தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நந்தா & பிதாமகன் படங்களுக்கு பிறகு இயக்குநர் பாலா உடன் சூர்யா மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த படம் சூர்யாவின் 41-வது படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் ட்ரெண்ங்டில் இருக்கும் கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகை மமிதா பைஜூவும் படத்தில் நடிக்கவுள்ளனர்.
மார்ச் 28 முதல் படப்பூஜையுடன் கன்னியாகுமரியில் ஷூட்டிங் தொடங்கியது.
இந்த நிலையில் இன்று சற்றுமுன் சூர்யா 41 சூட்டிங் நிறுத்தம் எனவும் நடிகர் சூர்யா உடன் இயக்குனர் பாலா வாக்குவாதம் எனவும் தகவல்கள் பரவியது.
ஆனால்… மேற்படி செய்தி முற்றிலும் தவறானது. பாலா-சூர்யா கூட்டணியின் முதல் கட்டப் படப்பிடிப்பு, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில், மிகுந்த புரிதலுணர்வுடன் நடைபெற்று திட்டமிட்ட தேதியில் முடிந்தது.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் துவங்குகிறது” என்று படத்தின் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை பிஆர்ஓ தரப்பில் உறுதி செய்துள்ளனர்.
Suriya 41 movie dropped? Here’s every thing you need to know