BREAKING இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்

BREAKING இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rama Gopalanஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலன். அவருக்கு 95 வயதாகிறது.

இவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதியானது.

கடந்த ஆகஸ்டு மாதமும் ராமகோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ராம கோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Hindu Munnani founder Rama Gopalan succumbs to Corona

இதெல்லாம் ரொம்ப டூ மச்..; சிம்பு ரசிகர்களின் வேற லெவல் வம்பு

இதெல்லாம் ரொம்ப டூ மச்..; சிம்பு ரசிகர்களின் வேற லெவல் வம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்காக தங்கள் உடல் எடையை மெய்ண்டெயின் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் கலைஞர்கள்.

ஒரு சிலர் நடிகர்கள் மட்டும் உடல் எடையை கூட்டுவதிலும் ரிஸ்க் எடுப்பார்கள்.

AAA படத்திற்காக தன் உடல் எடையை தாறுமாறாக மாற்றியிருந்தார் சிம்பு.

ஆனால் கொரோனா லாக்டவுன் சமயத்தில் 100 கிலோ எடையிருந்த சிம்பு 21 கிலோ எடை வரை குறைத்து விட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

ஆனால் அது தொடர்பான எந்த போட்டோவும் வெளியாகவில்லை.

ஊரடங்கில் சிம்புவின் உருப்படியான காரியம்.; 100 கிலோவிலிருந்து 21 கிலோ எடை குறைத்தார்

இதனால் சிம்புவின் நியூ லுக்கை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

போட்டோவை ரிலீஸ் பண்ணுங்க என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வலியுத்தியும் வந்தனர்.

ஆனால் மதுரை ரசிகர்கள் வேற லெவலில் போஸ்டர்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுரை சிட்டி STR வெறியர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அதாவது… “உங்களுடைய லேட்டஸ்ட் போட்டோவை வெளியிடுங்கள் ப்ளீஸ் என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்தேவிட்டனர்

மேலும் அதில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புவின் நண்பர்கலான மகத், விடிவி கணேசன், பத்திரிகையாளர் ஆகியோரது போட்டோவையும் போஸ்டரில் அச்சிட்டு அவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அட நீங்க வேற லெவல்தாம்ப்பா…

Madurai STR fans poster

Madurai simbu fans stick posters to release new photo of STR

அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்ட ‘கபடதாரி’..; மூன்றே நாளில் பேக்கப் அப் செய்த தனஞ்செயன்

அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்ட ‘கபடதாரி’..; மூன்றே நாளில் பேக்கப் அப் செய்த தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை
ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘கபடதாரி’ படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து
ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கபடதாரி’.

இவர் வெளியிடும் மற்றும் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதால், ‘கபடதாரி’ படத்திற்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு முடிவடையாமல் இருந்தது.

தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததையடுத்து, ’கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, கடந்த 3 நாட்களில் சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.

அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றியும், 70-க்கும் குறைவான நபர்களை கொண்டும் இந்த மூன்று நாட்கள் படப்பிடிப்பையும்
‘கபடதாரி’ படக்குழு நடத்தி முடித்துள்ளார்கள்.

இதில் கதாநாயகன் சிபிராஜ், ஜே.பி உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள்
படமாக்கப்பட்டது.

வரும் நவம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘கபடதாரி’ குழுவினர், திரையரங்குகள் திறப்பு
குறித்த அறிவிப்பு வெளியான உடன், திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது குறித்து அறிவிக்க உள்ளார்கள்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த்
ராவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை கிரேட்டிவ் எண்டர்டெயின்மெண்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

சைமன் கே கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

Kabadadaari

Kabadadaari movie wraps shooting

எஸ்பிபி பெயரில் நியூ டப்பிங் ஸ்டுடியோ..; டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி முடிவு

எஸ்பிபி பெயரில் நியூ டப்பிங் ஸ்டுடியோ..; டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம்!

டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.

மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.

SPB Radha Ravi

Actor Radha Ravi announced new dubbing studio in the name of SPB

கவுதம் மேனன்-கார்த்திக் சுப்பராஜ்-சுதா கொங்கரா உள்ளிட்டவர்களின் ‘புத்தம் புது காலை’ ரிலீஸ் தேதி இதோ..

கவுதம் மேனன்-கார்த்திக் சுப்பராஜ்-சுதா கொங்கரா உள்ளிட்டவர்களின் ‘புத்தம் புது காலை’ ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புது காலை’ அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.

இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் –

இளமை இதோ இதோ – சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.

அவரும் நானும்/ அவளும் நானும் – கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.

காஃபி, எனி ஒன்? – சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.

ரீயூனியன் – ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மிராக்கிள் – கார்த்திக் சுப்புராஜ் (பேட்ட) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்ட), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.

நிஷப்தம், பென்குயின், பொன்மகள் வந்தாள் போன்ற பல தமிழ் படங்கள் மற்றும் அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்றவற்றின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.

புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்’ போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.

“நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது.

மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

putham pudhu kaalai amazon original movie

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை..; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை..; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி எஸ்.கே யாதவ், 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்குகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்…

● டிசம்பர் 6, 1992 பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படவில்லை.

● மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்கள் வலுவானவையாக இல்லை.

குற்றங்களை நிரூபிக்க அவை போதுமானதல்ல.

● மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டவர்கள் நிகழ்த்திய உரை என்று சிபிஐ ஆதாரமாக வழங்கியுள்ள ஒலிப்பதிவு தெளிவானதாக இல்லை.

● சமூக விரோத சக்திகள் பாபர் மசூதியை இடிக்க முற்பட்டபோது, குற்றம் சாட்டவர்கள் அவர்களைத் தடுக்கவே முயற்சி செய்துள்ளனர் என்று தெரிகிறது.

● நீதிமன்றத்தில் சிபிஐ ஆதாரமாக வழங்கிய காணொளி, படங்கள் , ஒலிப்பதிவுகள் ஆகியவற்றின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்படவில்லை.

புகைப்படங்களின் ‘நெகட்டிவ்’ நீதிமன்றத்தில் வழங்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சேதமாகியிருந்தன.

babri masjid judgement

All acquitted in Babri Masjid 1992 demolition case

More Articles
Follows