தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாளை மாலையும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.
இன்றைய நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு தங்கள் சினிமா பயணத்தில் இளையராஜாவின் பங்கு குறித்து பேசினர்.
நடிகர்கள் சிவகுமார், விஷால், மனோபாலா, நவரச நாயகன் கார்த்திக், ராதா, நதியா, சுஹாசினி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் மேடையேறி பேசினர்.
நடிகைகள் ரம்யா நம்பீசன், இனியா, நிக்கி கல்ராணி, ஆண்ட்ரியா, நமீதா உள்ளிட்டவர்கள் இளையராஜா பாடலுக்கு ஆடினர்.
நடிகைகள் சுஹாசினி, கஸ்தூரி, லட்சுமி பிரியா, அனுஹாசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார்.
‘ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டு இளையராஜா பேசினார்.
”உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என ஏஆர். ரஹ்மான் அவரை புகழ்ந்து பேசினார்.
இதில் திடீரென நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் ஒருவரான கஸ்தூரி அவர்கள் இளையராஜா பாடல் பாட ஏஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்.
அடுத்த கனமே `மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா..!’ என இளையராஜா பாட அதற்கேற்ப ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்ட அந்த இடமே அதிர்ந்தது.
Ilayaraaja 75 Highlights AR Rahman compose music of Ilayaraaja voice