தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் “பேய் பசி” இதில் யுவனின் சகோதரர் ஹரிகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இவருடன் கருணாகரன்,டேனியல் பாலாஜி, அம்ருதா, ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் திரையுல பிரபலங்கள் பலரும் பங்கேற்று பேசினர்.
இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் படம் குறித்து கூறுகையில், “முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் சங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
இப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில…
“ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன்.
அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன்.
நான் இப்போது எல்லாம் நியூஸ் சேனல்களை பார்ப்பதில்லை. எங்கு பார்த்தாலும் நெகட்டிவ் நியூஸ்தான் அதிகமாக உள்ளது.
எனவே அதை தாண்டி அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியமாகி விட்டது. காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்.” என்று பேசினார்.
தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், “என் தந்தை 90 களில் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி.
யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னோட படம் என உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்தார்.” என்றார்.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசும் போது, “இயக்குநர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனு தான்.
நல்ல சினிமா அறிவு உடையவர். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னது தான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்ப்பார்க்கிறேன்.” என்றார்.
நடிகர் ஆர்யா பேசுகையில், “ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும்.” என்றார்.
ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது, “நானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டரில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. ஹரி சாதிப்பான்.” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது..
“சூது கவ்வும் படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும்படம் ஒன்றை பார்த்தேன். நல்ல திறமையாளர், அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பது எனக்கு பெருமை.” என்றார்.
ஹீரோ ஹரி பாஸ்கர் பேசுகையில், “நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குநருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம்.
எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது.” என்றார்.
I wont like to watch News Channels says Yuvan at Pei Pasi audio launch