தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகை முதல் அனைத்து இணையத்தளங்களிலும் இதுபற்றிய விவாதங்களே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரபல ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.
இதற்கு, நடிகர் ரஜினிகாந்திற்கு தாம் ஆதரவு அளித்ததாக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என்றார்.
நெல்லையில் இதுகுறித்து அவர் கூறியதாவது…
என்னுடைய சமூகத்தை மாற்றக்கூடிய வகையில் நேர்மையாக செயல்பட்டு வருகிறேன்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, முக்கியமாக தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தலைமுறைகளை உருவாக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகிறோம்.
எந்த வகையிலும் அரசியலுக்கு வர நினைப்பவர்களை, ஆளுமைகளை நான் ஆதரித்து பேசியதில்லை” என்றார்.
IAS Officer Sagayam supports to Rajinikanth?