தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்கள் ஏற்படுத்திய பரபரப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.
இதற்கு பாஜக. எதிர்ப்பு தெரிவிக்க படம் வசூல் சாதனை புரிய தொடங்கியது.
இந்நிலையில் மெர்சல் படம் குறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது கூறியுள்ளதாவது…
மெர்சல் படத்தில் நீங்கள் நடித்திருந்தால் எழுந்த பிரச்சனைகளை எப்படி சந்தித்தித்து இருப்பீர்கள்? என நிருபர்கள் கேட்டுள்ளனர்.
நான் நடித்திருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
மெர்சல் படத்தை இப்போது வரை பார்க்கவில்லை அதனால் அதை பற்றி பேச முடியாது. பார்த்தால் படத்தை பற்றி பேசலாம்.
முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள்” எனவும் பதிலளித்தார் விஜயகாந்த்.