தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படம் தொடங்கும்போது…. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு. புகைப்பிடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்களை பார்த்திருப்போம்.
சிகரெட் பாக்கெட்டில் இது போல போட்டு இருந்தாலே அதை பலரும் பின்பற்றுவதில்லை என்பதெல்லாம் வேறு கதை.
சரி. விஷயத்துக்கு வருவோம்.
மது மற்றும் புகை பிடிக்கும் வாசகங்களை தொடர்ந்து பெண்கள் மீது அனுமதியின்றி கை வைத்தால் அது குற்றம் என்ற வாசகத்தை அதுபோல் திரையில் போட வேண்டும் என தாதா87 படத்தின் டைரக்டர் ஸ்ரீவிஜய் தெரிவித்துள்ளார்.
சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 படத்தில் ஒரு முக்கியமான டயலாக் இடம் பெறுகிறது. பெண்கள் மீது கை வைத்தால் எரித்து விடுவேன் என்பதுதான்.
இதுகுறித்து டைரக்டர் ஸ்ரீவிஜய் பேசும்போது…
நாட்டில் தினம் தினம் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. சின்ன சின்ன சிறுமிகளை கூட விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கு என்ன தெரியும்.
அவர்களை விட மனநல பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் தொல்லை செய்கிறார்கள். அவர்களால் எப்படி அதை சொல்ல முடியும்.
எனவே பெண்கள் மீது அனுமதியின்றி கை வைத்தால் அது குற்றம் என போட வேண்டும்.
மது மற்றும் சிகரெட் நாமே பணம் கொடுத்து பெற்றுக் கொள்வது. மதுவையும் சிகரெட்டையும் அரசு தான் விற்பனை செய்கிறது.
அதற்கே அவர்கள் டைட்டில் எச்சரிக்கை போடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் அவர்கள் செய்யலாமே.” என பேசினார் தாதா 87 படத்தின் டைரக்டர் ஸ்ரீவிஜய்.
If You touch Girl I will burn You DhaDha87 team request Govt to approve Title Card