தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சி பெயரை ஆரம்பித்துவிட்டு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சி பணிகளை கவனித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
தற்போது இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என தெரிவித்துள்ளார் ரஜினி.
இந்நிலையில் கமல், ரஜினிக்கு நெருக்கமான நடிகர் பிரபு அவர்கள் இவர்களில் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்துள்ளார்.
வேலூரில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரபு கூறியதாவது…
என்னுடைய தந்தையை வாழ வைத்தது, வேலூர்தான். என் அப்பாவின் மீது வைத்துள்ள பாசத்தில் தான் இவ்வளவு ரசிகர்கள் என்னை பார்க்க வந்துள்ளனர். எல்லாருக்கும் நன்றி.
சினிமாவில் இருந்துதான் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசியலுக்கு வந்தனர். அவர்களை போல ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளனர். இதில் ஒன்றும் தவறில்லை.
இருவரும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமானவர்கள். 2 பேரும் அரசியலில் நல்ல முறையில் வர, அப்பாவையும் கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு அழைத்தால் 2 பேருக்கும் ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன்.” இவ்வாறு பிரபு கூறினார்.
I will support Rajini and Kamal in politics says Prabu