‘ரஜினி அரசியலுக்கு வந்திருக்கலாம்…’ – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துக் கொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசும்போது…

“தமிழக அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பே அரசியலில் ரஜினி நுழைந்து இருந்தால் இந்த வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.

தற்போது அவராது முடியாது என்று சொல்லவில்லை.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அது கொஞ்சம் சிரமம்” என்று பேசினார்.

Its difficult for Rajini to enter politics now says EVKS Elangovan

தனுஷ்-அமலாபால் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலக என்ன காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.

இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி, அமலாபால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிந்து விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மற்ற படங்களுக்கும் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளதாலும் அதனால் ஏற்பட்ட தாமதத்தாலும் விஜய்சேதுபதியின் கால்ஷீட் வீணானதாக கூறப்படுகிறது.

Vijay sethupathi get out of Dhanushs Vada Chennai movie

‘பைரவா’வுடன் மோத துணிந்த ஒரே படம் ‘சாயா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வருட (2017) பொங்கலுக்கு பைரவா உடன் மோத கிட்டதட்ட 8 படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல காரணங்களால் மற்ற படங்கள் தள்ளிப்போகவே தற்போது ஜனவரி 12ஆம் தேதி பைரவா மட்டுமே வருகிறது.

ஆனால் தற்போது மற்றொரு படமான சோனியா அகர்வாலின் சாயா படம் களத்தில் குதித்துள்ளது.

இப்படமும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இன்று சென்சாரில் யு சான்றிதழ் பெற்ற உடனே இதற்கான ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அறிமுக நாயகன் சந்தோஷ் நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் சாயா.

இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்.

இப்படம் சிறந்த கல்வியை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் தயாரித்துள் இப்படத்தை V.S.பழனிவேல் இயக்கியுள்ளார்.
ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் எஸ். பார்த்திபன்.

Saaya is only tamil movie clash with Vijays Bairavaa

தனுஷின் ஆஸ்தான இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜி.வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

இதில் ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருதை பெற்றார்.

தற்போது தனுஷ் நடித்துவரும் வடசென்னை படத்தையும் வெற்றிமாறனே 3 பாகங்களாக இயக்கி வருகிறார்.

இதனையடுத்து, ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் வெற்றிமாறன்.

இப்படத்தை ஸ்ரீக்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கட்டாப்பாவ காணோம் மற்றும் அடங்காதே படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vetrimaran going to direct GV Prakash

‘அப்பா’வுக்காக சூர்யா-கார்த்தியின் ‘சித்திரச்சோலை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, கார்த்தி நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களை கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி.

பல்லாயிரகணக்கான பொதுமக்களும், சினிமா மற்றும் பிரபலங்களும் கண்டுகளித்தனர்.

இதைபோல் கோயம்புத்தூர் மக்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்க, வருகிற 14,15,16 தேதிகளில் நடத்துகிறார்கள்.

கோயம்புத்தூர் G.D. அரங்கம், எண்: 734 பிரசிடன்ட் ஹால் , அவினாசி ரோடு விலாசத்தில் நடக்கவிருக்கும் இக்கண்காட்சி 14 –ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், இந்த சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார்.

Suriya and Karthi Organizing their Dad #Sivakumar ‘s Chithira Cholai

பெயர் மாற்றத்துடன் உருவாகும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ பார்ட் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.

இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக இரு வேடம் ஏற்று காமெயில் கலக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.

இப்பாகத்தில் புலிகேசியின் அடுத்த வாரிசாக 24ஆம் புலிகேசி நடிக்கிறாராம்.

எனவே இதன் டைட்டில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Imsai Arasan 23 M Pulikesi sequel title change

More Articles
Follows