அனைவரையும் கவரும் ‘நட்பே துணை’ பட ‘சிங்கிள் பசங்க’ பாடல்

அனைவரையும் கவரும் ‘நட்பே துணை’ பட ‘சிங்கிள் பசங்க’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hiphop Aadhi is back to enthrall all Single Pasanga nowதன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் ‘கேரளா சாங்’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.

ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கதை, திரைக்கதை மற்றும் வசனம் – ஸ்ரீகாந்த் & தேவேஷ் ஜெயச்சந்திரன், பாடல்கள் – ‘ஹிப்ஹாப்’ ஆதி & அறிவு, கலை – குருராஜ், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பு – என்.மணிவண்ணன், நடனம் – சந்தோஷ் & சிவரோக் சங்கர், காட்சி அமைப்பு – சனத், உடைகள் – ப்ரீத்தி நாராயணன், டிசைன்ஸ் – அமுதன் ப்ரியன் மற்றும் மற்ற தொழில்நுட்ப குழு.

Hiphop Aadhi is back to enthrall all Single Pasanga now

ரஜினி-கமலின் பாராட்டை பெற்ற மாரீஸ் விஜய்க்கு சர்வதேச பெருமை

ரஜினி-கமலின் பாராட்டை பெற்ற மாரீஸ் விஜய்க்கு சர்வதேச பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Marees Vijay got world level recognition‘விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய்.

குறிப்பிட்டு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர், சமீபத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார்.

இவர் இசையில் வில்லவன் எனும் மலேசிய தமிழ் படம் உருவானது.

இப்படத்தின் டிரெய்லர் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கிரிக்கெட் போட்டியின்போது பிரம்மாண்ட அரங்கில் வெளியிடப்பட்டது.

இதைப்பார்த்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் படக்குழுவினரை பாராட்டினார்கள்.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

வெளியான சில நாட்களிலேயே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக மாரீஸ் விஜய்யின் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவரது இசைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெறும் சினி பீஸ்ட் மலேசியா விருது 2019 – ல் சிறந்த சர்வதேச இசை அமைப்பாளர் பட்டியலில் வில்லவன் படத்திற்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பெருமையை இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் பெற்றிருக்கிறார்.

இந்த விருது விழா ஜனவரி 31ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Maris Vijay got Best International Music Director award

Music composer Maris Vijay got Best International Music Director award

எனக்கு உள்ளூரு; நேத்ராவுக்கு வெளிநாடா? வெங்கடேஷிடம் சரத்குமார் கேள்வி

எனக்கு உள்ளூரு; நேத்ராவுக்கு வெளிநாடா? வெங்கடேஷிடம் சரத்குமார் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar speech about Venkatesh on Nethra audio launchஇயக்குனராக ஜொலித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தற்போது சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தயாரித்து, இயக்கியுள்ள படம் நேத்ரா.

இதில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

படம் தயாராகி நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படத்தை நடிகர் தியாகராஜன் தனது ஸ்டார் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார்.

வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கே.பாக்யராஜ், சரத்குமார், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, வசந்தபாலன் உட்பட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துக் கொண்ட சரத்குமார் பேசியதாவது..

“சொன்ன தேதிக்குள் ஷூட்டிங்கை முடிக்கும் சில இயக்குநர்களில் வெங்கடேஷும் ஒருவர். இந்தப் படம் முழுக்க முழுக்க கனடாவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

என்னை வைத்துப் படம் எடுக்கும்போது மட்டும் உள்ளூரிலேயே படம் எடுத்தார்’’ என பேசினார்.

இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:

எனக்கு ஒரு திகில் படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காகவே இந்த கதையை தயார் செய்தேன்.

கதை வெளிநாட்டில் நடப்பதால் கனடா நாட்டில் 95 சதவிகித படப்பிடிப்பு நடந்தது. திகில் படமாக இருந்தாலும், காமெடி செண்டிமென்ட் கலந்து உருவாகி உள்ளது.

தற்போது படத்தை தியாகராஜன் வெளியிடுகிறார். பிரசாந்த் இல்லாத ஒரு படத்தை இவர் வெளியிடுவது இதுவே முதல் முறை. அதற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் வருகிற பிப்ரவரி 8ந் தேதி படம் வெளிவருகிறது. என்றார்.

Actor Thiagarajan bagged theatrical rights of Nethra movie

Sarathkumar speech about Venkatesh on Nethra audio launch

nethra movie audio launch

 

நமீதா இருக்கும்போது அவர் கணவருக்கு எப்படி தான் மாலை போட மனசு வந்துச்சோ..? : பாக்யராஜ்

நமீதா இருக்கும்போது அவர் கணவருக்கு எப்படி தான் மாலை போட மனசு வந்துச்சோ..? : பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bhagyarajஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் “அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்” பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் “கபடி வீரன்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைக்கதை மன்னன் இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் , நான் இப்பொழுது ஒரு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன். இங்கு வந்த போது அதிர்ச்சி இல்லை. மேடையில் கூப்பிடுவதற்கு முன் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில்லை , நமீதா வந்தபோது கூட அதிர்ச்சி இல்லை. மேலே வந்தபோதுக் கூட அதிர்ச்சி இல்லை , ஆனால் என் அருகே நமீதாவின் மச்சான்ஸ் அதாங்க , நமீதாவின் வீட்டுக்காரர் வீரா , மேடையில் என் அருகில் அமர்ந்த போது, பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டேன். காரணம், என்னவென்று யாருக்காவது தெரியுமா? வேறொன்றுமில்லை, நமீதாவின் மச்சான்ஸ் வீரா., என்னிடம் இந்த மேடையில் அருகில் அமர்ந்து பேசும் போது , மலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கிறேன் . அடுத்த மாசம் தான் கோயிலுக்கு போறேன் என்ற போது எனக்குஅதிர்ச்சி ஆகிவிட்டது .எப்படி ? இப்படி ? கஷ்டமில்லே ..? முடியாதே , ரொம்ப கஷ்டமாச்சே! இப்படி ,ஒரு அழகிய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு நாள் கணக்கில் விரதமிருப்பது ரொம்ப கஷ்டமாச்சே … முடியாதே ….என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த யோசனையே ,பெரிய அதிர்ச்சி ஆகிவிட்டது. அதனால இங்கு , வந்ததிலிருந்து வீராவை ஆச்சர்யமாக பார்த்து வருகிறேன்… அந்த அதிர்ச்சி ஆச்சர்யத்தில் இருந்து மெல்லத் தான் மீள முடியும் .எனவே வீராவிற்கு முதல்ல என் வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு ., இதே சீக்குவன்ஸ் என் ஒரு படத்துலக் கூட இருக்கும். நமீதா மாதிரி ஒரு பெண்மணி அந்தப் படத்துல சும்மா தேரு மாதிரி வருவாங்க வயசான ரெண்டு டிக்கெட்டுங்க அந்தம்மா கிராஸ் ஆகற வரைக்கும் அப்படியே பார்த்துட்டு இருப்பாங்க, அப்புறம் , அவங்க குள்ளாற ., எப்படிய்யா ? இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி , விட்டுட்டுட்டு அவன் துபாய்ல போய் கிடக்குறான் ? எப்படிய்யா அவனால முடியுது ? நம்மளை எல்லாம் பக்கத்து ஊருல வேலைக்காக கொண்டு போய்விட்டாக் கூட மதியம் சாப்பாட்டிற்கோ ., இல்லை இராத்திரி சாப்பாட்டிற்கோ வீட்டிற்கு வந்துடுவோம் … அவன் எப்படி வருஷ கணக்கில துபாய்ல போய் கிடக்குறான் ? என தங்களுக்குள் ஆராய்ச்சியாக பேசிப் பாங்க … அது அந்தப் படத்து சீனுக்காக வச்சேன். இங்க இவரு மாலை போட்டு வந்து உட்கார்ந்து இருக்கிறதை பார்த்ததும் எனக்கு அந்த சீன் ஞாபகம் மைன்டுக்கு வந்துடுச்சி .

படத்தோட தயாரிப்பாளர் ஏலகிரி அம்மாவுக்கும் , படத்துல , இது அதுன்னு இல்லாம எல்லா பொறுப்புகளையும் எடுத்து தன் தோளில் போட்டுட்டு இருக்கிற நாயகர் அரசு ,அதிரடி அரசு., அவர் கூட ஒர்க் பண்ணிய எல்லோருக்கும் என் வணக்கம் ,வாழ்த்துகள். அப்புறம் இந்தப் படத்தோட பைட் மாஸ்டரையும் பாராட்டணும். இங்க போட்டு காட்டின சீன்களை வச்சி பார்க்கிறப்போ ., படம் முழுக்க ஒரே ஆக்ஷனா தான் மெயினா இருந்தது…. நடிகர்அதிரடி அரசு அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதே மாதிரி டான்ஸ் மாஸ்டரையும் பாராட்டி சொல்லணும்.அவரு ஒரு வேலை பண்ணி யிருந்தார் .என்னன்னா ., எனக்கு வாரிசா ஆகிட்டாரு … எப்படின்னா ? பொதுவா நான் டான்ஸ் ஆடினா ., எக்சர்சைஸ் மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க … அவரு எக்சசைஸையே டான்ஸ் ஆக்கிட்டாரு … ரொம்பவே கிரியேட்டீ விட்டியா ., ஹீரோ கை காலை அப்படி இப்படி அசைக்க சொல்லி ., அதற்கு ஏற்ற மாதிரி பீஜியத்தையும் , மியூசிக்கையும் சிங்க் பண்ணி பாட்டு காட்சிகளை அழகா அமைச்சிருக்கிறார் பாராட்டுகள். ஆனா ., பாட்டு எழுதியிருக்கிற இந்தப் படத்தின் எல்லாமுமான அதிரடி அரசு பாட்டு எழுதும் போது கொஞ்சம் யோசிச்சு எழுதனுங்க .., என்னன்னா , காயத்ரி பாடும் போது “நான் பார்த்த ஆண்களிலேயே நீ வித்தியாசமானவன் … ” அப்படின்னு இருந்துச்சு. பொம்பளைபாடும் போது அப்படி எழுதக் கூடாது அது கேட்டதும் எனக்கு ‘கருக்’குன்னு இருந்துச்சு.
“ஆண்களில் நீ வித்தியாசமானவன்னு இருக்கலாம் .. “. அதுவரைக்கும் ஓ.கே . ஹீரோயின் பேரு டேமேஜ் ஆகுற மாதிரி எழுதக் கூடாது புதுசா பாட்டு எழுத வந்திருக்கீங்க … இனி பார்த்து எழுதுங்க . என்றவாறு பேசினார்.

அவருக்கு முன்னதாக பேசிய நடிகர் டத்தோ ராதாரவி ., நான் நிறைய அட்வைஸ் பண்ணுவேன். ஆனா ,யாரும் கேட்கறதில்லே .இங்க வந்து இருக்கிற பவர் ஸ்டார் சீனிவாசன் ., ஹீரோவா நடிக்கப்போறேன், படம் தயாரிக்கப் போறேன்னப்போ வேண்டாம், காமெடியனா நடிங்க நல்லா இருக்கும்னு எவ்ளவோ சொன்னேன் கேட்கலை … எப்பவுமே நல்லது சொன்னா கேட்க மாட்டாங்க .அதுல சீனிவாசன் ஒரு முக்கியமான ஆளு தேவை இல்லாத பிரச்சினையில எல்லாம் சிக்கி மீண்டு வந்து இப்போ காமெடியனா வலம் வந்துட்டு இருக்கார். காமெடி நடிகரா வளர்ந்துட்டு இருக்கார். இதைத் தான் நான் அப்பவே சொன்னேன் அவரு கேட்கலை. அதனால சில இடங்கள்ல என்னன பார்க்கம கூட போயிடுவார். ஆனா நான் விடமாட்டேன். நமக்கு எல்லாமே பேஸ் டூ பேஸ் தான். சீனிவாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இதை பேசுறேன். அவரு ரொம்ப நல்ல மனசு உடையவர். அவரு ஏமாத்திட்டாருன்னு பல பேரு புகார் சொல்றாங்க .ஏன் ஏமாந்திங்கன்னு யாராவது திருப்பி கேட்கறீங்களா ? அதே மாதிரி ,நம் சினிமா குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது என்றாலும் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். நடிகர் விஷாலிடம் கூட போனில் ஏதாவது முக்கிய பிரச்சினை என்றால் அவ்வப்போது பேசுகிறேன். சிலர் தூண்டி விட்டு ஓடி விடுவார்கள் நான் அப்படி கிடையாது. ஓடி ஒளிவது எனக்குப்பிடிக்காது.

பாருங்க ., சீனிவாசனை பத்திப்பேசினா இவ்ளோ பெரிய டாபிக்ல வந்து நிக்குது.

அது போகட்டும் இந்தப் படத்தின் தயாரிப்புக்கு உறுதுணையா இருந்து , இந்தப்படம் சிறப்பா வர காரணமாயிருந்து இங்க,ஏலகிரி சக்தி அம்மா வந்திருக்காங்க .அந்த அம்மாவை வணங்குங்க ., எல்லா அம்மாவையும் வணங்குங்க .குறிப்பா உங்க அப்பா அம்மாவை வணங்க மறந்துடாதீங்க … அவங்களை கைவிட்டுடாமல் கடைசி வரை கூட வச்சுக்குங்க ., நடிகர் திலகம் வீட்டு பெயர் , அன்னை இல்லம். நடிகவேள் ,கலைஞர், ,புரட்சித் தலைவர் , புரட்சித் தலைவி … அவ்வளவு ஏன் வீடு வரை எல்லோரது வீடுகளுக்கும் எங்களது அம்மாக்களின் பெயரை தான் வைத்திருக்கிறோம் என்றால் பாருங்கள். எனவே நீங்களும் உங்களது பெற்றோரை கைவிட்டு விடக் கூடாது எனக் கேட்டு கொள்கிறேன். என பேசி அமர்ந்தார்.

இவ்விழாவில் ,ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர்தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர், இப்பட இயக்குனர் -நாயகர் அதிரடி அரசு , அறிமுக நாயகி காயத்ரி ..ஜாகுவார் தங்கம் , நமீதா , வீரா , ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்டோரும் பேசினர்.

முன்னதாக ,டத்தோ ராதாரவி ” கபடி வீரன்” படத்தின் பாடல்கள் ஆடியோவை வெளியிட திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை தொகுப்பாளர் அர்ச்சனா அழகான தமிழில் தொகுத்து வழங்க ., பி.ஆர்.ஓ ப்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.

ஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி

ஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and director hariசூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ என 5 படங்களை இயக்கியவர் ஹரி.

இந்நிலையில், ஆறாவது முறையாக இவர்கள் இணைகின்றனர்.

அப் படத்துக்கு ‘யானை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தை, ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

2014-ம் ஆண்டு ரிலீஸான ‘இதுவும் கடந்து போகும்’ படம்தான் ஏவி.எம். தயாரித்த கடைசிப்படம்.

5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது ஏவி.எம்.

‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அதன்பின்னர் ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அதன்பிறகே யானை படத்தில் நடிக்கிறார் சூர்யா.

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakumarபிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறனின் கணவர் மணிமாறன் நேற்று காலமானார் .சுமார் ஓராண்டு காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று பகல் 12 மணிக்கு மறைந்து விட்டார். இந்த இழப்பு இளம்பிறை ஈடு செய்ய முடியாதது. மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணிமாறன் பற்றி நடிகர் சிவகுமார் கூறியது :-

தூத்துக்குடியில் உள்ள APC மஹாலக்ஷ்மி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருந்து, பிறகு அதே கல்லூரியில் தாளாளராக ஓய்வு பெற்றவர் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

இவர் தமிழ் இலக்கியங்களில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், கந்தபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள் என்று அனைவற்றையும் கரைத்து குடித்தவர். கிட்டத்தட்ட 5000 மேடைகளில் இலக்கியங்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார்.

2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும் 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர் இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார். அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார். அவரின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், தூணாகவும் இருந்தவர் தான் அவருடைய கணவர் மணிமாறன்.ஈடு செய்யமுடியாத அந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மனைவி இளம்பிறை மணிமாறனுக்கும் , அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் .

2 Attachments

More Articles
Follows