தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதிகளில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூட்டிங் ஸ்பாடுக்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.
இந்த படத்திற்கு முன்பு பிகில் படத்தில் நடித்திருந்தார் விஜய். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யிடம் விலை போனதா ஹலோ ஆப்.? நெட்டிசன்கள் டென்சன்
இதனால் மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர்.
அவரை விசாரித்த நிலையில் அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எனவே மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் நடிகர் விஜய்யின் தந்தை தற்போது குடியிருக்கும் சாலிகிராம வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
Income Tax Department raid at Vijays Master shooting spot