தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாரதிராஜா,
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கியுள்ளேன்.
இந்த பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள்.
ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
ஆனால் காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.
சத்யராஜ் பேசும்போது,
நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, ஆனால் தமிழகத்தில் வாழும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை, என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை.
என் வீட்டுக்கு ஐடி ரெய்டு வந்தால் பயப்படாமல் இருப்பீர்களா? என்று கேட்டுள்ளார். வருமான வரித்துறை வந்தாலும் என்னிடம் ஒன்றும் தேறாது.
காவிரி பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது” என்றார்.
I wont enter into politics So Tamilisai no need to fear says Sathyaraj