தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நேரடி மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ‘கலை மற்றும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் விஜய் சேதுபதி.
அவர் பேசும்போது… “நான் நடித்த படங்களை நான் பார்ப்பதில்லை. காரணம், என்னுடைய நடிப்பு எனக்கே பிடிக்காது. கடந்த 5 ஆண்டுகளாக தான் நடித்த படங்களையே பார்க்கவில்லை
‘மாஸ்டர்’ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. என்னை நானே பார்ப்பது வெட்கமாக இருந்தது.
மக்கள் தங்களது பணத்தையும், நேரத்தையும் கொடுத்து சினிமா பார்க்கின்றனர். அதற்கான பொறுப்புணர்வு படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டும்.
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சொல்லும்போது.. ‘சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. சினிமா வெறும் பணத்திற்கானது அல்ல.. அது மிகப்பெரிய பொறுப்பு.
என் அப்பாவை நினைத்தே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை எழுதினேன். என் குடும்பத்தினரே படம் போர் அடிக்கிறது என்றார்கள்.
ஆனால் அந்தப் படத்தை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு படத்தின் கலெக்ஷனை வைத்து பாக்ஸ் ஆபீஸ் வசூலை வைத்து அந்த படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ரசிகர்களே கலெக்சனை பற்றி விவாதிப்பது வருத்தமளிக்கிறது” என்று பேசினார் விஜய் சேதுபதி.
I don’t like my acting.. My family doesn’t like that film – Vijay Sethupathi