இரு மொழிகளில் ரிலீசாகும் கிரைம் திரில்லர் SIDDY.; முக்கிய கேரக்டரில் இந்திய கால்பந்தாட்ட வீரர் விஜயன்

இரு மொழிகளில் ரிலீசாகும் கிரைம் திரில்லர் SIDDY.; முக்கிய கேரக்டரில் இந்திய கால்பந்தாட்ட வீரர் விஜயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும்,
மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விருவிறுப்பானவகையில் படமாக்கப்பட்டுள்ளது.

கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

மலையாள சினிமாவில் இயக்குனரும்,
ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. விஜயன் போலீஸ் அதிகரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை Surya film productions சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.

பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுளாதலமான கோவளம் மற்றும், திருவனந்தபுரம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்திற்கு ரமேஷ் நாராயன் இசை அமைக்கிறார்.. இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று கொச்சியில் நடைபெற்றது.

IM Vijayan plays important role in crime thriller Siddy

பார்த்திபன் கௌதம் நடிப்பில் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் நாவலை படமாக்கும் எழில்

பார்த்திபன் கௌதம் நடிப்பில் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் நாவலை படமாக்கும் எழில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில், முதல் முறையாக தன் பணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படத்தை, இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் இயக்கி வருகிறார்.

தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.

“யுத்த சத்தம்” படம் குறித்து இயக்குநர் எழில் கூறியதாவது…

“யுத்த சத்தம்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும் நேர்த்திகரமாக உருவாகும் படைப்பு.

நான் இதுவரையிலும் மென் உணர்வுகளை கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே செய்து வந்துள்ளேன்.

ஆனால் இப்படம் மர்மம் நிறைந்த, பரப்பான திரில்லர் திரைப்படம் ஆகும்.

இது திரில்லர் வகையில் மட்டும், என் படங்களிலிருந்து மாறுபட்டதல்ல, படத்தின் உருவாக்கத்திலேயே என் படங்களிலிருந்து முற்றிலும் புதிதானதாக இருக்கும்.

“யுத்த சத்தம்” தலைப்பு படத்தின் கதை உருவான ராஜேஷ்குமார் அவர்களின் நாவலின் அதே தலைப்பாகும்.

படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல் சிறப்பாக வந்திருப்பதாக என்னை பாராட்டவும் செய்தார். நான் உதவி இயக்குநராக, நடிகர் பார்த்திபன் அவர்களுடன் பணிபுரிந்துள்ளேன் இப்போதும் அவர் திரைக்கதையில் மாயாஜாலம் புரிந்து, இயக்குநராக அசத்தி வருகிறார். அவரை திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் மிகத்திறமை வாய்ந்த இளம் நடிகர், இப்படத்தில் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி அசத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார்.

இயக்குநர் எழில் இயக்கிய இந்த திரைப்படத்தை , முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார்.

யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து “யுத்த சத்தம்” படத்தை தயாரிக்கின்றனர்.

Parthiban and Gautham Karthik joins for Director Ezhil’s next

சிவகார்த்திகேயன் – உதயநிதி பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

சிவகார்த்திகேயன் – உதயநிதி பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் & ஹன்சிகா இணைந்து நடித்த படம் ‘மான் கராத்தே’.

உதயநிதி & எமி ஜாக்சன் இணைந்த படம் ‘கெத்து’.

இந்த இரு படங்களையும் இயக்கியவர் திருக்குமரன்.

இவர் தற்போமு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மனைவிக்கும் தொற்று இருப்பதால் அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Sivakarthikeyan and Udhayanidhi film director admitted in hospital

‘சலார்’ படத்தில் கேஜிஎஃப் கூட்டணி.; பிரபாஸுக்கு வில்லனாக ‘அண்ணாத்த’ வில்லனும் இணைந்தார்

‘சலார்’ படத்தில் கேஜிஎஃப் கூட்டணி.; பிரபாஸுக்கு வில்லனாக ‘அண்ணாத்த’ வில்லனும் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

‘கே ஜி எஃப் சாப்டர் ஒன்’ மற்றும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘சலார்’.

நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக ‘சலார்’ உருவாகிறது.

இன்று ‘சலார்’ படக்குழுவினர், புதிய அப்டேட்டை வெளியிட்டனர். இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதிபாபு ‘ராஜமன்னார்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் ‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் ராஜமன்னார் கதாபாத்திரம், கதையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதனை போஸ்டர் மூலம் வெளிப்படுத்துவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

அத்துடன் இந்த கேரக்டர் லுக் போஸ்டர், ‘சலார்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும்.
‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படத்தின் இயக்குனர் பிரசாத் நீல் மற்றும் பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், இப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்’என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜமன்னாரின் போஸ்டர் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில்,’ சலார் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரில், நடிகர் ஜெகபதிபாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மிரட்டலாக அமைந்திருக்கிறது.

இது ரசிகர்களுக்கு ராஜமன்னார் கதாபாத்திரம் குறித்த கற்பனை கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.’ என்றார்.

இதுதொடர்பாக இயக்குனர் பிரசாந்த் நீல் பேசுகையில்,…

‘ சலார் படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில கதாபாத்திரங்களை பற்றிய லுக், படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் வெளியிடப்படும்.’ என்றார்.

Hombale Films’ ‘SALAAR’ poster reveal: Jagapathi Babu to feature in the mass action adventure as Rajamanaar

SALAAR

நட்டி நடிக்கும் ‘வெப்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரின் பர்த் டே பார்ட்டி

நட்டி நடிக்கும் ‘வெப்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரின் பர்த் டே பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு ‘வெப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வி.எம். முனிவேலன் அவர்களின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

Producer VM Muni velan birthday celebration at Web shooting spot

அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் & தேதி இதோ..

அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் & தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய டிவி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி படு பிரபலமான ஒன்று. இது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

எனவே இதற்கு இணையாக ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சி விரைவில் ஜீ டிவியில் செப்டம்பர் 12 இரவு 9.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் ஒரு தனித்தீவில் விடப்படுவார்கள்.

அங்கு பலவிதமான சவால்கள் இருக்கும். அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 8 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 நடிகர்கள், 3 நடிகைகள் மற்றும் ஒரு நடன இயக்குனர், ஒரு டிவி தொகுப்பாளர் என கலந்துக் கொள்கின்றனர்.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரம் இதோ…

1. நடிகர் விக்ராந்த்

2. நடிகர் நந்தா

3. நடிகர் உமாபதி (நடிகர் தம்பி ராமையா மகன்)

4. நடன இயக்குனர் பெசண்ட் ரவி

5. யூடியுப் தொகுப்பாளினி பார்வதி

6. நடிகை காயத்ரி ரெட்டி (பிகில் நடிகை)

7. நடிகை விஜயலட்சுமி

8. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

International Survivor reality show in Tamil Host and Telecast updates

After Bigg Boss and Masterchef, the reality show Survivor, which became a huge hit in several countries, is coming to Tamil. The show, which will premiere on Zee Tamil, will be hosted by actor Arjun.

More Articles
Follows