அரசியலுக்கு விஜய் வந்தால் அது காமெடிதான்; அட அவரே சொல்லிட்டாரா.?

அரசியலுக்கு விஜய் வந்தால் அது காமெடிதான்; அட அவரே சொல்லிட்டாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Vijay enters in politics it will be comedy says his father SACதமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து விட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து விஷால், விஜய் உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவரது தந்தை எஸ்.ஏ.சி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது…

“இப்போதுதான் சீனியர்களான ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளனர்.

விஜய்யும் அவர் அரசியலில் குதிக்கவேண்டும் என நான் நினைத்தேன், ஆனால் அதற்கு இது சரியான நேரமல்ல. இப்போது வந்தால் அது காமெடியாகிவிடும்.

எந்த ஒரு முடிவையும் தெளிவாக யோசித்து எடுக்க கூடியவர் விஜய். ஆனால் அவர் என்ன முடிவெடுப்பார் என்பது எனக்கு தெரியாது” என எஸ்.ஏ.சி பேசியுள்ளார்.

விஜய்யின் தந்தையே இப்படி சொல்லிவிட்டதால், இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை நம்புவோம்.

If Vijay enters in politics it will be comedy says his father SAC

ஜல்லிக்கட்டு படத்த போட்டு ஐபிஎல்ன்னு சொன்ன எச்.ராஜா.: சௌந்தராஜா கிண்டல்

ஜல்லிக்கட்டு படத்த போட்டு ஐபிஎல்ன்னு சொன்ன எச்.ராஜா.: சௌந்தராஜா கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundhar raja and H Rajaகாவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்தினர்.

அதையும் மீறி சென்னையில் போட்டி நடைபெற்றதால், நிறைய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

இதற்கு முன் நடிகர் சங்க போராட்டத்தின் போது மத்திய அரசு ரானுவத்தை அனுப்பினால் கூட அஞ்சமாட்டோம். காவிரிக்காக மானத் தமிழன் போராடுவான் என சத்யராஜ் ஆவேசமாக பேசியிருந்தார்.

இதனை கிண்டலடிக்கும் வகையில் போலீஸ்காரர்களால் சிலர் தாக்கப்படும் போது நடிகர் சௌந்தர ராஜா உள்ளிட்டவர்கள் கெஞ்சுவது போன்று ஒரு படத்தை பாஜக. வை சேர்ந்த எச். ராஜா ட்விட்டரில் ஒரு படத்தை போட்டுள்ளார்.

அதை போட்டுவிட்டு… இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம். (படத்தை பார்க்கவும்) என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதாவது ரானுவத்திற்கே அஞ்சமாட்டோம் என கூறும் தமிழர் கூட்டம் எப்படி போலீசுக்கு பயப்படுகிறது? என்பதை பார்த்தீர்களா? என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

ஆனால் அந்த போட்டோ 2017ல் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோ என அதில் இருக்கும் நடிகர் சவுந்தர ராஜாவே கூறியுள்ளார்.

Soundara Raja Actor‏ @soundar4uall 9m9 minutes ago

Replying to @HRajaBJP

என்ன சொல்ல ….இது மெரினா போராட்ட களத்தில் எடுத்த புகைப்படம் ..உங்க திறமை கண்டு வியக்கிறேன்…. வாழ்க ஜனநாயகம்

விவசாயம் விளையாட்டா போச்சா.? வெங்கட்பிரபுக்கு பாண்டிராஜ் கேள்வி

விவசாயம் விளையாட்டா போச்சா.? வெங்கட்பிரபுக்கு பாண்டிராஜ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Agriculture is not a game like Cricket says Pandiraj to Venkat Prabuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இதனிடையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றதால் இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நடந்த போராட்டம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “நேற்று நடந்தப் போராட்டங்களில் நிறைய பேர்களிடன் பொதுநலமின்றி சுயநலமே தெரிந்தது. அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் ப்ளீஸ்.. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டைரக்டர் வெங்கட்பிரபுவை டேக் செய்து “வெங்கட் பிரபு சார் சிஎஸ்கேவை ரசிங்க, அது உங்க உரிமை. விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இவரின் கருத்துக்கு பலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Agriculture is not a game like Cricket says Pandiraj to Venkat Prabu

நடிகர் சௌந்தரராஜா படத்தை போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா

நடிகர் சௌந்தரராஜா படத்தை போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundhar rajaகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் நடிகர் சங்க போராட்டத்தின் போது பேசியிருந்தார்.

அப்போது இராணுவத்தை அனுப்பி தமிழர்களை கட்டுப்படுத்த நினைத்தாலும் போராட தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசினார்.

சத்யராஜின் இந்த பேச்சை கலாய்க்கும் வகையில் பாஜக. வைச் சேர்ந்த எச் ராஜா அவர்கள் நடிகர் சவுந்தர ராஜா போலீசிடம் அடி வாங்கும் நிஜ போட்டோவை போட்டு… இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம். இதுதானா? என கிண்டலடித்துள்ளார்.

(படத்தை பார்க்கவும்)

க்யா ரே போலீஸுக்கு சப்போர்ட்டா.? ரஜினியை ரவுண்ட் கட்டும் மக்கள்

க்யா ரே போலீஸுக்கு சப்போர்ட்டா.? ரஜினியை ரவுண்ட் கட்டும் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini tweet made issue on Police attack TN peoples reaction to his statementசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

எனவே போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் காவல்துறையினரை தாக்கினர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலானது.

இந்த வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த்,

“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

ரஜினியை இந்த கருத்தை பலர் விமர்சித்துள்ளனர்.

இதுவரை ரஜினிக்கு வராத கோபம் இப்போது மட்டும் வருவது ஏன்? என பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் பதிவிட்டுள்ள சில பதிவுகளின் தொகுப்பு இதோ…

“ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற போது வராத கோபம்… புயலில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றாத அரசுகளின் மேல் வராத கோபம்… காவல்துறை எட்டி உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்தபோது வராத கோபம் ஏன் இப்போது மட்டும் வந்தது” என சிலர் கேட்டுள்ளனர்.

பல இடங்களில் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்துகிறார்கள். பொய் கேஸ் போடுகிறார்கள். ஹேல்மேட் போடாமல் சென்றால் தாக்குதல் கூட நடத்துகிறார்கள். அப்போது எங்கே சென்றார் ரஜினி என்றனர்.

சிலர் இப்போ மட்டும் இந்த பல்லி கத்துதா? என வடிவேலு டயலாக்கை பயன்படுத்தி ரஜினியை கிண்டலடித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் வேண்டுமென்றே காவல்துறையினர் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தினர். அப்போதெல்லாம் ரஜினி பேசவில்லையே. என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கூட சென்னை தி.நகரில் ஒரு வாலிபரை அவர் தாய் முன்பே போலீஸ் கட்டி வைத்து அடித்தனர். அந்த வாலிபர் மீது தவறு இருந்தால் வண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அபராதம் விதித்து இருக்கலாம்.

அல்லது அவன் மீது போக்குவரத்து சட்டப்படி தண்டனை அளித்திருக்கலாம். அந்த வீடியோ வைரலானது. ஆனால் அதைப்பற்றி ரஜினி கேட்கவில்லையே. என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் என்ற மனிதரை நடுநிலையாளராகவே மக்கள் பார்க்கின்றனர்.

அப்படியிருக்கும் போது போலீஸ் தரப்பு குற்றங்களையும் ரஜினி கண்டிக்கலாமே..? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Rajini tweet made issue on Police attack TN peoples reaction to his statement

காவலர்கள் மீது கைவைத்தால் கடுமையா தண்டிக்கனும்.: ரஜினி கண்டனம்

காவலர்கள் மீது கைவைத்தால் கடுமையா தண்டிக்கனும்.: ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public should not attack Police They should be punished says Rajiniஉச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.

தமிழகமே போராட்ட களத்தில் உள்ள போது ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் பல கடுமையான கட்டுபாடுகளுடன் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த போது சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்ட போது அந்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது… ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.

இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Public should not attack Police They should be punished says Rajini

rajini tweet police attack

More Articles
Follows