நட்புக்காகவும் வரலட்சுமிக்காகவும் வந்தேன்; விஷால் ஓபன் டாக்

நட்புக்காகவும் வரலட்சுமிக்காகவும் வந்தேன்; விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalakshmiகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

நவரச நாயகன் கார்த்திக் அரவது மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்துள்ள படம் இது.

திரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகிகளாக ரெஜினா கசாண்ட்ரா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இதில் படக்குழுவினருடன் சூர்யா, விஷால், சாந்தணு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் விஷால் பேசும் போது,

ஒருவரின் குழந்தை பருவ ஆசையை நிறைவேற்றி வைப்பது என்பது பெரிய விஷயம்.

அந்த வகையில் சூர்யாவின் சிஸ்டர் பிருந்தா சிவக்குமாரின் ஆசையை தற்போது நிறைவேற்றி வைத்த்திருக்கிறார் இந்த Mr சந்திரமௌலி. அவருக்கு வாழ்த்துக்கள்.

மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது கார்த்திக் சார் உறுதுணையாக இருந்தார்.

அவருடன் பலரும் உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம்.

என் 3 படங்களை நண்பர் திரு இயக்கியுள்ளார். அவருடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளேன்.

அவரின் நட்புக்காகவும், வருவுக்காகவும் (வரலட்சுமி) தான் இங்கு வந்தேன்” என்று பேசினார் விஷால்.

I participated in Mr Chandramouli audio launch because of Varalakshmi says Vishal

சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை வாங்கியது ஸ்டார் விஜய் டிவி

சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை வாங்கியது ஸ்டார் விஜய் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Star Vijay tv bagged Rajinis Kaala Satellite Rights

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2வது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது.
உலகம் முழுவதும் 7,200க்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட வேலைகள் நடக்கின்றன.

இதன் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் ஏற்கெனவே அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில், இதன் டிவி உரிமையை அதிவிலைக்கு வாங்கியிருக்கிறார்கள் ஸ்டார் குழுமத்தினர் (விஜய் டிவி) அனைத்து மொழிகளுக்கும் வாங்கியுள்ளனர்.

இதனை அதிகாரப்பூர்வமாக தனுஷ் மற்றும் விஜய் டிவி அறிவித்துள்ளனர்.

Star Vijay tv bagged Rajinis Kaala Satellite Rights

சினிமாவில் தடம் பதிக்க வரும் சூர்யா-கார்த்தியின் தங்கை பிருந்தா

சினிமாவில் தடம் பதிக்க வரும் சூர்யா-கார்த்தியின் தங்கை பிருந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

brindha sivakumarநடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்.

அவரைப் போல் அவரது இரு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் பாண்டிராஜ் இயக்கி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி நடிக்க சூர்யா தயாரித்து வருகிறார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் தற்போது விதவிதமான கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களின் தங்கை பிருந்தாவும் சினிமாவில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் சந்திரமௌலி என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இப்படத்தில் இடம்பெறும் சந்திரமௌலி என்ற பாடலை பிருந்தா சிவகுமார் பாடியுள்ளாராம்.

இந்த விழாவில் சிவகுமார் குடும்பத்தார் கலந்துக் கொண்டனர்.

இந்த படத்தில் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க, திரு என்பவர் இயக்க, தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

மீண்டும் சசிகுமாரை மிரட்டும் வில்லனாக தயாரிப்பாளர் இந்தர் குமார்

மீண்டும் சசிகுமாரை மிரட்டும் வில்லனாக தயாரிப்பாளர் இந்தர் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasi kumar and inder kumarஅருண் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் “குற்றம் 23”.

இந்த படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.

இவர் தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து ‘தடம்’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் புதிய படத்தை இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளாராம்.

இவர் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைப்பு; இதான் காரணமா.?

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைப்பு; இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bhaskar oru rascalமலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் வில்லனாக பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.

அம்ரீஷ் இசையமைக்க, விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தற்போது மே 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.

இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படம் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாகவும், எல்லா பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்படத்தினை ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக படக்குழு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஹர்ஷினி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தினை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.

நியூஸ் சேனல்களுக்கு சினிமா விளம்பரம் கட்; ஸ்ரீரெட்டியால் வந்த வினை

நியூஸ் சேனல்களுக்கு சினிமா விளம்பரம் கட்; ஸ்ரீரெட்டியால் வந்த வினை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sri reddyதெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல புதுப்படங்கள் வெளியானாலும். பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் நடிகை ஸ்ரீ ரெட்டியின் புகார்கள்தான்.

இவர் அண்மையில் முன்னணி நடிகரான பவன்கல்யாண் பற்றியும், அவரது அம்மா பற்றியும் அசிங்கமாகப் பேசியிருந்தார்.

அவரை அப்படி பேச வைத்தது நான்தான் என இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

தன்னுடைய அம்மாவைப் பற்றி அவதூறாகப் பேசியது மன்னிக்க முடியாதது என அதுபற்றி செய்தி ஒளிபரப்பிய சேனல்களைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டார் பவர் ஸ்டார் பவன்கல்யாண்.

தற்போது இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இனி தெலுங்கு செய்தி சேனல்களுக்கு சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் வழங்கக் கூடாதென முக்கிய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பெரும்பாலான செய்தி சேனல்கள்தான் சினிமா விளம்பரங்களால் நல்ல வருமானத்தை ஈன்று வருகின்றன.

தங்களிடம் வருமானத்தையும் வாங்கிக் கொண்டு திரையுலகத்தைச் சார்ந்தவர்களை தரக் குறைவாக விமர்சிப்பது சரியல்ல என தயாரிப்பாளர்கள் தரப்பு கடுப்பில் உள்ளதாம்.

More Articles
Follows