இளையராஜா-மணிரத்னம்… பிறப்பிலும் இணைந்த நாள் இன்று..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்னக்கிளியில் தொடங்கி இன்று ஆயிரம் படங்களை கடந்தும் இசையுலகில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா.

இன்று அவர் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்து. தன் வாரிசுகளையும் இசைக்காகவே தாரை வார்த்தவர் இவர்.

முன்பெல்லாம் தூர்தர்ஷன் சேனல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

இந்திப்பாடல்கள் மட்டுமே அதில் ஒளிப்பரப்பாகும். அந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த தமிழனை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் நம் இளையராஜா.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

ஒரு சிலருக்கு பாடல்கள் மட்டும்தான் கைகொடுக்கும். ஆனால் பின்னணி இசையில் கைத்தேர்ந்தவர் இசைஞானி.

பின்னணி இசைக்காகவே தேசிய விருதுகளை வென்றவர் இவர்.

சமீபத்தில் கூட தாரை தப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காகத்தான் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வெறும் பின்னணி இசைக்கு மட்டும் என்னால் இந்த விருதை பெறமுடியாது என வாங்க மறுத்துவிட்டார்.

 

 

யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, ஜானகி, சித்ரா உள்ளிட்ட குரல்களை நம் செவிகளுக்கு தேனாக பாய்ச்சியவர்.

உலகத்திலுள்ள டாப் 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த ‘தளபதி’ பட பாடல் “ராக்கம்மா கையதட்டு” இடம் பெற்றிருந்தது. நான்கு முறை சிறந்த பாடலுக்கான இந்திய தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

‘தளபதி’ என்றால் அது மணிரத்னம் இல்லாமல் சாத்தியமாகுமா? ஆம்.. இன்று இளையராஜாவின் பிறந்தநாள் மட்டுமல்ல மணிரத்னத்தின் பிறந்தநாளும் கூட…

பகல் நிலவு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின்னர் ‘இதயகோயில்’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’ என தன் முத்திரையை பதித்தவர்.

கமலுடன் கைகோர்த்த நாயகன் படம் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

 

 

அதன்பின்னர் இவர் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ போன்ற படத்தின் காட்சிகளும் பாடல்களும் இன்று வரை கவிதை சொல்லும்.

இதில் அஞ்சலி படம் இளையராஜாவின் 500வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் ரஜினி-மம்மூட்டி என இரு சூப்பர் ஸ்டார்களை ‘தளபதி’ படத்தில் இணையவைத்து தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியவர் மணிரத்னம்.

‘மாஸ்’ ஹீரோவான ரஜினியை ‘க்ளாஸ்’ ஹீரோவாக காட்டியவர் மணி. இளையராஜா-மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி படம் ‘தளபதி’தான்.

அதன்பின்னர் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.

இனி இளையராஜா, மணிரத்னம் எப்போது இணைவார்கள் என்கிற கேள்வி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் எழாமல் இல்லை.

இவர்கள் நிழல் உலகில் இணையாமல் போனாலும் நிஜ உலகில் தங்கள் பிறப்பால் இணைந்தே இருக்கின்றனர். இது தெய்வத்தின் செயல்.

இந்த இரு துருவங்களையும் ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஜூன் 17ஆம் தேதிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் நடிகர் மட்டுமல்ல, மெகா ஹிட் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ்.

தேசிய விருதுகளை வென்ற காக்கா முட்டை, விசாரணை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது இவரது தயாரிப்பில் அம்மா கணக்கு படம் விரைவில் வெளியாகிறது.

இதனிடையில் வெளியான நானும் ரெடிளதான் படமும் கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இளையராஜா இசையில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள அம்மா கணக்கு வருகிற ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறதாம்.

இதில், அமலாபால், ரேவதி, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது ‘நில் பேட்டே சனாட்டா’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும். தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய்தான் இப்படத்தின் இந்தியில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போகும் கபாலி ரிலீஸ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள ரஜினியின் கபாலி வருகிற ஜுலை 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலாய் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

மலேசியாவில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியதால் இது மலாய் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

ஜுலை 1ஆம் தேதி, இஸ்லாமியர்களின் நோன்பு காலம் என்பதால், சம்பந்தப்பட்ட மதத்தினர் தியேட்டர்களுக்கு வரப்போவதில்லை.

அவர்களின் நோன்பு காலம் ஜுலை 5ம் தேதி தான் முடிவடைகிறதாம்.

எனவே, இப்படத்தின் மலாய் மொழி பதிப்பை மட்டும், ஒரு வாரம் கழித்து, அதாவது ஜுலை 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்க ஹீரோஸ் சம்பளத்தை குறைப்பார்களா..? வலுக்கும் எதிர்ப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் தயாரிக்கப்படும் படங்களில் பாதி பட்ஜெட் ஹீரோவின் சம்பளத்திற்கே ஒதுக்கப்படுவதாக வெகுநாட்களாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என மதுரை-ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இதன் சங்கத் தலைவர் செல்வின்ராஜ் தலைமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

  • சமீபகாலமாக வெளியாகும் பெரிய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை தரவில்லை.
  • எங்களை போன்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம். எனவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.
  •  ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை, தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். படம் வெற்றியடைந்து லாபம் கிடைத்தால் அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • ஒருவேளை நஷ்டமடைந்தால், அந்த பணத்தை விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரஜினிக்கு பயந்த சிவகார்த்திகேயன், விஜய்க்கு பின்னால் வருகிறார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லுங்கி கட்டிகிட்டு குனிஞ்சி நிற்கிற கபாலின்னு என்னை நினைச்சியா…? நான் கபாலிடா… என்று டீசரில் ரஜினி பன்ச் பேசியிருந்தார்.

அவர் அப்படி கூறியதாலோ என்னவோ? அப்படத்தின் இசை வெளியீட்டு தினத்தில் கூட மற்ற படங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட தயங்கி வருகின்றனர்.

ஜூன் 9ஆம் தேதி அன்று கபாலி பாடல்கள் வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயனின் ரெமோ பர்ஸ்ட் லுக் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரெமோ ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM Studios தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் அன்றைய தினத்தில் அனிருத் இசையமைத்துள்ள தீம் மியூசிக்கும் வெளியாகவுள்ளதாம்.

ஜூன் 22ஆம் விஜய்யின் பிறந்த நாள் என்பதால், மறுநாள் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறைவி சொல்லிட்டு இப்படி செய்யலாமா..? ராதாரவிக்கு நிஷா கேள்வி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் இறைவி. இப்படம் நாளை வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை தொகுப்பாளினி நிஷா தொகுத்து வழங்கினார்.

இப்படத்தில் நடித்துள்ள ராதாரவி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

படத்தின் கலைஞர்களை பற்றி கூறும்போது நிஷா இவரது பெயரை கூறவில்லை என்பதால், 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள தன்னை யாரோ ஒருவர் போல நிஷா அழைத்து விட்டார்.

தொகுப்பாளினிக்கு அழகும் வேண்டும் கூடவே அறிவும் வேண்டும்” என்று நிஷாவை மேடையிலேயே திட்டினார்.

ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு பலத்த தைட்டலும் கிடைத்தது.

இந்நிலையில் இதுகுறித்து நிஷா கூறியதாவது… ”அந்த விழாவில் நான் தொகுப்பாளினி மட்டுமே. படக்குழு கொடுத்த ஸ்கிரிப்ட்டில் ராதாரவியின் பெயர் இல்லை. எனவே நானும் சொல்லவில்லை.

அவர்களின் இறைவி படத்தில் பெண்களை மதிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் பொது மேடையில் ஒரு பெண்னை இப்படி ஒரு ஆண் திட்டியுள்ளார்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows