ஹவுஸ் ஓனர் சொல்லியும் கண்டுக் கொள்ளாத சிந்துபாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’.

கடந்த வாரம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பாகுபலி 2 படத்தின் விநியோகம் சம்மந்தமாக 18 கோடி ரூபாயை சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படம் வெளியாகவில்லை!

தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து ‘சிந்துபாத்’ படம் இன்று ஜீன் 27ஆம் தேதி வெளியாகிறது.

இத்துடன் நாளை ‘யோகி’ பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘நட்சத்திர ஜன்னலில்’, ‘ஜீவி’, ‘காதல் முன்னேற்ற கழகம்’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் சேதுபதியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து டுவீட் போட்டார்.

”பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்” என்று பதிவிட்டார்.

ஆனால் அவற்றை எல்லாம் சிந்துபாத் கண்டுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

நேற்று ஜுங்கா & சீதக்காதி..; இன்று சீக்குபாத்.. என்னாச்சு மக்கள் செல்வன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதத்திற்கு ஒரு படம் அல்லது 2 மாதத்திற்கு ஒரு படம் என தமிழக ரசிகர்களுக்கு விருந்தளித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இவரது ஓரிரு படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில படங்கள் கடுமையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

சென்ற வருடம் 96, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் வெற்றியை பெற்றாலும் ஜீங்கா மற்றும் சீதக்காதி படங்கள் மோசமான விமர்சனங்கள் பெற்றது.

அதுபோல் இந்தாண்டில் ரஜினியின் பேட்ட இவருக்கு கைகொடுத்த்து. ஆனால் சூப்பர் டீலக்ஸ் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இந்த நிலையில் இன்று வெளியான சிந்துபாத் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

மக்கள் செல்வன் இனியாவது கதையிலும் திரைக்கதையிலும் கவனம் செலுத்துவாரா? என்பதை பார்ப்போம்.

Vijay Sethupathis Sindhubaadh getting negative reviews

தீராத சிக்கலில் சிந்துபாத்.; காலை 8 மணி காட்சிகள் ரத்தானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‘சிந்துபாத்’.

யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்றது.

சென்னையில் சில அரங்குகளில் காலை 8 மணி காட்சியும் இருந்தன.

ஆனால் காலை காட்சிகள் ரத்தானது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

ஆனால் 10 மணி மற்றும் 11 மணி காட்சிகள் சில அரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது

Vijay Sethupathis Sindhubaadh special shows cancelled

விஜய்சேதுபதி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் பேட்ட படத்தில் முக்கியமான ரோலில் அதாவது சிம்ரனின் மகளாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ்.

மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.

இதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் திடீரென கமிட் ஆகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் முதலில் நாயகியாக அமலா பால் நடிக்கவிருந்தார். தற்போது அவர் விலகியதால் மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படம் கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் ரீமேக் ஆக உருவாகவுள்ளது.

இயக்குனர் நர்த்தன் என்பவர்தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிம்பு ஒரு நெகட்டிவ்வான ரோலில் நடிக்கிறாராம்.

இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஓர் அழகான கூலிங் கிளாசை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இளையராஜா இசையில் ”முன்பதிவு”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு ‘. இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார்.இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர் .கதை திரைக்கதை சார்ந்து தீவிரமாக இயங்கிய அவர் நண்பர்கள் மூலம் மலையாளப் பக்கம் போய் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் .சென்ற ஆண்டு ‘ திரைக்கு வராத கதை’ என்றபடம் தமிழில் வந்தது. அது மலையாளத்தில் ‘கேர்ள்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. அதில் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
துரைபாண்டியன் இயக்கும் முதல் படம் தான் ‘முன்பதிவு’.டைரக்டர் துளசிதாஸ் எனது நண்பர் அவரிடம் பல படங்களுக்கு நான் பணிபுரிந்துள்ளேன்.

படத்தின் கதை என்ன என்ற போது, “இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை பாலினக் கவர்ச்சி என்கிற பிரச்சினைதான். பால்யப்பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப்புரிந்து கொண்டு தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் முன்பதிவு .இந்தக் கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது.

கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இளையராஜா இசை அமைக்கச் சம்மதித்ததும் படத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது.” என்கிறார் இயக்குநர் துரைபாண்டியன்.

இளையராஜா ஒரு பாடலைப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். ஜூன் 26ஆம் தேதி மற்ற பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளன.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார் .தமிழ் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கூத்துப்பட்டறைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணி பற்றியவர். எடிட்டிங் பீட்டர் பாபியா.

‘முன்பதிவு’ விரைவில் படப்பிடிப்பு .

More Articles
Follows