தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஷாலின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையின் ஒரு பிரிவு (ஜிஎஸ்டி) அதிரடி சோதனை நடத்தியது.
சோதனையின் பின்னர் அதிகாரிகள் விஷாலுக்கு சம்மன் அனுப்பினர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் :ரூ. 51 லட்சத்தை அரசு கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும்.
அப்படி செலுத்த தவறியதால் இந்த தொகையை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் உடனடியாக கட்ட வேண்டும்.
என்றாலும் இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக வருகிற 27ம் தேதி சென்னையிலுள்ள வருமானவரித்துறை அலுவலத்தில் ஆஜராக வேண்டும்.
அப்போது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரி தொடர்பான கணக்கை எடுத்து வர வேண்டும்.
என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஷால் பேசியதாவது…
மெர்சல் பட விவகாரத்தில் ஒரு சிலருக்கு எதிராக கருத்துக்களை கூறியிருந்தேன்.
அதற்காக இந்த சோதனை நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஒரு வேளை உள்நோக்கத்துடன் நடந்திருந்தால் அதை நான் சந்திப்பேன்.
நான் நேர்மையாக தொழில் செய்து முறையாக வரி கட்டுகிறேன். அதனால் எந்த பிரச்சினைகளையும் என்னால் எதிர்க்கொள்ள முடியும்.” என தெரிவித்தார் விஷால்.
இதனிடையில் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யும் தவறுகளை எங்கள் விஷால் தட்டிக்கேட்டால் அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறீர்களா? என அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் அடித்துள்ளனர்.
I am paying Tax regularly so I can face anything says Vishal