தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தன் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டு 6 கைகள் இணைந்த கட்சி கொடியை சின்னத்துடன் அறிமுகப்படுத்தினார்.
கட்சி தொடங்கும் அன்று ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார்.
அதன்பின்னர் அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார்.
பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.
அன்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதுதான் தன் கட்சியை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிடமும் கமலின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “ .ராமேஸ்வரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர் தான் கமல்.
அப்துல்கலாம் வீட்டுக்குச் சென்றவருக்கு, அங்கு இருக்கும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லக்கூட நேரமில்லை.
ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை கூட வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி.
இருந்த போதிலும் புதியதாக கட்சித் துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.