தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990 களில் வெளியான ‘பார்வதி என்னை பாரடி’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தவர் சரவணன்.
அதன் பின்னர் படங்களே இல்லாமல் இருந்த அவருக்கு கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ பட பெரும் பெயரை பெற்று தந்தது. அதில் அவர் ஏற்ற சித்தப்பு கேரக்டர் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
பின்னர் சில படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நடித்த ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் கௌதம் கார்த்திக் – வெண்பா நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் இவர்களின் தந்தையாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தன் குடும்ப விவகாரம் குறித்து புகார் மனு அளித்திருந்தார் நடிகர் சரவணன்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..
“எனக்கு இரு மனைவிகள். முதல் மனைவியிடம் எனக்கு குழந்தை இல்லை என்பதால் 2015 இல் நான் மறுமணம் செய்தேன்.
சென்னை – போரூர் முகலிவாக்கத்தில் 2014 இல் லேக்வியூ அபார்ட்மென்டில் செண்பகராமன் என்பவரிடம் இரு பிளாட்களை வாங்கினேன். இதை எனக்கு முடித்துக் கொடுத்தவர் புரோக்கர் ராமமூர்த்தி.
4 பிளாக்குகளில் தலா 4 வீடுகள் இருந்தன. நான் இரு வீடுகளை வாங்கியதால் எனக்கு 2 கார் பார்க்கிங் கொடுக்கப்பட்டது.
இரு வீட்டின் யூடிஎஸ் எனக்கு 700 அல்லது 800 சதுர அடி வரும்.
இரண்டாவது மனைவி வந்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு தகராறு ஏற்பட்டதால் இந்த வீட்டுக்கே நான் வருவதை நிறுத்திக் கொண்டேன்.
நான் இங்கு இல்லாததை பயன்படுத்தி ராமமூர்ததி என்பவர் கார் பார்க்கிங்கில் ஒரு கடையை கட்டி அதற்கு மின் இணைப்புடன் அந்த இடத்திற்கு வரி கட்டி விட்டதாகவும் கூறியிருந்தார். இப்படியாக என்னை ஏமாற்றி வந்தார்.
ராமமூர்த்தியின் மனைவி என் இடத்தில் இருந்து கொண்டு என்னை வெட்டுவேன் குத்துவேன் என்கிறார். ராமமூர்த்தி & அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் பெயரில் புகார் கொடுத்துள்ளேன்.
இந்த பிரச்சினை குறித்து அமைச்சர் தாமோ அன்பரசன் அவரிடம் மனு கொடுத்தேன்.” என்றார்.
நடிகர் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ, ராமமூர்த்தி, மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
“நான் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ. அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை.
என்னை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டார்,
ஒரு பெண்ணை வீட்டோட வைத்துக் கொண்டு என்னை டென்ஷன் செய்கிறார்.
எனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை சரவணன். அப்புறம் எப்படி அவருக்கு 2வது மனைவி வருவாங்க.
அவர் அந்த பெண்ணை கீப் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை.
அந்த வீட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன். நான் சம்பாதித்த காசில் அவர் பெயரில் நான் வாங்கினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.
ரூ. 12 லட்சம் ரூபாய் நான் கட்டினேன். மீதமுள்ள 36 லட்சம் பணத்திற்கு லோன் போட்டுள்ளேன். அதற்கு EMI நான்தான் கட்டி வருகிறேன்.
‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு சினிமா சான்ஸ் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார். நான்தான் அவருக்கு சோறு போட்டேன். இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் கூறியிருக்கிறார்.”
இவ்வாறு சரவணன் மனைவி சூர்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
I provided food to Saravanan who pretended to beg – First wife Suryashri