தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஞாயிறு அன்று நவம்பர் 17ஆம் தேதி கமல் 60 விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி கலந்துக் கொண்டு பேசினார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
அவர் பேசும்போது அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட வேண்டும். அதுவே தமிழகத்திற்கும் மக்களும் நல்லது என பேசியிருந்தார்.
அந்த பேச்சு தற்போது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியும் கமலும்.. (தனி தனி மீட்டிங்) தமிழக மக்கள் நலனுக்காக நாங்கள் இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து எஸ்ஏசி அவர்கள் சற்றுமுன் பேசியதாவது…
கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், தற்போது மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
I am happy Class Kamal and Mass Rajini joining for politics says SAC