காலா ஹிந்தி பதிப்பில் மட்டும் என்ன ஸ்பெஷல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இரண்டாம் கட்ட காலா பட சூட்டிங்கை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு, பின்னர் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வருவதே நாம் அறிந்ததே,

இந்நிலையில் இதன் இந்தி பதிப்பில் மட்டும் அங்குள்ள ரசிகர்களை கவர்வதற்காக சில மாற்றங்களை செய்து உருவாக்கவிருக்கிறார்களாம்.

மேலும் ஹிந்தி பதிப்பில் ரஜினியே சொந்த குரலில் டப்பிங் பேச இருக்கிறாராம்.

பா. ரஞ்சித் இயக்கிவரும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

In Kaala hindi version some new shots will be taken separately

‘காலா பாஸ்ட்; 2.0 லேட்.?’ ரஜினி ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே நேரத்தில் ரஜினியின் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மற்றொரு பக்கம் ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மேலும் தாமதம் ஆவதால், இப்படம் 2018 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், ‘காலா’ திரைப்படம் 2018 ஜனவரி 15 பொங்கல் தினத்தில் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியானது.

ஆனால், இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும், ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மது இது போன்ற வதந்திகளை மறுத்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி ரசிகர்களிடம் கேட்டபோது அவர்களோ…

இரண்டுமே எங்கள் தலைவரின் படம்தான். இரண்டு வெவ்வெறு கதைக்களத்தை கொண்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வரட்டும். இரண்டும் மாபெரும் வெற்றி பெறும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

இரண்டும் 2018ஆம் ஆண்டில் வெளியாவதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்” என்கின்றனர்.

Rajinikanths 2point0 and Kaala movie release date rumours

சென்னை-28 ஸ்டைலில் விஜய் மில்டனின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை 28, வல்லினம், ஈட்டி ஆகிய படங்களை அதற்கு உதாரணமாக சொல்லாம்.

இந்நிலையில் பாஸ்கட்பால் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் விஜய் மில்டன்.

ஜூலை 10ஆம் தேதி இதன் சூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளரான விஜய்மில்டன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ‘கோலிசோடா’, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் எனபது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Director Vijay milton is next film will be based on Basket Ball

சூர்யா பிறந்த நாளில் மீண்டு(ம்) வரும் அஞ்சான்; ஆர் யூ ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் மாபெரும் தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது லிங்குசாமியின் பன்ச் டயலாக் எனலாம்.

ஒரு பேட்டியில் கலந்துகொண்ட லிங்குசாமி, “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறேன்” என்று சொன்னார்.

ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு அவர் சொன்னதை போல இல்லை என்பதால் அனைவரும் படத்தை ஓவராக கலாய்த்தனர்.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் சூர்யாவின் பிறந்த நாளில் ஜூலை 23 அன்று ரிலீஸ் செய்கின்றனர்.

ஆனால், இது தமிழ்நாட்டில் அல்ல; கேரளாவில் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்த சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இதில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, பார்த்திபன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு முக்கிய கேரக்டர்களில் ராதிகா மற்றும் சிம்ரன் இணைந்திருக்கிறார்களாம்.

பொன்ராம் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திலும் சிம்ரன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் புதிய கெட்டப்பால் வடசென்னை தாமதம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடசென்னை ஆரம்பித்த சில நாட்கள் அப்படத்தில் நடித்துவிட்டு பின்னர் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் தனுஷ்.

இதனிடையில் மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

பவர் பாண்டி, விஐபி2 படங்களை முடித்துவிட்டு வட சென்னையில் கலந்துக் கொண்ட தனுஷ், திடீரென ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இதனால் வடசென்னை தாமதவதால், ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பை மாற்றவிருப்பதால்தான் மற்ற படங்களை முடிக்க சென்றுவிட்டாராம்.

எனவே விரைவில் வடசென்னை படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows