‘சினிமா ஸ்டார் என்பதில் எனக்கு பெருமையில்லை…’ – ரஜினி ஓபன் டாக்

‘சினிமா ஸ்டார் என்பதில் எனக்கு பெருமையில்லை…’ – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் சினிமாவை விட அதிகம் நேசிப்பது ஆன்மிகத்தைதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது…

நான் ஒரு சினிமா நட்சத்திரம். ஆனால் ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதை விட, நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

பணம், பேர், புகழ் என ஒரு பக்கம் வைத்து மற்றொரு பக்கம் ஆன்மிகத்தை வைத்தால் நான் ஆன்மிகம் பக்கம்தான் போவேன்.

ஆன்மிகத்திற்கு அவ்வளவு பவர் இருக்கு. அதனால்தான் அந்த பவரை நான் விரும்புகிறேன்.

ஒரு விருந்தாளி நம் வீட்டிற்கு வருகிறார் என்றால் நாம் வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவோம்.

அதுபோல் கடவுள் என்கிற விருந்தாளி வர நம் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.” என்று பேசினார் சூப்பர் ஸ்டார்.

I am not proud to say that i am an actor says Rajinikanth

‘என் முதல் குரு அண்ணா சத்தியநாராயணாதான்..’ – ரஜினி பேச்சு

‘என் முதல் குரு அண்ணா சத்தியநாராயணாதான்..’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini his brother sathya narayananஒரு நடிகரின் படங்களை மட்டுமே ரசிகன் விரும்புவதில்லை.

அதை மீறி நடிகரின் நல்லொழுக்கம், உண்மை, உழைப்பு, எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றையும் நேசிப்பான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகளவில் மதிப்பு இருக்க இவைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
அதுபோல் ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் ரஜினிகாந்த்.

இவர் தனது ராகவேந்திரா மண்டபத்தில், தன்னுடைய குருவின் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அதில்…

“பல பிறவிகளை எடுத்த பின்னரே நாம் மனிதப்பிறவியை அடைந்துள்ளோம்.
இது ஒரு அபூர்வமான பிறப்பு.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? கடவுள் யார்? நம்முடைய ஆத்மா யார்? என்ற கேள்விகள் நம்மில் எழுவது கடினம்.

ஆனால் அந்த கேள்விகள் வந்தபின்னர் அதற்கான விடை தருபவர்தான் குரு.

குரு வந்த பின்னர் அவரின் அருள் கிடைப்பது அபூர்வம். அதை விட அவரின் போதனைகள் கிடைப்பது அரிது.

இவையனைத்தும் கிடைத்தும் அவன் நிராகரித்தால் அவன் பைத்தியக்காரன்.

எனது முதல் குரு என் அண்ணன் சத்தியநாராயணன்.

நான் ஆன்மிகத்தில் ஈடுபட அவர்தான் காரணம்.

ராமகிருஷ்ணா பரமஹம்சர் என்னுடைய 2வது குரு.

ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன்.

ராகவேந்திரா ஆசிரமத்தில் பக்தியை கற்றுக்கொண்டேன்.

அதன்பின்னர் ரமண மகரிஷியிடம் நான் யார் என்று கேள்வி எழுப்புவதை கற்றுக்கொண்டேன்.

மேலும் தயானந்த சரஸ்வதியிடம் சமூக பிரச்சனைகளை தெரிந்துகொண்டேன்.

வேதத்தில் உள்ள சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டேன். சச்சிதானந்தர்தான் எனக்கு உபதேசம் செய்தவர்.” என்று பேசினார் ரஜினிகாந்த்.

rajini team

‘குழப்பத்தில் இருப்பவர்களே என்னை குழப்பவாதி என்கிறார்கள்’ – ரஜினி

‘குழப்பத்தில் இருப்பவர்களே என்னை குழப்பவாதி என்கிறார்கள்’ – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speechஎந்தவொரு துறையும் நாம் நேசித்தால் மட்டுமே, அந்த துறையில் வெற்றிப்பெற முடியும்.

அதுபோல் சினிமாவை நேசிப்பவர்களால் மட்டுமே அந்த துறையில் வெற்றிக் காண முடியும்.

ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவை தான் வெறுத்துவிட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதில் தற்போது வரை தொடர தான் நேசிக்கும் பாபாதான் காரணம் என்றார்.

ஆன்மிக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது…

சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஒதுங்கிய போது. அமெரிக்கா செல்ல நேர்ந்தது.

அப்போது பாபாஜி பற்றிய பத்தகத்தை படித்தேன்.

என்னை அறியாமல் ஏதோ ஒரு ஒளி என்னுள் பாய்வதை உணர்ந்தேன்.

ஆனால் அது கண்களுக்கு தெரியவில்லை. என்னுள் சில மாற்றங்கள் நடைபெற்றது.

சினிமா வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஆன்மிகத்தை சினிமாவில் நிச்சயம் சொல்லமுடியும்.

அப்படி சொன்னால் நிறைய பேரை அது சென்றடையும் என்றார்கள்.

அதன்பின்னரே நானே கதை எழுதி, பாபா படத்தை தயாரித்தேன்.

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், பாபாவினால் யாரும் நஷ்டமடைய கூடாது என்பதால் பணத்தை திருப்பி கொடுத்தேன்.

இவரு என்ன திடீரென இமயமலை செல்கிறார். குழப்புகிறார், இவர் குழப்பவாதியா என்று சிலர் நினைக்கலாம்.

அவர்கள் குழப்பத்தில் இருப்பதால் என்னை குழப்பவாதி என்று நினைக்கிறார்கள்.” என்று பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

கௌதமி போனா என்னா? அதான் ஆஷா சரத் இருக்காரே…

கௌதமி போனா என்னா? அதான் ஆஷா சரத் இருக்காரே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gauthami and asha sarathகமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீஎண்ட்ரி கொடுத்தார் கௌதமி.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆஷா சரத் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதைக்கு நாம் சொல்லப்போகும் விஷயத்தில் கமலை தவிர மற்றவர்களுக்கு சம்பந்தம் உண்டு.

(நீங்க என்ன நினைச்சிங்களோ தெரியாது பாஸ்)

கௌதமி நடிக்க ஒப்பந்தமாகி விலகிய ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் ஆஷா சரத்.

மோகன்லால் தயாரித்து நடித்த ‘பரதேசி’ படத்தை இயக்கியவர் பி.டி.குஞ்சு முகம்மது.

இவர் இயக்கவுள்ள படம்தான் ‘விஸ்வாசபூர்வம் மன்சூர்’.

இதில்தான் ஆஷா சரத் நடிக்கிறார்.

அதுபோல் மற்றொரு கேரக்டரில் இருந்து ஸ்வேதா மேனன் விலக, அவருக்கு பதிலாக ஜரீனா வஹாப் நடிக்கிறாராம்.

தனுசுடன் நடிக்க ஆசைப்படும் ‘செம போத ஆகாத’ மிஷ்டி

தனுசுடன் நடிக்க ஆசைப்படும் ‘செம போத ஆகாத’ மிஷ்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and mishtiஅதர்வாவின் செம போத ஆகாத படத்தில் நாயகியாக நடிப்பவர் பெங்காலி நடிகை மிஷ்டி.

இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் தனுசுடன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.

இதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறாராம் இந்த மிஷ்டி.

வாழ்த்துக்கள் அம்மணி.

‘இந்த விஜய்க்கு பதிலாக அந்த விஜய் நடிக்கிறார்’… விஜய்சேதுபதி ஓபன் டாக்

‘இந்த விஜய்க்கு பதிலாக அந்த விஜய் நடிக்கிறார்’… விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஜீவா சங்கர் எழுதி இயக்கியுள்ள எமன் படத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் படக்ழுகுழுவினருடன் இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு பேசும்போது எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் இவரிடம்தான் தெரிவித்தாராம்.

ஆனால் இவரிடம் கால்ஷீட் இல்லாததால், அதன்பின்னர்தான் அந்த வாய்ப்பு விஜய் ஆண்டனிக்கு சென்றதாம்.

விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள் என்றும் வித்தியாசமான கதைகளை எப்போதும் தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் விஜய்சேதுபதி.

More Articles
Follows