ஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசி, சினேகா ஆகியோர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வெளியான படம் ‘வேலைக்காரன்’.

ஆர்.டி.ராஜாவின் ‘24AM STUDIOS’ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் படமாக அமைந்தது.

‘வேலைக்காரன்’ வெளியாகி இன்று 50-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி தொடர்ந்து 50 நாட்கள் ஓடுவது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன் வெளியாகிய ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களும் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படங்களாக அமைந்தன.

எனவே இத்துடன் 3 வெற்றிகளை கொடுத்து ஹிட்டடித்துள்ளார்.

2.0 / காலா.; பர்ஸ்ட் ரிலீஸ் எது..? ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனின் உள்ள தனது இல்லத்தின் அருகே காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரை நிறுத்தி செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அப்போது அவரின் அரசியல் கட்சி பற்றி கேட்டனர். அதன்பின்னர் ‘2.0’ படம் மற்றும் காலா படத்தின் ரிலீஸ் தேதிகள் குறித்தும் எது முதலில் வெளியாகும் என்றும் கேள்விகளை கேட்டனர்.

ஏப்ரல் 27ஆம் தேதி 2.0 படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை 2-3 நாட்களில் அறிவிப்போம்” என்றார்.

2point0 or Kaala Which movie will release first in 2018

அரசியல் பணியில் கமலுடன் இணைவீர்களா?.; ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

சிஸ்டம் சரியில்லை என்றீர்களே அது தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை நாடு முழுவதுமா? என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், “தமிழ்நாட்டில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறேன்” என்றார்.

மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்தார்.

Rajini speaks about his alliance with Kamal in Politics

இனிமேல் ஆக்‌ஷன் ரோலில் ரசிகர்களை மிரட்டுவேன்.. : நிகிஷா படேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல்.

தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ மற்றும் ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா.

இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.

படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது.

அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன்.

இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என கூறுகிறார் நிகிஷா.

Actress Nikesha Patel says about her action movies

விஜய் ஜெயித்த கதை-யை புத்தகமாக வெளியிட்டார் சபீதா ஜோசப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.

இந்நிலையில், விஜய் பற்றிய புத்தகம் ஒன்று ‘விஜய் ஜெயித்த கதை’ என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்த புத்தகத்தை பத்திரிகையாளரும எழுத்தாளருமான சபீதா ஜோசப் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் 1992-ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணங்களை பற்றி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Jeitha Kathai book written by Sabitha Joseph

த்ரிஷா விலகியதால் சாமி ஸ்கொயர் கதையில் அதிரடி மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியான படம் சாமி.

சுமார் ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டதட்ட 6 மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு அப்போது கொடுத்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தையும் ஹரி இயக்க விக்ரம் நடிக்கிறார்.

த்ரிஷாவுடன் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஆனால் தன் கேரக்டரில் வலுவில்லை என்பதால் த்ரிஷா விலக, இப்போது படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து த்ரிஷா மீது சம்பந்தப்பட்ட சங்கங்களில் புகார் அளித்தனர்.

ஆனால் த்ரிஷா தன் முடிவில் உறுதியாக இருக்க, சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன.

எனவே படத்தின் ஆரம்பத்தில் த்ரிஷா இறந்து விடுவது போல் அவரது போட்டோவை காட்டி விடலாமா? அல்லது வேறு நாயகியை வைத்து படப்பிடிப்பை நடத்தலாமா? என படக்குழு கன்ப்யூஸனில் இருக்கிறதாம்.

Trisha quit from Saamy Square So the story may be changed

More Articles
Follows