தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசுகாரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.
அப்போது.. “வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை தெரிவித்தது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத் தொகை என இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவு இட்டது.
இதனையடுத்து நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது.
மேலும் அபராதத் தொகையை ரத்து செய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இத்துடன் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் எனவும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
வரி அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில தினங்களுக்கு முன் இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறையான கருத்துக்களை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
High court orders TN government in Vijay case