தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடந்து வருகிறது. இதில் கேன்ஸ் திரைப்பட விழா பிரபலமானது.
பிரான்ஸில் நடக்கும் இவ்விழாவில் கடந்த 15 வருடங்களாக கலந்துக் கொண்டு வருகிறார் ‘ஆனந்தா பிக்சர்ஸ்” சுரேஷ்.
இவர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
இந்தியன் ஃபிலிம் பெடரேஷனின் முன்னாள் தலைவரான இவர், தற்போது இந்திய சினிமா ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
இந்நிலையில் இந்தாண்டு கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்ட இவருக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம்.
இதுகுறித்து இவரின் சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது….
ஞகேன்ஸ் திரைப்பட விழாவில் எல்லா நாட்டு மொழி திரைப்படங்களும் திரையிடப்படும்.
அப்போது ரிலீசாகவுள்ள 30 இந்தியப் படங்களின் டீஸரை திரையிட்டனர்.
ஒவ்வொன்றாக திரையிடப்பட்ட போது, திடீரென ‘நெருப்புடா’ என்ற வித்தியாசமான இசை விண்ணில் பறந்தது. ரஜினியின் ‘கபாலி’ டீஸர் திரையிடப்பட்டது.
எவரும் எதிர்பாரா வகையில், எல்லாரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள்.
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ரஜினி பட டீஸருக்கு அங்கு இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை.
அப்போது இதனை கவனித்த இத்தாலிய சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர், ரஜினி குறித்து அங்கு விசாரிக்க, எனக்கு அவர் அறிமுகம் ஆனார்.
அவரது பெயர் மிஷெல் க்ராஷியோலா.
‘கபாலி’ படத்தை இத்தாலியில ரிலீஸ் செய்யனும். இது தொடர்பா நான் யாரை இந்தியாவில் தொடர்பு கொள்ளனும் என கேட்டார்.
நான் தயாரிப்பாளர் தாணுவின் தொலைபேசி எண்ணை கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார்.
உலகளவில் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு பெருமையா? என்பதை கண்டு வியந்தேன்.”
என நெகிழ்வோடு தெரிவித்துள்ளார் சுரேஷ்.