இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது; கமல்-ரஜினி-விஜயகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal wished himநாளை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு(98) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இளையராஜாவுக்கு தொலைபேசியில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பத்ம விபூஷண் விருது பெற்றது குறித்து இளையராஜா சற்றுமுன் கூறியதாவது…

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இளையராஜா கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Ilayaraja gets Padma Vibhushan Award Rajini Kamal Vijaykanth wished him

 எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா(1)
பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.(2)
பிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி

பிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari Ashna Zaveri starrer Nagesh Thiraiyarangam release on 16th Feb 2018ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.

“நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரி நாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார்.

காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக்.

திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Aari Ashna Zaveri starrer Nagesh Thiraiyarangam release on 16th Feb 2018

பாலியல் தொல்லை கொடுத்தால் கையை வெட்டுவேன்; அனுஷ்கா ஆவேசம்

பாலியல் தொல்லை கொடுத்தால் கையை வெட்டுவேன்; அனுஷ்கா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Anushka Shetty speech about Sexual harassmentசினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆக்சனிலும் வெளுத்து கட்டுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு அந்த இடத்தை விஜயசாந்தி பிடித்து வைத்திருந்தார்.

தற்போது அதுபோன்ற ஆக்சன் படங்களுக்காகவே அனுஷ்காவை இயக்குனர் நாடுகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஆக்சனை போன்றே நேரிலும் கொதித்து எழுந்து பேசியுள்ளார் அனுஷ்கா.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாலியல் தொல்லை குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே ஒருவன் என்னை அத்துமீறி தொட்டான். அவனை கொல்ல வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.

அப்படி செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந்த சம்பவம் நடந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை.

ஒரு பெண்ணை யாராவது தொட்டால் அதில் அன்பு இருக்க வேண்டும். ஆதரவு இருக்க வேண்டும். பாதுகாப்பை உணர வைக்க வேண்டும். கவுரவமாகவும் இருக்க வேண்டும்.

அந்த உணர்ச்சி ஒரு தைரியத்தை கொடுக்கும். அதற்கு மாறாக அந்த தொடுதலில் ஆசை இருந்தால் அந்த மாதிரி செய்பவன் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும்” என்று பேசினார்.

Actress Anushka Shetty speech about Sexual harassment

அஜித்தின் விசுவாசம் என்ன ஆச்ச..? விரக்தியில் தல ரசிகர்கள்

அஜித்தின் விசுவாசம் என்ன ஆச்ச..? விரக்தியில் தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசில ஆண்டுகளாக அஜித் நடித்த அனைத்து படங்களும் நல்ல வசூலை பெற்றது.

ஆனால் இறுதியாக வெளியான விவேகம் படம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

எனவே அவர்கள் சிவா இயக்கத்தை அஜித் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த படம் அறிவிப்பு மட்டுமே வந்தது. அதன்பின்ன்ர சூட்டிங் தொடர்பான எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை.

இந்நிலையில் படத்தயாரிப்பு தரப்பில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது.. கடந்த 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டு வந்துள்ளதாம்.

அந்த வேலைகள் இன்னும் முடிவடையவில்லையாம்.

அதனை முடித்துவிட்டுடு மற்ற கலைஞர்கள் மற்றும் சூட்டிங் தகவல்களை தெரிவிப்போம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரியில் இருந்து படத்தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரசிகர்களை மெர்சலாக்கும் கேரளா தளபதி ரசிகர்கள்

தமிழக ரசிகர்களை மெர்சலாக்கும் கேரளா தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayதமிழகத்தை தவிர கேரளாவிலும் விஜய்க்கு மாஸ் பெருகி வருகிறது.

இவர்கள் தமிழக ரசிகர்களே வியக்கும் அளவுக்கு ஏதாவது ஒன்றை செய்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடினர்.

தற்போது ஒரு படி மேலே சென்று விஜய்க்காக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார்களாம்.

கேரளாவை சேர்ந்த கில்லி பாய்ஸ் கேரளா விஜய் ரசிகர்கள் விஜய் பற்றிய செய்திகளை மட்டும் அறிய ஒரு சமூக பக்கம் தொடங்கவுள்ளனர்.

விரைவில் அந்த பக்கத்திற்காக அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனக்கு ஏற்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்திலேயே இருக்காது.. : விஷால்

எனக்கு ஏற்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்திலேயே இருக்காது.. : விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalஇந்தியா டுடே Conclave நிகழ்வில் R.K. நகர் தேர்தல் பற்றியும் , தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும் விஷால் வெளிப்படையாக பேசியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அவர் பேசியதாவது…

எனக்கு அரசியல் தொழில் அல்ல, அரசியலில் நான் சம்பாதிக்கவும் வரவில்லை. நான் ஓரு நடிகன்.

நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகம் புகழ் பெற்றவன். அவர்களை விட அதிகமாக சம்பாதிப்பவன். நான் அரசியலை தொழிலாக செய்ய வேண்டிய தேவையில்லை. R.K. நகர் தேர்தல் நடக்கும் போது என்னால் வீட்டில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் தேர்தல் களத்தில் நடப்பதை பார்த்துக்கொண்டு , இப்படி தான் என்னுடைய சமூதாயம் இருக்க போகிறது என்ற சொல்ல தோன்றவில்லை.

நான் வீட்டிலிருந்து வெளியே வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தேன். வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். வேட்பு மனுக்கு கையெழுத்துக்கள் தேவைப்பட்டது. அவற்றை சரியான நபர்களிடம் வாங்கி தான் தாக்கல் செய்தேன். ஆனால் நான் வேட்புமனு தாக்கல் செய்தது பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு R.K. நகரில் நிறைய ரசிகர் மன்றங்கள் உள்ளன.

தேர்தல் ஆணையத்தை என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க வைத்ததின் மூலம் நான் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதை எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.

நான் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேனா இல்லையா என்பது அடுத்த விஷயம் தான். குடியரசு வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனு இதுவரை நிராகரிக்கப்பட்டதில்லை.

என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துவிட்டேன். அவர்களால் தான் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார் விஷால்.

More Articles
Follows