தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவுக்கு வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இதை பிரம்மாண்டமாக நடத்தபோவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைபெறுவதாகவும், சங்கத்தில் இருந்த வைப்பு நிதி ரூ.7.5 கோடியை விஷால் முறைகேடு செய்திருப்பதாகவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி, தயாரிப்பாளர் சதீஷ் குமார், என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சங்கத்தில் இருந்த வைப்பு நிதி என்ன ஆச்சு? விஷால் ஏன் ஆவணங்களை கொடுக்கவில்லை?
இளையராஜாவுக்கு ஏன் மூன்றரைக் கோடி ரூபாய் வழங்க வேண்டும்? நிகழ்ச்சியை ஏன் தள்ளி வைக்க கூடாது?
அந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு? உள்ளிட்ட பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் எவ்வளவு வருமானம்? தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கிடைக்கும் என நாளை ஜனவரி 30 அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Highcourt question Producer Council about Ilayaraja 75 event filed case