மக்களுக்கு சேவை செய்துக்கொண்டே உயிர் விட வேண்டும்.. : கமல்

மக்களுக்கு சேவை செய்துக்கொண்டே உயிர் விட வேண்டும்.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wish to serve to society till my last breath says Kamalhassanசென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும்.

பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.

மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும்.

மனிதனுக்கு பல பரிமாணங்கள் உண்டு, அதில் முக்கியமானது கலை. உங்களை போல கல்லூரி வாழ்க்கை அமையும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்துல் கலாம் மாணவர்களை நோக்கி கேட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கப் போகிறது. நான் ஒரு கலைஞன், எனக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை. யார் அந்த வேலையை செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருப்பதை விட நாமே அதை கையிலெடுக்க வேண்டும்.

மகளிர் தினம் என்று இந்த ஒரு நாளை மட்டும் கொண்டாடக் கூடாது. 365 நாட்களும் மகளிர் தினம் தான். பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்.

உலகமே யோசித்து கொண்டிருந்த வேளையில் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வந்தார். என் குடும்பத்தில் கூட பெண்கள் தான் அதிகம்.

என்னை பற்றி எனக்கு தான் தெரியும், என்னை நான் தான் அதிகம் விமர்சிப்பவன், விரும்புபவன். உங்களோடு அந்த மாணவர் கூட்டத்தில் மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.

மக்கள் நீதி மய்யம் உங்களை போன்ற இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறது. நீங்கள் இல்லாமல் இந்த நாடு முன்னோக்கி நகராது. உங்கள் பின்னால் நிற்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது. உங்களுக்கு சேவை செய்து கொண்டே என் உயிர் போக வேண்டும். சிறப்பான தமிழ்நாட்டில் நீங்கள் வாழ்வதை நான் பார்ப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

இங்கு நான் யாரையும் பின் தொடர்பவர்களாக பார்க்கவில்லை, எல்லோரும் நாளைய தலைவர்கள். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் நீங்கள் தான் அதை மலர வைக்க வேண்டும்.

பொது மக்கள் தான் மாற்றத்திற்கு உதவ முடியும். அரசியலை கவனியுங்கள், தவறாமல் வாக்களியுங்கள். இப்போது யாரும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அரசியலில் எல்லோரும் இருப்பீர்கள். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இருவரை நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சந்தித்தேன். அங்கு இருந்த 17 பேர் தமிழ்நாட்டுக்காக, என்னுடைய நம்பிக்கைக்காக திட்ட வரைவு உருவாக்குவதில் உதவியிருக்கிறார்கள்.

மய்யம் என்பது நடுவில் நிற்பது அல்ல, அது ஒரு தராசு முள் போன்றது. நடுவில் இருந்து இரண்டையும் கவனித்து நல்லவற்றின் பக்கம் நின்று நேர்மையான முடிவை எடுப்பது.

மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பொறுப்பு உங்களுக்கு புரியும். மிகவும் கடினமான விஷயம் அது” என்றார்.

இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் சாலிவாகனன், வேல்ஸ் பல்கலை கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், ப்ரீத்தா ஐசரி கணேஷ், கலா விஜயகுமார், சுனிதா நாயர், மோஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

I wish to serve to society till my last breath says Kamalhassan

kamal at ssn college

அறிமுகமாகும் போதே நோட்டா-வை செலக்ட் செய்த விஜய்

அறிமுகமாகும் போதே நோட்டா-வை செலக்ட் செய்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

??????????????????????????????????????????????????????????????விக்ரம் பிரபு நடித்த ’அரிமா நம்பி’ மற்றும் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர்.

இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது தனது 3வது படத்தில் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறார்.

இப்படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயரிட்டு சற்றுமுன் இந்த போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார்.

சத்யராஜ், நாசர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.

Vijay Deverakonda first Tamil debut titled NOTA

nota

இணையத்தில் வைரலாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக்

இணையத்தில் வைரலாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DXvbfFSV4AAwXnQதனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 3 பாகங்களாக உருவாகியுள்ள படம் வடசென்னை.

தற்போது இதன் முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

ஹீரோ, வில்லன் என தனித்தனியாக யாரும் இல்லாமல், எல்லாருக்கும் எல்லா குணமும் உள்ளப்படி இப்படத்தை எடுத்துள்ளனர்.

இன்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் மாறுபட்ட லுக் அவர்களது ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ்ப்படம் 2.0 பாடல் வெளியீடு; டென்ஷனில் சிம்பு-தனுஷ் ரசிகர்கள்

தமிழ்ப்படம் 2.0 பாடல் வெளியீடு; டென்ஷனில் சிம்பு-தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TP2point0கடந்த 2010ஆம் ஆண்டு அமுதன் இயக்கி சிவா நடிப்பில் வெளியான படம் தமிழ்ப்படம்.

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு தமிழ்ப்படம் 2.0 என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தில் சிவா உடன் திஷா பாண்டே, சந்தான பாரதி, மனோபாலா, சுந்தர் ராஜன், நிழல்கள் ரவி, சேட்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை இன்று மார்ச் 8ல் மகளிர் தினத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடல் கூட அண்மையில் வெளியான சில பாடல்களை கலாய்க்கும் வகையிலும் பெண்களின் சூப் சாங் ஆக உருவாகியுள்ளது.

சிம்பு நடித்த வானம் படத்தில் எவன்டி உன்ன பெத்தான் என்ற பாடல் வந்திருந்தது. அதுபோல் தனுஷ் நடித்த 3 படத்தில் பாய்ஸ் சூப் சாங் என்ற கொலவெறி பாடல் இடம் பெற்றிருந்தது.

தற்போது இந்த இரண்டு பாடல்களையும் கிண்டலடிக்கும் வகையில் எவடி உன்ன பெத்தா? அவன் கையில கிடச்சா செத்தான் எனவும் ஆண்களை திட்டியும் பாடலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியில் எங்கிருந்தாலும் நல்லா இருங்கடா என்று பாடலை முடித்துள்ளனர்.

இந்த பாடல் சிம்பு, தனுஷ் ரசிகர்கள் வருத்தமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் வந்தால் யார்? யாரை எப்படியெல்லாம் கலாய்க்க போறாங்களோ-? தெரியலையே…

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ட்விட்டரில் நீக்கிய அரசியல்வாதி ரஜினி

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ட்விட்டரில் நீக்கிய அரசியல்வாதி ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 4 ஆண்டுகளாக ட்விட்டரில் மட்டுமே அக்கௌண்ட் வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று முதல் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த இரண்டிலும் Rajinikanth என்றே அவரது அக்கௌண்ட் உள்ளது.

ஆனால் ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றே இருக்கும்.

இந்நிலையில் இன்று திடீரென @superstarrajini என்ற அக்கௌண்டில் சூப்பர் ஸ்டாரைத் தூக்கிவிட்டு ரஜினிகாந்த் என மாற்றம் செய்துள்ளார். அதாவது, @rajinikanth என மாற்றியுள்ளார்.

விரைவில் ரஜினி தனது கட்சியை அறிவிக்க உள்ளதால், ரசிகர் மன்றம் முதல் பல மாற்றங்களை செய்து வருகிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 116 ட்வீட்டுகளைப் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஒரு ரீட்வீட் கூட செய்யவில்லை.

அவரை ட்விட்டரில் மட்டும் 45 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்ய, அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.

நரேந்திர மோடியின் இரண்டு கணக்குகள், அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அனிருத், செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரைத் தவிர மற்ற எல்லாமே செய்தி நிறுவனங்களைத்தான் அவர் பின்தொடர்கிறார் என்பதும் இங்கே கவனித்தக்கது.

பெரியார் பற்றி எச்.ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனமானது… ரஜினி

பெரியார் பற்றி எச்.ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனமானது… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and H Rajaதிரிபுராவில் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற வகையில் பாஜக எச்.ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அன்று இரவே பெரியார் சிலை ஒரு சில இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேலும் பல எதிர்ப்புகள் எச்.ராஜா மீது கிளம்ப, அந்த பதிவை நான் செய்யவில்லை. என் அட்மின்தான் செய்தார் என பல்டி அடித்தார்.

இதை நடைபெற்று 2 நாட்கள் மௌனம் காத்த ரஜினிகாந்த், இன்று அது குறித்து கூறியுள்ளார்.

”பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்தார்.

தற்போது இந்த விவகாரம் அமைதியாகிவிட்ட நிலையில் இது பற்றி பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

More Articles
Follows