்மா
ஒளிப்பதிவு – மல்ஹர்பத் ஜோஷி
எடிட்டர் – கமல் ரமடுகு
பாடல்கள் – பிரவீன் பால்
பின்ணனி இசை – ஆனந்த்
கலை இயக்கம் – மதுகர் தேவாரா
தயாரிப்பு – Artsee Media / Rimpy Arts International

குரபரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிடுகின்றனர். ஏப்ரல் 8 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

It’s not an easy thing to shoot a duet song featuring two women in love says director Ram Gopal Varma

நடிகர் ஆதியின் பாட்னராக மாறிய ஹன்சிகா.; வாழ்த்திய ஆர்யா

நடிகர் ஆதியின் பாட்னராக மாறிய ஹன்சிகா.; வாழ்த்திய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’.

இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார்.

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

Adhi and Hansika joins for Partner

தரகர்களால் தரங்கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களை எச்சரிக்கும் ‘செல்ஃபி’ – தங்கர் பச்சான்

தரகர்களால் தரங்கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களை எச்சரிக்கும் ‘செல்ஃபி’ – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக செல்ஃபி படத்தை பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான், படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.

மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதில்,

‘எச்சரிக்கை’

கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டப்பின் தமிழ் நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகின்றது.

இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது.

இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் “செல்பி” திரைப்படம்.

மதிமாறன் எனும் புதிய இயக்குநரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

அதே போன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகின்றன. GV பிரகாஷ் முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்! இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுப்படுத்தும்!

முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர் நாயகன் பாத்திரத்தில் கவுதம் மேனன் நடிப்புதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகின்றது.

திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குநரின் திறனை பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள் தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன.

“செல்பி” அதனை திறம்பட செய்திருக்கின்றது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குறியது.

– தங்கர் பச்சான்.

Director Thangar Bachchan praises Selfie movie

A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ படக்குழு

A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

‘மாயோன்’ படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சைக்கோ’ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாரட்டுக்களை குவித்துள்ளது. இதற்காக மத்திய தணிக்கை வாரியத்திற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் – அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஒரு புராண திரில்லர் திரைப்படம்’ மாயோன்’. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ‘மாயோன்’ படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

மாயோனுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sibiraj starrer Maayon gets “U” certificate

‘தீ இவன்’ படத்திற்காக அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் கார்த்திக்

‘தீ இவன்’ படத்திற்காக அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில்” தீ இவன் ” நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்த பிறகு படத்தை பற்றி நவரச நாயகன் கார்த்திக் நம்மிடம் பகிர்ந்தவை….

ஜெயமுருகன் .T. M அவர்கள் ” தீ இவன் ” கதையை சொன்ன போதே கதையில் உள்ள ஆழத்தை நான் உணர்ந்தேன். தமிழ் கலாசாரத்தின் நமது வாழ்வியலை அழகாக வடிவமைத்து இருந்தார்.

அதேபோல் படப்பிடிப்பு சமயத்தில் எந்த காம்பர்மைஸ்சும் இல்லாமல் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கினார். கொரானாவின் நெருக்கடியான நேரத்திலும் அனைத்து தேவைகளையும் எனக்குமட்டுமல்ல அனைவருக்கும் செய்து கொடுத்து படப்பிடிடப்பை அழகாக நிறைவு செய்துள்ளார்.

நான் இப்படத்தின் டப்பிங் பேசியபோது, காட்சி அமைப்புகளையும் உறையாடல்களையும் பார்த்து ரொம்பவும் ரசித்தேன். கதையின் உணர்வுகளை சொல்லும் விதமான பாடல் வரிகள் என்னை நெகிழ வைத்தது.

ராதா ரவி அவர்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, அவர் அந்தக் காட்சியில் வாழ்ந்திருப்பதாகவே உணர்த்தியது.

அதோடு ஜான் விஜய்யின் சேட்டையும், சிங்கம்புலி, சரவணசக்தியோடு நான் நடித்த காமடிக்காட்சிகளும் மிக அழகாக படம் முழுக்க சுவாரசியத்தைக் கூட்டி மிக அழகாக உருவாகியிருக்கிறது. நான்கு சண்டைகாட்சிகளில் நான் நடித்துள்ளேன்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு படத்திற்கு பிறகு ஜெயமுருகன். T. M அவர்களுக்கு “தீ இவன் “படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

அதேபோல் எனக்கும் சிறு இடைவெளிக்கு பிறகு இப் படம் என் பட வரிசையில் தரமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Karthik fights without using body double in Thee Ivan

ஜன கண மன..; இந்தியனின் மனசாட்சியை தட்டிவிட வரும் விஜய் தேவரகொண்டா

ஜன கண மன..; இந்தியனின் மனசாட்சியை தட்டிவிட வரும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் “லைகர்” என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இதில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார்.

இதன் மூலம் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை நேற்று மார்ச் 28 நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இப்படத்திற்கு “ஜன கன மன” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக JGM.

ராணுவ வீரர்களின் வேலையையும், நாட்டிற்காக மேற்கொள்ளும் தியாகத்தையும் மையப்படுத்தி இப்படம் உருவாகுகிறது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுபோல போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் 2023ல் ஆகஸ்ட் 3ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தெரிவித்தார்.

இந்தப் படம் அனைத்து இந்தியர்களின் மனதை தொடும் வகையில் இருக்கும்.

தன்னுடைய கதாபாத்திரம் இதுவரை தான் நடிக்காதது – இதற்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புவதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

JGM படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத்.

இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி கூறுகையில்…

“இந்த அற்புத திரைப்படமான JGM படத்தில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தட்டிவிடும் என்று ஸ்ரீகாரா ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

Vijay Deverakonda & Puri Jagannadh to collaborate again for JGM

.

More Articles
Follows