புதுப்பேட்டை2-வை விட ஆயிரத்தில் ஒருவன்2 எடுக்க ஆசைப்படும் செல்வராகவன்

புதுப்பேட்டை2-வை விட ஆயிரத்தில் ஒருவன்2 எடுக்க ஆசைப்படும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I Wish to direct sequel of Aayirathil Oruvan instead of Pudhupettai says ‎Selvaraghavanவித்தியாசமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தந்து கொண்டிருப்பவர் டைரக்டர் செல்வராகவன்.

இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த கான் திரைப்படம் என்னானது? என்பதே தெரியவில்லை.

மேலும் சந்தானத்துடன் ஒரு படம், எஸ்ஜே. சூர்யாவுடன் ஒரு படம் என கமிட் ஆனார் செல்வராகவன்.

அதன்பின்னர் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இரண்டாம் பாகம் சீசன் என்பதால் இவரின் சூப்பர் ஹிட்டான புதுப்பேட்டை படத்தின் 2ஆம் பாகம் வருமா? என பல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அதற்கு தன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார் செல்வராகவன்.

அவர் கூறியதாவது…

“வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன்.

ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என கூறியுள்ளார்.

I Wish to direct sequel of Aayirathil Oruvan instead of Pudhupettai says ‎Selvaraghavan

Exclusive விஸ்வாசம் படத்தில் *தூக்கு துரை* பெயர் காரணம் இதுதான்

Exclusive விஸ்வாசம் படத்தில் *தூக்கு துரை* பெயர் காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thooku Durai The Reason behind Ajith name in Viswasamசிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் திருநாளில் ரிலீஸாகிறது.

சத்யஜோதி தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது.

அதில் தம்பி ராமையா நொடிக்கு ஒரு முறை தூக்கு துரைன்னா அடாவடி, தூக்கு துரைன்னா அலப்பரை, தூக்கு துரைன்னா தடாலடி என்பார்.

அப்படியென்றால் இதில் அஜித்தின் பெயர் தூக்கு துரை என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த பெயரை அஜித்துக்கு வைக்க என்ன காரணம்? தெரியுமா..?

மதுரை மாவட்டத்தி உள்ள ஒரு காவல் தெய்வத்தின் (தீர்த்தபதியார்) பெயர்தானாம் இது.

எனவே கதைப்படி ரவுடிகளிடமிருந்து மதுரை மக்களை காக்கும் ஒருவராக அஜித் இருப்பார் என்பது தெரிகிறது.

Thooku Durai The Reason behind Ajith name in Viswasam

விஜய் மற்றும் அட்லியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

விஜய் மற்றும் அட்லியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara team up with Vijay for Thalapathy 63விஜய் – அட்லி – ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் 3வது உருவாகவுள்ள படம் தளபதி 63.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார்.

முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்பதை படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வில்லு படத்தில் விஜய்யுடன் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா.

அதுபோல அட்லி இயக்கிய ராஜா ராணி படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara team up with Vijay for Thalapathy 63

குழந்தைகள் நலனில் எந்த அரசும் கவனம் செலுத்தவில்லை. : ரஜினி

குழந்தைகள் நலனில் எந்த அரசும் கவனம் செலுத்தவில்லை. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Speech about Child abduction At Grand Concert Chennaiசென்னை திருவான்மியூரில் நடைபெற்ற குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை லதா ரஜினிகாந்த் நடத்தினார்.

அதில் அவரது கணவரும் திரையுலக சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அவருடன் லதா ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரஜினி உள்ளிட்டவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது…

நாட்டின் எதிர்காலமே குழந்தைகள்தான். பூமியில் நடமாடும் பூக்கள் குழந்தைகள்.

சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச்சென்று யார் இவ்வாறு செய்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்துவதில்லை குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதைவிட பெரிய குற்றம்.

குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் செயலுக்கு பின் ஒரு பெரிய மாஃபியா இருக்கிறது.

குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்
குழந்தைகள் நலனை மத்திய அரசும் மாநில அரசும் சரியாக கவனிக்கவில்லை “ என குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் பேசினார்.

Rajini Speech about Child abduction At Grand Concert Chennai

Rajini Speech about Child abduction At Grand Concert Chennai

கஜா புயல் பாதித்த கார்காவயல் கிராமத்தை தத்தெடுக்கும் விஷால்

கஜா புயல் பாதித்த கார்காவயல் கிராமத்தை தத்தெடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal adopt village from Pattukottai which affected by Gaja Cycloneகடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

கஜா தாக்கிய வேதாரண்யம், கோடியக்கரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் கஜா துயரத்தில் இருந்து நீங்கவில்லை.

குடிக்க தண்ணீர் இன்றி, மின்சாரம் இன்றி, உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் நிவாரண நிதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுக்க விஷால் முன்வந்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கார்காவயல் ஊராட்சி, கார்காவயல் கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன். அங்கு 450 குடும்பங்கள் உள்ளன. வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தந்து சூரியசக்தி மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.

தத்தெடுக்கும் கார்காவயல் கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என விஷால் உறுதியுடன் கூறியுள்ளார்.

Vishal adopt village from Pattukottai which affected by Gaja Cyclone

கஜா புயல் நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம்; தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் நிவாரண நிதிக்கு அஜித் ரூ.15 லட்சம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajith contributes Rs 15 lakhs to Gaja cyclone reliefகஜா புயலால் பாதிப்படைந்த மக்களின் துயரங்களை நீக்க நிவாரண நிதிகளை பலரும் வாரி வழங்கி வருகின்றனர்.

தமிழக நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.

ஜிவி. பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் நேரடியாக களத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழக அரசும் ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் நிதியை ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது.

இதைத்தொடர்ந்து 2.0 பட தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்குமார் இதுவரை நிதி வழங்கவில்லை என பலரும் அவரை விமர்சித்தனர். தற்போது அரசு அறிவிப்பு வெளியான பின்னரே இது பலருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ajith contributes Rs 15 lakhs to Gaja cyclone relief

ajith contribution 15 lakhs to Gaja cyclone relief

More Articles
Follows