தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் செக்கச் சிவந்த வானம்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இருந்தபோதிலும் இது 2013ம் ஆண்டு வெளியான ‘நியூ வேர்ல்டு’ என்ற படத்தின் தழுவல் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
அதில் பல்வேறு குற்றங்களைச் செய்யும் கோல்டுமூன் என்ற கிரைம் நிறுவனத்தின் தலைவர் கொல்லப்பட அவருடைய இடத்தைப் பிடிக்க அந்த நிறுவனத்தில் 2வது இடத்தில் இருப்பவருக்கும், வேறு இருவருக்கும் போட்டி நடக்குமாம்.
அதே சமயம் அந்த நிறுவனத்தை அழிப்பதற்காக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, அந்த நிறுவனத்தின் இரண்டாவது இடத்தில் இருப்பவருக்கு வலது கையாக இருப்பார்.
போலீஸ் திட்டத்தின்படி அந்த நிறுவனம் அழிக்கப்பட்டதா, அதன் தலைமைப் பதவியைப் பிடிப்பவர்களுக்கு இடையேயான போட்டி என்ன ஆனது என்பது தான் ‘நியூ வேர்ல்டு’ படத்தின் கதை என்கிறார்கள்.
இந்தக் கதையை தான் தமிழுக்கு ஏற்றபடி மணிரத்னம் மாற்றி கொடுத்துள்ளதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் சிலர் கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற கதையை தழுவிதான் இப்படத்தை எடுத்துள்ளார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
குடும்ப மூத்தவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தின் தலைமை யார் என்பது குறித்து மகன்களுக்குள் எழும் போட்டிதான் பொன்னியின் செல்வன் கதை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
Is Chekka Chivantha Vaanam movie is copy of Korean movie