எல்லா தருணத்திலும் தன்னுடன் நிற்கும் ரசிகர்களுக்கு கைமாறு செய்யும் சூர்யா

எல்லா தருணத்திலும் தன்னுடன் நிற்கும் ரசிகர்களுக்கு கைமாறு செய்யும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன.

நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார்.

20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ பதிலளிக்கத் தயாராக உள்ளார்.

ஜெய் பீம்’ திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது,…

“24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன்.

ஆனால் எனது ரசிகர்கள் எல்லா தருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் தனது அனுபவம் பற்றி சூர்யா கூறுகையில், …

“இந்தத் திரைப்படம் மற்ற படங்களைப்போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை.

இது எனக்கு சவாலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நிச்சயமாக இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்தில் நடித்துள்ளதே ஒரு பொறுப்பான செயல் தான்.

இனிவரும் காலங்களிலும் நான் எனது ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க விடும்புகிறேன்” என்றார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் சிந்தனையைத் தூண்டும் கதைக்களம் கொண்டது. கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது.

தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

I want to reciprocate the love I’ve received from fans and audiences by doing good films: Suriya

பவர் ஸ்டார் அப்பு என்ற புனீத் ராஜ்குமார் காலமானார்.; மாரடைப்பு முதல் மரணம் வரை திக் திக் நிமிடங்களுடன் வாழ்க்கை வரலாறு..

பவர் ஸ்டார் அப்பு என்ற புனீத் ராஜ்குமார் காலமானார்.; மாரடைப்பு முதல் மரணம் வரை திக் திக் நிமிடங்களுடன் வாழ்க்கை வரலாறு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரைப்பட முன்னணி நடிகரும் கன்னட சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.

கன்னட திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமார். சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார் ராஜ்குமார் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

ராஜ்குமாருக்கு 3 மகன்கள். மூவரும் நடிகர்கள் தான்.

2வது மகன் சிவராஜ்குமார் மற்றும் 3வது மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எனலாம்.

சென்னையில் பிறந்தவர் புனீத். தற்போது அவருக்கு வயது 46.

வழக்கம்போல இன்று காலை ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடத்துக்கு) சென்று பயிற்சி செய்தததில் புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

முதலில் லேசான வலி வந்தபோது அவர் சீரியசாக எடுக்கவில்லையாம். அதன்பின்னர் வலி அதிகரித்த நிலையில் தான் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்போதே மிகவும் ஆபத்தான நிலையில் தான் இருந்தாராம்.

உடனே ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளித்ததாக விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் தெரிவித்தார்.

அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த தகவலறிந்ததும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனால் கர்நாடகமே பதட்டமானது.. பெங்களூர் மங்களூர் மைசூரு உள்ளிட்ட நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

இன்று மதியம் 2.00 மணியளவில் தான், புனித் ராஜ்குமார் மரணமடைந்த செய்தி அறிவிக்கப்பட்டது.

புனித்தின் மறைவு செய்தி அறிந்து கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, தியேட்டர்களை மூட உத்தரவு.

அவரின் வாழ்க்கை ஒரு பார்வை..

பவர் ஸ்டார் என்ற அப்பு:

ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சிறுவயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். 30ம் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

1985ம் ஆண்டு பெட்டடா ஹூவு என்ற படத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார்.

இவையில்லாமல் சலிசுவா மொதகழு, எர்ரட நக்ஷத்ரகழு போன்ற படங்களுக்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் வென்றிருக்கிறார்.

கடந்த 2002ம் ஆண்டில் தான் அப்பு என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

ரசிகர்கள் அவரை அப்பு என செல்லமாக அழைக்க தொடங்கினர்.

அபி, வீர கன்னடிகா, அஜய், அரசு, ராம், ஹுதுகரு, அஞ்சனி புத்ரா போன்ற படங்கள் இவரது பெயர் சொல்லும்.

இவரின் நடிப்பில் உருவான யுவரத்னா சில மாதங்களுக்கு முன் ரீலிசானது.

1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்தார்.

சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்கள்தான்.

இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்கள் தான்.

இவர்கள் குடும்பத்தில் புனித் ராஜ்குமாருடன் சேர்த்து 12 பேர் திரைத்துறை பிரபலங்களாக உள்ளனர்.

Kannada Superstar Puneeth Rajkumar passes away at 46 due to cardiac arrest..

Karnataka Government has ordered to immediately close the Theatres and has announced high alert..

புனீத் ராஜ்குமார் நடித்த திரைப்படங்கள்
********************************************

1. Premada 1976

2. Sanaadi 1977

3. Thayige Thakka Maga 1978

4. Vasantha Geetha 1980

5. Boomige Banda Bhagavantha 1981

6. Bhagyavantha 1981

7. Hosa Belaku 1982

8. Chalisuva Modagalu 1982

9. Bhakta Prahlada 1983

10. Eradu Nakshatragalu 1983

11. Yarivanu 1984

12. Bettada Hoovu 1985

13. Shiva Mecchida Kannappa 1988

14. Parashuram 1989

15. Appu 2002

16. Abhi 2003

16. Veera Kannadiga 2004

17. Maurya 2004

18. Aakash 2005

19. Namma Basava 2005

20. Ajay 2006

21. Arasu 2007

22. Milana 2007

23. Bindaas 2008

24. Vamshi 2008

25. Raaj – The Showman 2009

26. Raam 2009

27. Prithvi 2010

28. Jackie 2010

29. Hudugaru 2011

30. Paramathma 2011

31. Anna Bond 2012

32. Yaare Koogadali 2012

33. Ninnindale 2014

34. Power 2014

35. Mythri 2015

36. Rana Vikrama 2015

37. Chakravyuha 2016

38. Doddmane Hudga 2016

39. Raajakumara 2017

40. Anjani Putra 2017

41. Humble Politician Nograj 2018

42. Natasaarvabhowma

2019

43. Padde Huli 2019

44. Mayabazar 2016

2020

45. Yuvarathnaa 2021

46. James 2021

47. Dvitva 2022

#PuneethRajkumar @PuneethRajkumar

Power Star Puneeth Rajkumar passed away

சூரி-சூர்யா படங்களை முடித்துவிட்டு விஜய்.? கமல்.? வெற்றிமாறன் வெய்ட்டிங்

சூரி-சூர்யா படங்களை முடித்துவிட்டு விஜய்.? கமல்.? வெற்றிமாறன் வெய்ட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூரி கதாநாயகனாகவும் மற்றும் விஜய்சேதுபதி கதையின் நாயகனாகவும் நடித்து வரும் திரைப்படம் ’விடுதலை’.

இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இதனையடுத்து தானு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.

இப்பட ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் விரைவில் விஜய் மற்றும் கமல் படங்களை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன்…

‘என்னுடைய மற்ற பணிகளை முடித்துவிட்டு வாருங்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்தேன்.

அவர் என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் பற்றி கேட்டார்.

அவருடன் கதை கலந்துரையாடல் நடந்துவருகிறது. என தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் கமல்ஹாசன் மற்றும் விஜய் படங்களை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கலாம்.

Vetrimaaran to direct Vijay and Kamal films?

அட்லி இயக்கும் ஷாரூக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா.?

அட்லி இயக்கும் ஷாரூக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிக்கும் ’லயன்’ என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

அண்மையில் ஷாருக்கான், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாம்.

தற்போது ஆர்யன்கான் ஜாமீனில் வெளியே வந்தாலும் இன்னும் சூட்டிங் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நயன்தாராவின் கால்ஷீட் தேதிகள் வீணாகிவிட்டதாம்.

இதனால் நயன்தாரா படத்திலிருந்து விலகக்கூடும் எனவும் அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் எனவும் தகவல்கள் வந்தன.

ஆனால் அந்த தகவல்கள் உண்மையில்லை எனவும் நயன்தாராவே படத்தில் தொடர்வார் எனவும் புதிய தகவல்கள் வந்தள்ளன.

Samantha to replace Nayanthara in SRK – Atlee film ?

ஷங்கர் பட ஹீரோயினுக்காக காத்திருக்கும் தளபதி 66 படக்குழு..?

ஷங்கர் பட ஹீரோயினுக்காக காத்திருக்கும் தளபதி 66 படக்குழு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் மகேஷ் பாபு மகள் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கியாரா தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Shankar film heroine to romance with Vijay ?

ஓடிடி-க்கு ஓடிய ஹிப் ஹாப் ஆதி..; சிவகுமாரின் சபதம் (சாபம்) காரணமா.?

ஓடிடி-க்கு ஓடிய ஹிப் ஹாப் ஆதி..; சிவகுமாரின் சபதம் (சாபம்) காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அண்மையில் தயாரித்த படம் ‘சிவகுமாரின் சபதம்’.

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து பாடி ஆடி வெளியான படம் இது.

ஆனால் இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களால் தோல்வியை சந்தித்தது.

அந்த படம் உருவாகும் போதே ஹிப் ஹாப் ஆதியுடன் அடுத்த பட தயாரிப்பு பணிகளையும் தொடங்கியது சத்யஜோதி நிறுவனம்.

‘அன்பறிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கி வருகிறார்.

வழக்கம்போல ஆதி படத்திற்கு ஆதியே இசையமைத்துள்ளார்.

மேலும் ஹிப் ஹாப் ஆதியே கதையை எழுதி இருக்கிறாராம்.

‘அன்பறிவு’ படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஆகியோர் ஆதியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ் பணி புரிந்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறத.

இந்த நிலையில் இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

பிரபல ஓடிடி நிறுவனம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

சிவகுமாரின் சபதம் தியேட்டர் வெளியீட்டில் எதிர்ப்பார்த்த லாபத்தை தரவில்லை என்பதால் இந்த படத்தை ஓடிடிக்கு விற்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Hip hop Aadhi’s next film to release in OTT

More Articles
Follows