பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன சுப்ரபாதம்

பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன சுப்ரபாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி.

பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர்.

இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது.

திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தை தொட்டுள்ளது.

ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த டாப் தமிழ் நியூஸ் நிர்வாகம், தற்போது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளு பேத்திகள் எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் பாட, மாண்டலின் கலைஞர் ராஜேஷ் இசையில் புதுப்பொலிவுடன் வெளியிட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா, ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மாண்டலின் ராஜேஷ், பாடகிகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கூறியதாவது…

“சங்கீத உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பேரும் புகழும் பெற்ற எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தை அவரது தலைமுறையாக எம்.எஸ்.அம்மாவின் பேத்திகள் பாடியிருக்கிறார்கள்.

ராஜேஷ் அதற்கு இசைக்கருவிகளை இசைத்து அதை மென்மேலும் அழகுப்படுத்தி இருக்கிறார். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்… எம்.எஸ். அம்மா பாடிய காலத்திலே அவர்களின் குரலை கேட்பதற்காகவே , உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்த தலைமுறைக்கு, அவர்களின் சந்ததியிலேயே எம்.எஸ்.அம்மாவின் பேத்திமார்கள் பாடியிருப்பதும், ராஜேஷ் அதற்கு உதவி செய்ததும், இந்தத் தலைமுறையினருக்கும், தலைமுறை தலைமுறையாக சங்கீதம் செல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருப்பதாகதான், நான் பார்க்கிறேன்.

வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்காமல் சங்கீதத்தை கையிலேயே எடுத்துக்கொண்டு போனால், இதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அந்த பணியை செவ்வனே செய்து வரும் எம்.எஸ். அம்மாவின் பரம்பரைக்கு என்னுடைய வாழ்த்தையும், அவர்கள் மென்மேலும் உயர வேண்டும் என்ற பிரார்த்தனையையும் இறைவனிடம் வைத்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு முடித்து கொள்கிறேன். நன்றி.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும் போது: –

“மிக சிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை தெரியாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட இந்த லெஜெண்டரி சுப்ரபாதத்தை மீண்டும் என்னுடைய நண்பரும், சகோதரருமான ராஜேஷ் ரீஅரேஞ்ச் செய்தது மிகவும் மகிழ்ச்சி.

அதில் ஐஸ்வர்யா – சௌந்தர்யா இருவரும் அழகாக பாடி உள்ளார்கள். இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னது போல் சுப்ரபாதத்தின் இந்த புதிய பரிமாணம் வருகிற தலைமுறைக்கும் செல்ல ஒருவழியாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.

இந்த அழகான நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. ராஜா சார் ஆசியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அதேபோல் எங்கள் குரு மாண்டலின் சீனிவாசன் அவர்களின் ஆசியும் எங்களுடன் எப்போதும் இருக்கிறது”

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் கூறியதாவது: –

“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சந்தோஷம் என்பதை விட மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். எம்.எஸ்.அம்மா பாடிய பாடலில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதில் நானும் ஒரு பங்கு வகித்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த பாடலை வெளியிட்டது, அவரின் ஆசி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல் இசையமைப்பாளர், என் சகோதரர் தேவிஸ்ரீ பிரசாத் இங்குவந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவர் கூறியது போல மாண்டலின் சீனிவாசன் அண்ணனின் ஆசீர்வாதம் இங்கு நிறைந்துள்ளது. நன்றி வணக்கம்.

பாடகி ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா பேசும் போது…

இன்று மிகவும் விசேஷமான நாள். இன்று இசைஞானி இளையராஜா அவர்கள் நானும், என் தங்கையும் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் வெளியிட்டது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இந்த வெங்கடேச சுப்ரபாதத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் ராஜேஷ் அவர்கள்.

இந்த வெங்கடேச சுப்ரபாதம் நிறைய பேரை சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நன்றி”.

Isaignani Ilaiyarajaa launched the soul lifting Sri Venkatesa Suprabatham

JUST IN மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் இமான்

JUST IN மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Music composer D Imman announces divorce

புத்தாண்டில் விக்ரம் & துருவ் ரசிகர்களுக்கு ‘மகா(ன்)’ விருந்து

புத்தாண்டில் விக்ரம் & துருவ் ரசிகர்களுக்கு ‘மகா(ன்)’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’.

இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதன் சூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, டார்ஜிலிங், நேபாளம் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2022 பொங்கலுக்கு ’மகான்’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை புத்தாண்டு தினத்தில் ‘மகான்’ பட டீசருடன் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vikram’s Mahaan release date announcement is here

வைரலாகும் ‘வலிமை’ ஸ்டில்ஸ்..; அஜித் படத்தை வாங்கிய ‘பிக்பாஸ்’ முகேன் படத்தயாரிப்பாளர்

வைரலாகும் ‘வலிமை’ ஸ்டில்ஸ்..; அஜித் படத்தை வாங்கிய ‘பிக்பாஸ்’ முகேன் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் வாங்கியுள்ளார்.

இவர் பிக்பாஸ் முகேன்ராவ் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் கலைமகன் முபாரக்.

இன்று மாலை முதலே வலிமை பட ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Valimai theatrical rights bagged by Mugen film producer

ஹாலிவுட் படங்களை எவ்ளோ நாள் உதாரணம் காட்டுவது.? ஆர்ஆர்ஆர் விழாவில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்

ஹாலிவுட் படங்களை எவ்ளோ நாள் உதாரணம் காட்டுவது.? ஆர்ஆர்ஆர் விழாவில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‛ஆர்ஆர்ஆர்’.

இப்படம் 2022 ஜனவரி 7ல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படக்குழுவினர் சென்னை வந்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது :

‛நிறைய ரத்தம் சிந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி உள்ளோம். அதை படத்திலும் கொண்டு வந்துள்ளனர்.

இந்த மொத்த படக்குழுவும் ஒட்டு மொத்த இந்தியாவாக படத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஆகவே வடக்கு, தெற்கு என படத்தை பிரிக்காமல் ஒட்டு மொத்த இந்திய படமாக பார்க்கணும்.

எவ்வளவு நாள் தான் ஹாலிவுட் படங்களை உதாரணம் காட்டி நாம் பேசுவது, நம்ம படத்தை பார்த்தீங்களா என நாம் கேட்க வேண்டாமா. ?

இந்த பட அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்திய சினிமாவின் பெருமை என்று தான் பார்க்கிறேன். நான் ஆர்ஆர்ஆர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன்.

ஆர்ஆர்ஆர் படம் மட்டுமின்றி அஜித்குமாரின் வலிமை படமும் வெளியாகிறது. அதனால் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும்.” என்றார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan talks about Ajith at RRR movie pre release event

சூர்யா-பிரியங்கா ஜோடியை பார்த்தாலே ‘உள்ளம் உருகுதய்யா…’

சூர்யா-பிரியங்கா ஜோடியை பார்த்தாலே ‘உள்ளம் உருகுதய்யா…’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2022 பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் இந்திய மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ பட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சில தினங்களுக்கு முன் இப்பட முதல் பாடலான ‘வாடா தம்பி…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் கவர்ந்தது.

இந்த நிலையில் அடுத்த பாடலான ‘உள்ளம் உருகுதே… உன்ன உன்ன உத்து பாக்கையிலே…’ நேற்று மாலை வெளியானது.

யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன் மற்றும் பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த பாடல் தொடர்பான போஸ்டர்களில் சூர்யா மற்றும் பிரியங்காவின் தோற்றங்களை பார்த்தால் நிச்சயம் நம் ‘உள்ளம் உருகுதய்யா..’ என்பார்கள்..

வரலாற்று கால உடைகள் பின்னணியில் இந்த போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த பாடல் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Suriya – Priyanka’s Ullam urugudhaiya song goes viral

More Articles
Follows