தன் மனைவியை விட விஜய்யை ரசிப்பதாக கூறி அசிங்கப்பட்ட சாந்தனு

தன் மனைவியை விட விஜய்யை ரசிப்பதாக கூறி அசிங்கப்பட்ட சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I admire Vijay more than my wife Fans troll Shanthanus tweetவிஜய்யின் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு என்பது அனைவருக்கும் தெரியும்தானே.

இவர் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, அதில் தன் மனைவியை விட அதிகமாக விஜய்யை ரசிப்பதாக கருத்தை பதிவிட்டார்.

நாமும் அந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

சில மணி நேரங்களில் சாந்தனு அந்த பதிவை நீக்கிவிட்டார்.

ஆனாலும் அந்த பதிவை கண்ட சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு சாந்தனுவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

மனைவியை விட விஜய்யை ரசிக்கிறாரா சாந்தனு? ஓ அவரா இவர்? என ஒருமையில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

விஜய், சாந்தனு மற்றும் பல அசிங்கமான படங்களை பதிவிட்டு #என்WifeAhகூடஇவ்ளோ_ரசிச்சு_பாக்கல என ட்ரெண்ட் செய்துவிட்டனர்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நடிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது வெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். இல்லையென்றால் இதுபோல்தான் அவமானப்பட வேண்டும்.

I admire Vijay more than my wife Fans troll Shanthanus tweet

vijay and shanthanu family

சர்கார் படத்திற்காக லாஸ் வேகாஸில் விஜய்யின் இன்ட்ரோ சாங்

சர்கார் படத்திற்காக லாஸ் வேகாஸில் விஜய்யின் இன்ட்ரோ சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar Intro song will be shoot in Las Vegas Cityஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை, அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மாகாணத்தில் படமாக்கவுள்ளனர்.

அடுத்த ஜூலை மாத இறுதியில் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.

Vijays Sarkar Intro song will be shoot in Las Vegas City

சொன்னதை செய்யாத விஜய்; சர்கார் மீது சரமாரி தாக்கு..!

சொன்னதை செய்யாத விஜய்; சர்கார் மீது சரமாரி தாக்கு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijay*சர்கார்* படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் உள்ளது.

ஆனால், இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின.

இந்த நிகழ்ச்சியில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

“சினிமாவில் குடிப்பதற்கும், புகை பிடிப்பதற்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.

எங்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

அவருடைய வேண்டுகோளை, விஜய்யும் ஏற்றுக் கொண்டார்.

“மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான்.

அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

என்னுடைய நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில், இரண்டு வேடங்களில் நடித்தேன்.

அதில், கெட்டவன் கதாபாத்திரமும் ஒன்று.

அந்தக் கதாபாத்திரம் கெட்டவன் என்பதைக் காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்தார்.

இறுதியில் அவன் திருந்துவதைக் காட்டுவதற்காகத்தான் சிகரெட்டைத் தூக்கி எறிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக் கூடத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்று கூறினார் விஜய்.

ஆனால் இப்போது சர்கார் பட போஸ்டரில் அவர் புகைப்பிடிப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பெரியார் குத்து பெயரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிம்பு வாய்ஸ்!

பெரியார் குத்து பெயரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிம்பு வாய்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

periyar kutthu songரமேஷ் தமிழ்மணி இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ளது ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பம்.

இந்த பாடலை சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

இந்த பாடலின் முன்னோட்டமாக 45 நொடிகள் நிறைந்த ஆல்பத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

இப்பாடலின் வரிகள் சமீப கால அரசியலை தோலுரிக்கும்படியாக அமைந்துள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.

முழு பாடலையும் கேட்க ஆவலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு மேலாக அரசியல்வாதிகள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் இப்பாடல் வெளிவர உள்ளது.

தீபன் பூபதி இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.

சூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்

சூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 37கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விரைவில் சூர்யா நடிக்க உள்ளார்.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில்,
இப்படத்தின் மற்ற இரண்டு கேரக்டர்களில் சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா

நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

stun sivaபல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன்ட் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

கோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, “முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது.

ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார்.

அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிக்கையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான கோலி சோடா 2, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வரவேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.

More Articles
Follows