ரஜினி-கமல் கட்சிகளில் இணைய மாட்டேன்… குஷ்பூ திட்டவட்டம்

ரஜினி-கமல் கட்சிகளில் இணைய மாட்டேன்… குஷ்பூ திட்டவட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont join in Rajini Kamals Political party says Kushbooநடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்துவிட்டார். விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அதுபோல் ரஜினிகாந்த்தும் ரசிகர்கள் சந்திப்புக்கு பின்னர் தன் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ அவர்கள் இதுகுறித்து கூறியதாவது…

காங்கிரஸ் கட்சியின் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. எனவேதான் அந்த கட்சியில் இணைந்தேன்.

நான் அரசியலில் இருக்கும்வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்.

கமல் என் 30 வருட நண்பர்தான். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் அதில் இணையமாட்டேன்.

அதுபோல் ரஜினி கட்சியில் இணைய அழைத்தாலும் இணையமாட்டேன்” என தெரிவித்துள்ளார் குஷ்பு.

I wont join in Rajini Kamals Political party says Kushboo

உண்மை சம்பவங்களை ஆராய்ந்து மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள ஔடதம்

உண்மை சம்பவங்களை ஆராய்ந்து மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள ஔடதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Owdatham movie audio launch and news updatesரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி.

சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்புடத்தக்கது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி, பெருதுளசிபழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ், நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பார்த்து பிரமித்த கீழக்கரை அஜ்மல்கான், இப்படத்தை வெளியிடுகிறார்.

Owdatham movie audio launch and news updates

Owdatham Movie Audio Launch Photos

தூய்மையே கடவுள்; நரேந்திர மோடிக்கு ரஜினி ஆதரவு

தூய்மையே கடவுள்; நரேந்திர மோடிக்கு ரஜினி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth extend his support to PM Modis Clean India Campaignபிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் ரஜினிகாந்த்தும் நட்புடன் பழகி வருகின்றனர்.

இருவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதும் முக்கியமான தருணங்களில் பேசிக் கொள்வதும நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்துக்கு எனது முழுஆதரவளிக்கையும் அளிக்கிறேன். தூய்மை கடவுள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth extend his support to PM Modis Clean India Campaign

Rajinikanth‏Verified account @superstarrajini
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness.

*நேர்மையாளர் கமல் எங்களுடன் இணைய வேண்டும்… – கெஜ்ரிவால்*

*நேர்மையாளர் கமல் எங்களுடன் இணைய வேண்டும்… – கெஜ்ரிவால்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind kejriwalஇன்று சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்…

“கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நேர்மையாக உள்ளனர்.

இணைந்து செயலாற்றுவது குறித்தும் விவாதித்தோம். நேர்மைக்கும், துணிவுக்கும் பேர் போனவர் கமல்ஹாசன்.

இந்த நாடு பெரும் ஊழலையும் வகுப்புவாதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த இரு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்துள்ளோம்.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வகுப்புவாதத்தை எதிர்க்கின்றனர்.

கமல் அரசியலுக்கு வரவேண்டும்” என்று தெரிவித்தார்.

*ஊழலுக்கு எதிரானவர்கள் என் உறவினர்கள்… கெஜ்ரிவாலை சந்தித்த கமல் பேட்டி*

*ஊழலுக்கு எதிரானவர்கள் என் உறவினர்கள்… கெஜ்ரிவாலை சந்தித்த கமல் பேட்டி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and arvind kejriwalஇன்று, சென்னை வந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இதன் பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூறுகையில்…

“கெஜ்ரிவால் என்னை சந்தித்தது பெருமை. நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விஷயங்கள் என்ன என்பதை உங்களால் யூகிக்க முடியும்.

ஊழலை எதிர்ப்பவர்கள் யாருமே என் உறவினர்களாகி விடுவார்கள் என்பது உண்மை.

அந்த வகையில் கெஜ்ரிவாலும் எனது உறவினர்.

எனது தந்தை இருந்த போது அரசியலுடன் இந்த வீட்டுக்கு தொடர்பு உள்ளது.

கெஜ்ரிவாலுடன் எனது சந்திப்பு சிலவற்றை தெரிந்து கொள்ள உதவியது” என்று கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா..?

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Devarakondaஅர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு பட நாயகன் விஜய் தேவரகொண்டா மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக விசாரித்த போது, “‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு மணிரத்னத்திற்கு வெகுவாக பிடித்திருந்தது உண்மை தான்.

அவரோடு ஒரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை மணிரத்னத்திற்கு உள்ளது.

ஆனால், அது விரைவில் தொடங்கவுள்ள புதிய படத்தில் இல்லை.

இருவரும் இணையும் மற்றொரு படம் உருவாக வாய்ப்பு இருக்கிறது.” என்று தெரிவித்தனர்.

More Articles
Follows