சென்னைக்கு வருவோர் தங்கள் ஆபிஸ் மூலமாக இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.; முக்கியமான கன்டிசன் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.

கடந்த ஓரிரு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற நிறைய சிரமங்கள் உள்ளது.

குறிப்பாக சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்கள் மீண்டும் சென்னை வர இ-பாஸ் பெற வேண்டும்.

முக்கியமாக பஸ் போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது.

சிலர் கொரோனா தொற்று பயம் காரணமாக கார் & பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது…

கொரோனா தொற்று தற்போமைய சூழலில் முழு தளர்வு என்பதற்கு வாய்ப்பில்லை.

சென்னைக்கு வருவதற்கான இ-பாஸ் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தொழிலாளர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.

பணியாளர்கள் சென்னைக்கு வந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து கொடுத்தால்தான் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்” என கூறினர்.

பெற்றோரே சத்துணவு முட்டையை வாங்கி கொள்ளலாம்..; நாப்கின் எப்படி கொடுப்பீங்க..? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடெங்கிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

எனவே தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல் உள்ள முட்டைகளை அவர்களின் பெற்றோர் மூலமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மெட்ராஸ் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பாக இருக்காது.

எனவும், முட்டை கொள்முதல் செய்வதிலும் சில இடர்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிவந்த முட்டைகள் ஊரடங்கால் தடைபட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர் நீதிபதிகள்.

அதன்படி மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என தெரிவித்தனர்.

முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா போன்றவற்றை அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் எப்படி வழங்குவது? என்பதையும் அரசு திட்டமிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நண்பர்கள் தினத்தை கொண்டாடிய விஜய்..; தளபதிக்கு தங்க மனசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பர்கள் தினம் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நண்பர்கள் வெளியில் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயது நண்பர்களுடன் நேற்று வீடியோ காலில் பேசியுள்ளார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு..; ஸ்டாலின் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்… புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்தை சேர்த்திருப்பது வேதனை அளிக்கிறது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!

இவ்வாறு முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ அட்டை..; இது கொரோனாவை கொல்லுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை முதல் பணக்காரன் வரை எவரையும் மிச்சம் வைக்காமல் போட்டு தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

நாம் எவ்வளவு தான் பாதுகாப்புடன் விழிப்புணர்வு உடன் இருந்தாலும் சில நேரம் நம்மையே தொற்றிக் கொள்கிறது.

அமித்ஷா முதல் அமிதாப் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெல்ல மெல்ல குணமடைந்து வருகின்றனர்.

அண்மையில் தன்னை கொரோனா தொட்டுவிட்டுச்சென்றது என்றார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஆனாலும் தற்போது பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ என்ற பெயரில் ஜப்பான் நிறுவன அட்டையை தன் கழுத்தில் தொங்கவிட்டு வருகிறார்.

இந்த அட்டையானது 1 மீட்டர் சுற்றளவில் காற்றில் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த அட்டைக்குள் குளோரின் டை ஆக்ஸைடு நிரப்பப்பட்டுள்ளது.

முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றுடன் இந்த அட்டை ஒரு கூடுதல் பாதுகாப்பு என சொல்லப்படுகிறது.

அமேசான் உள்ளிட்ட இணையதளத்தில் இந்த அட்டை ₹ 150 முதல் கிடைக்கிறதாம்.

இந்த அட்டை கொரோனாவை கொல்லுமா.? என்பதுதான் புதிராகவே உள்ளது.

அஜித் கேட்டாரா? அவர விட 5 வயசு எனக்கு கம்மிதான்..; கிழவின்னு சொன்ன தல ரசிகரை கிழித்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ட்வீட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இவரை அஜித் ரசிகர்கள் அடிக்கடி வம்புக்கு இழுப்பது வழக்கம். அவரும் பதிலடி கொடுப்பார்.

இந்த நிலையில் அஜித் டிபி வைத்த ஒரு ரசிகர்… கஸ்தூரி பிரபுவுடன் நடித்த பழைய திரைப்பட வீடியோவை குறிப்பிட்டு கஸ்தூரியை விமர்சித்திருந்தார்.

இது நம்ம கிழவி கஸ்தூரி தானே.. அந்த காலத்துல சூப்பர் ஃபிகரா இருந்திருப்பா போல… என கமெண்ட் செய்துள்ளார்.

அதைப் பார்த்த கஸ்தூரி… “எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்?

இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதில் காமெடி என்னன்னா, கஸ்தூரி அஜித்தைவிட 5 வயது குறைவானவர். ஹய்யோ, ஹய்யோ” என கிழித்துவிட்டார் கஸ்தூரி.

More Articles
Follows